Saturday, January 25, 2014
காங்கிரஸ்,பாஜக மற்றும் பிற கட்சிகளிடம் ஏழை இந்தியார்கள் சார்பில் ஒரு கேள்வி?
ஏழ்மையை ஒழிப்பதாகவும் ,
ஏழைகளின் பங்காளனாகவும்
தங்களை கூறிவரும் காங்கிரஸ்,பாஜக மற்றும் தேர்தலில் மக்களை சந்திக்க உள்ள கட்சிகளே
உங்களால் பகிரங்கமாக கூற முடியுமா ?
பார்க்க ...
காங்கிரஸ்,பாஜக மற்றும் பிற கட்சிகளிடம் ஏழை இந்தியார்கள் சார்பில் ஒரு கேள்வி?
http://nanduonorandu.blogspot.in/2014/01/blog-post_25.html
Thursday, January 16, 2014
Thursday, May 21, 2009
வருந்தத்தக்க இந்த முடிவு இப்படித்தான் கிடைத்தது இவர்களுக்கு .
( இந்த கட்டுரை நடுநிலைமையாகவே எழுதப்பட்டது. யாரையும் ஆதாரித்தோ, எதிர்த்தோ அல்ல.
ஆகவே விருப்பு வெறுப்பற்று படிக்கவும். )
அரசியல் அறிவு பெறாதவன் மூடன் -
என நான் எவ்வளவு கூறினாலும்
தங்களுக்கு உள்ள செல்வாக்கு எதனால்
என்ற அறிவு சிறிதுகூட இல்லாமல்
கண்மூடித் தனமாக
தாங்கள் என்ன செய்தாலும்
தொடர்ந்து மக்கள் ஆதரிப்பர்
என்ற ஒரு தவறான கணிப்பில் செயல்படும்
சில, பல காரணங்களினால்
அரசியல் கட்சிகள் என்ற அங்கீகாரத்தில்,
அரசியல் கட்சிகளின் பதவிகளில்
அமர்ந்து அலங்கரித்துக்கொண்டுள்ள
இந்தியாவிலுள்ள
அரசியல் கட்சித் தலைவர்கள்
தவறாக செயல்பட்டாதால் தான்
அவர்கள் அனைவரும் மண்ணைக் கவ்வியதோடு மட்டுமல்லாமல்
அவர்களின் கட்சிகளும் மிகப்பெரிய சரிவை
ஏன்?
வீழ்ச்சியை கொடுத்துள்ளனர்.
நமக்கு ஏன் மக்கள் வாக்களிக்கின்றனர்
என்ற அறிவு சிறிது கூட இல்லாமல் தேர்தலில் ஜெயித்து விடுவோம் என்ற நப்பாசையுடன் மட்டும்
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டதால்தான் இவ்வளவு பெரிய சரிவை பெற்றனர்.
என்னைக் கேட்டால்
ஒரு சில தலைவர்களைத் தவிர இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான
ஏன் அனேகமான அனைத்து கட்சித்தலைவர்களுக்கும்
அரசியல் அறிவே கிடையாது
என்று தான் சொல்வேன்.
அதுதான் சரி என்று இந்தத் தேர்தல் உறுதிபடுத்துகிறது.
மக்களுக்கு நல்லது செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்கு வாக்களித்த மக்கள் எதற்காக
வாக்களித்தார்கள்
என்று உறுதியாக
எந்த தலைவராவது கூறினால் அவருக்கு நான்
வாழ்த்துக்கள் கூறத் தயாராக உள்ளேன்.
அப்படிப்பட்டவர்களை
நான் பாராட்டுவேன்.
எனது பாராட்டும், வாழ்த்தும் அவர்களுக்கு தேவையில்லைதான், ஏனெனில் அவர்களுக்கு வாக்களித்த
மக்களே அவர்களுக்கு தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் எப்படி என்னிடம் பாராட்டும்
வாழ்த்தும் பெற விரும்புவர்.
ஒவ்வொரு தேர்தலிலும்
அலை வீசுகிறது, மழை வீசுகிறது என்று மக்களை திசை திருப்ப நினைத்து தேர்தலில் நிற்கும்
யுக்தியை முதலில் கைவிட்டால் தான் அவர்களால் முழுமையாக மக்களுக்கு சேவை செய்ய முடியும்
என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.
எந்த கட்சித் தலைவருக்குமே தொலைநோக்கு சிந்தனை இல்லையே என்ற வருத்தம் தான் எனக்கு
ஏற்படுகிறது.
தேர்தலை ஷேர் மார்க்கெட் ஆக்கிக் கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான பாதை.
தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் எதை முன்னிருத்தி ஓட்டுக் கேட்க வேண்டும்
என்ற படிப்பினையை இந்தத் தேர்தல் ஓரளவு உணர்த்தியுள்ளது.(சம்மந்தப்பட்டவர்கள் உணல்நுதார்களா
என்றால் இல்லைதான் ,
தோல்வியுற்ற கட்சிகள் கம்யூனிஸ்டுகள் உட்பட பணம் வென்றது, ஓட்டு மிசின் மோசடி எனக் கூறி
மக்களை மடையர்களாக நினைத்து பேசுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஓட்டுப்போட்டேன்.
கேலி செய்கின்றனர் இவர்கள். இவர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டனர். எவ்வளவு வாங்கிக்
கொண்டு போட்டனார் என மக்கள் முணுமுணுப்பிற்கு ஆளாகி, ஓட்டுப்போட பணம் வாங்கு எனத்
தூண்டும் விதத்தில் அமையும் பேச்சுக்கள்.சரியல்ல .
ஜெ. போட்ட ஓட்டு மட்டும் இலைக்கு விழும்.
நான் இலைக்கு போட்ட ஓட்டு சூரியனுக்கு விழும் என்றால் நான் ஏன் நேரடியாகவே சூரியனுக்கு
போடக் கூடாது அடுத்த முறை என அடுத்த முறை
குறைந்த பட்ச மக்களாவது முயற்சி செய்வார்கள்
அல்லது
சூரியனுக்கு போடும் ஓட்டு இலைக்கு விழும் என்ற கணிப்பில் சூரியனுக்குப் போடப்போகிறார்கள்.
உஷார்)
அதில் அவர்அவர்கள் செய்த மிகப்பெரிய தவறுக்கு தரப்பட்ட மதிப்பெண்கள்தான் இந்த தேர்தல்
முடிவுகள்.
இங்குள்ள பெரும்பான்மையான கட்சிகள் கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் இருந்ததும் ,
கொள்கை கோட்பாடுகளை வைத்து வளர்ந்த கட்சிகள் அவற்றை தவறவிட்டபடியாலும்,
கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்ற விதத்தில் செயல்பட்டுக் கொண்டு
ஒரு சில வசயங்களில் ஆதரவு மற்ற விசயங்களில் எதிர்ப்பு
என்ற ரீதியில
கூட்டணியோ அல்லது
ஆதரவோ தெரிவித்து தங்களின் கட்சியின் அஸ்திவாரமான நிலைப்பாட்டை காற்றில் பறக்கவிட்டதும்
தான் ஒவ்வொருவரும்
சரிவை
இல்லையில்லை
தோல்வியை சந்தித்தனர்.
என்னால் தெள்ளத்தெளிவாகவே, இந்தத் தேர்தலில்
காங்கிரஸ்
ஒரு ஸ்திரமான கட்சியாக
15வது நாடாளுமன்றத்தில் விளங்கும் எனவும் ,
பா.ஜ.க. மற்றும் இடது சாரிகள் எவ்வளவு M.P. களைப் பெறுவார்கள் என்றும்
சரியாகவே ஆணித்தரமாக கணிக்கும்படி இருந்தது .
காங்கிரஸ் + 300க்கு மேலும்
பா.ஜ.க.+ 180க்கு கீழும்
கம்யூனிஸ்ட்கள் 60க்கு கீழும் பெறுவார்கள் என மிகக் கச்சிதமாக கணிக்க முடிந்தது.
இந்த முடிவை என்னால் எப்படி எட்ட முடிந்தது.
என்னையே எடுத்துக் கொள்வோம்.
நான் இந்தத் தேர்தலில்
எனது கொள்கை கோட்பாட்டிற்கு மிக சமீபத்தில் வரும் கட்சி எது எனப்பார்த்தும்,
எங்களின் தொகுதியில் நிற்கும் நபர் அப்படி எனது கருத்துக்கும்,
எனது கொள்கை கோட்பாட்டிற்கும் அருகில் வரக்கூடிய நபரா
என்று பார்த்தும் ,
சென்ற தேர்தலில் நான் ஆதரவளித்தவர் என்ன செய்தார் நான் ஆதரித்த கட்சி என்ன நிலைப்பாட்டில்
இருந்தது
எப்படி செயல்படடது எனப்பார்த்தும் நிலையான ஆட்சி யாரால் அமைக்கமுடியும்
யார் அமைப்பதாக உறுதியாக கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றில் உண்மையுள்ளதா?
மக்களுக்கு நல்லது செய்வதாக யார் இருக்கின்றார்
அல்லது
செய்யவாவது முயல்பவர்கள் யார் என்றெல்லாம் பார்த்து
பின்
எனது கொள்கை கோட்பாடான பகுத்தறிவுக்கு ஆதரவு தராவிட்டலும் மதச்சார்பற்ற தன்மையுடன்
விளங்கும் கட்சிக்கே எனது வாக்கு என தீர்மானித்து
இரண்டு கட்சிகளும் மதச்சார்பற்ற தன்மையுடன் இருந்தபடியால் அவற்றில் யாருக்கு வாக்களித்தால்
மத்தியில் நிலையான ஆட்சியை ஏற்படுத்துவார்கள்
மாறாத தன்மையுடன் இருப்பார்கள் என சிந்தித்து
என் ஓட்டு வாங்கிய கட்சி,
நபர்.
தங்களின் கட்சியின் மேலிடத்து முடிவு எனக் கூறி தனது ஓட்டின் மூலம் பிறரை ஆதாரித்து
எனது கொள்கைக்கும் கோட்பாட்டிற்கும்,
நான் வாக்களித்த கருத்திற்கும் எதிராக நான் யார் கட்டாயம் வரக்கூடாது என்ற
உறுதிப்பாட்டோடு இவருக்கு வாக்களித்தேனோ அவருக்கு ஆதரவாக
டெல்லி சென்று
எமக்கு எதிராக நான் யாரை பதவிக்கு வரக்கூடாது என நினைத்தேனோ அவருக்கு ஆதரவாக
வாக்களித்து எம்மை ஏமாற்றும் நபராக இல்லாமல்,
மதவாத சக்திகளை நசுக்கும் கரமாக
,கட்சியாக
பார்த்து வாக்களித்தேன்.
நான் வாக்களிக்கும் வேட்பாளர்கள் தோற்றுப்போவார் என 100 % உறுதியாக தெரிந்தும்
வாக்களித்தேன்.
இதே போன்ற செயல்களைத்தான் இந்தியாவிலுள்ள அதிகப் பெரும்பான்மையான வாக்காளர்கள்
செய்வார்கள் என்ற அடிப்படையில் நான் ஒரு கணக்கு போட்டுப்பார்த்ததில் மேற்படி முடிவு
மிகவும் எளிதாக கிட்டியது .
அந்த கணக்கீட்டிற்கு எப்படி வந்தேன் என்ற
விஷயத்திற்கு வருகின்றேன்.
கேரளாவிற்கு இரண்டாண்டுகளுக்கு முன் டூர் சென்ற போது அங்கிருந்த காம்ரேட்
நண்பர்களிடம் நான் கேட்ட கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லாமல் டெல்லி மேலிடம் முடிவு
,டெல்லி மேலிடம் முடிவு என்று மட்டுமே கூறினார்கள். ஆனால் அங்குள்ள ஒவ்வொருவருக்கும்
அந்த எண்ணம் ஓடிக்கொண்டுதான் இருந்திருப்பது கேரளா மற்றும் மேற்கு வங்காள தோர்தல்
முடிவுவில் வெளிப்பட்டுள்ளது.
நான் கேட்டேன்.
இங்கு சட்டசபைத் தேர்தலாகட்டும், பாராளுமன்றத்தேர்தலாகட்டும், காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும்
எதிரும் புதிருமாக நின்று ஒருவரை ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றீர்கள்.
பின்
டெல்லியில்
காங்கிரஸ் ஆட்சி அமைக்க
நீங்கள் ஆதரவு தந்தால் நீங்கள் எதற்கு ஆதரவளிக்கவில்லையோ அதனை மறைமுகமாக உங்கள் கட்சி
ஆதாரிப்பது தானே உண்மை என்றேன்.
அதற்கு மதச் சார்பின்மைக்காக ஒன்றிணைந்துள்ளது மேலிடம் என்றனர்.
சட்டசபையில் என்றேன்
பதில் இல்லை.
மேலும் நீங்கள் எப்படியும் மத்தியில் ஆட்சியை இப்போது பிடிக்கப்போவது இல்லை.
அப்படியிருக்க நீங்கள் உங்கள் கட்சிக்கு ஓட்டுப்போட்டாலும் அவர்கள் மதச்சார்பின்மைக்கு ஆதரவாக
காங்கிரசுக்கு ஆதரவு தரத்தான்போகின்றனர்.
எப்படியும் காங்கிரசே மத்தியில் ஆட்சியில் அமரும் அப்படியிருக்க நீங்கள் ஏன் சுற்றி
வளைத்து உங்களை ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கின்றீர்கள்.
நேரடியாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதுதானே.
நான் தேர்ந்தெடுத்த கட்சி மத்தியில் ஆள்கிறது என்று தாங்கள் சொல்லிக்கொல்லலாமே என்றேன்.
நீண்ட விவாதத்திற்கு எனது கருத்து மறுக்கப்படாமல் ஆமோதிக்கப்பட்டது.
நான் அப்போதே நினைத்தேன் இதன் பின் விளைவை கட்டாயம் ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட்
சந்திக்கும் என்று.
இந்த தேர்தலிலே அது நடந்து முடிந்து விட்டது.
இவ்வாறுதான் ஒவ்வொரு ஆதரவாளர்களும் நினைத்திருப்பார்கள்.
கேரளாவிலும்,
மேற்கு வங்காளத்திலும் கம்யூனிஸம் பின்னடைவு ஆகவில்லை.
ஆனால்
கம்யூனிஸ்ட் தலைகள் மேற்கொண்ட தவறான அணுகுமுறை தோல்வியை தந்துள்ளது.
ஒன்றை மட்டும் கட்டாயம் இங்கு கூறவேண்டும்.
ஒரு கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் எப்பொழுதும் உறுப்பினர்களே.
அவர்கள் ஒரு தேர்தலில் வாக்காளர்கள் என்று கூறுவதை விட வேட்பாளர்கள் போன்றவர்கள் என்று
கூறுவதே சரியானது.
ஆனால் ஆதரவாளர்களும் நடுநிலையாளர்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
தன் கை மையில் வாக்கு வாங்குபவர்களே தங்களை ஆளவேண்டும் என்று விரும்வுகின்றவர்கள்.
மேலும் ஒரு தேர்தலில் ஒரு கட்சி பெறும் வாக்குகள் அந்த தேர்தலின் போது அவர்களுக்கு
கொடுத்த ஆதரவு மட்டுமே.
அதையே ஓட்டு வங்கியாக கணக்கிட்டுக் கொண்டிருந்தால் சரிவையே தரும்.
அப்படி இல்லை என்று கூறும் கட்சிகள்
ஏதாவது ஒரு தேர்தலில் போட்டியிடாமல்
தனது ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் 49 (O) விற்கு வாக்களிக்க
அறைகூவல் விடட்டும்.
அப்போது விழும் ஓட்டுக்கள் அக்கட்சிக்கு மட்டுமான ஓட்டுவங்கியாக நான் ஏற்றுக் கொள்வேன்.
அதுதானே உண்மை.
கூறிப்பாருங்கள்
உண்மை புரியும்.
உங்கள் ஓட்டு வங்கியும் தெரியும்.
பொதுவாக நடுநிலையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களின் பெரும்பான்மையான விருப்பம் என்னவாக
இருக்கிறதெனில் தாங்களே ஆள்பவர்கள் தாங்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்வேண்டும் என்பதுவே.
கடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் என்ன சொல்லி கேரளாவிலும், மேற்கு வங்காளத்திலும் ஓட்டு
கேட்டனர் காங்கிரசை எதிர்த்து தானே.
வெற்றி பெற்றபின் எதிர்க்கட்சியாக அமர்வது தானே முறை. அதைத்தவிர்த்து குறைந்தபட்ச
செயல்திட்டம் என்ற பெயரில் வாக்களித்தவர்களின் குரலை அலட்சியம் செய்தது.
மக்களவை சபாநாயகர் கூட கட்சியின் கொள்கைக் கோட்பாட்டை நிலைப்பாட்டை உடைந்தெரிந்தார்.
மேலும் 4 ½ ஆண்டுகள் கைகோர்த்து பின் சரியில்லை எனக்கூறி பின் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு
ஆதரவளிப்பதாக கூறி இப்பொழுது தேர்தலை சந்தித்தால்,
கம்யூனிஸ்டு நடுநிலையாளர்களையும், கம்யூனிஸ்டு ஆதரவாளர்களையும், மறைமுக தலைவர்களை
நேரடியாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு ஆளாக்கிவிட்டார்கள்.
அங்கு வெற்றி
காங்கிரசுக்கா
கம்யூனிஸ்டுக்காக என்று இல்லை.
நேரடித் தலைவர் தேர்ந்தெடுத்தலுக்கா மறைமுகத் தலைவர் தேர்ந்தெடுத்தலுக்கா என்பதே.
இதில் நேரடித் தேர்ந்தெடுக்கும் முறையே வெற்றி பெற்றுள்ளது.
இதே நிலை தான் U.P. பீகார், A.P. மற்றும் அனைத்து மாநிலங்களிலும்
. ஏன்?
தமிழ்நாட்டில் கூட இதே தான்.
பா.ம.க. விற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் ஓட்டு போட்டாலும் அவர்கள் வெற்றி பெற்ற பின்
காங்கிரசுக்கே தேர்தலுக்குப்பின் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்.
சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மரியாதையும் மதிப்பும்
என நினைத்து மக்கள் செயல்பட்டதுதான் காரணம்.
ம.தி.மு.க. வும் அ.தி.மு.க. வும் பா.ஜ.க.விற்கே ஆதரவு கொடுக்கப் போகின்றனர்.
பா.ஜ.க. மத வாத சக்தி ,
எந்த ஒரு செயல்திட்டமும் இல்லாத நிலையற்ற போக்கு கொண்ட அதைப்பார்த்த மக்கள்
ஆதரவளிக்கவில்லை.
காங்கரசின் வெற்றிக்கு காரணமாக இருந்தது
1. பா.ஜ.க. தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குப் பின் காங்கிரசையே
ஆதாரிக்கும் என்ற பார்வையை உட்கிடையாகவோ வெளிப்படையாகவோ வெளிப்படுத்தியது.
2. மதச்சார்பற்ற தன்மையில் மற்ற கட்சிகளை விட அழுத்தம் திருத்தமாக இன்று இருக்கும் என்ற
மக்களிடையே ஏற்பட்ட நிலையான நம்பிக்கை.
3. நிலையான
நீடித்த அரசைத் தருகின்றோம் என்ற உத்திரவாதம்.
4. பிரதமர் யார் என்ற கேள்விக்கே இடமில்லாமல்
மன்மோகனை முன்னிருத்தியது.
5. மக்களின் நலனை அதிகம் கவரும்படியான செயல்பாடுகளை கொண்ட அரசாக இருந்தது.
6. காங்கிரஸ் தனது சாதனைகளை பட்டியலிட்டு பிரச்சாரம் செய்தது.
7. சோனியாவின் பதவியின் மீது ஆசையில்லாத தன்மை.
8. கடைசியாக தேசப்பாதுகாப்பிற்கு உத்தரவாதம்.
கம்யூனிஸ்டுகள் தோல்விக்கு காரணம்.
1.கொள்கை, கோட்பாடுகளை எறிந்து விட்டு மக்கள் அளித்த வாக்குகளை அவர்களுக்கு எதிராகவே
கூட்டணி தர்மம் என்ற பெயாரில் விட்டுக் கொடுத்ததுவே.
2.நீங்கள் தேர்ந்தெடுக்க இருக்கும் M.P. க்கள் தலைவரை நாங்களே தேர்ந்தெடுக்கின்றோம் என மக்கள்
நினைத்ததுவே.
பா.ம.க. வின் நிலையும் இதுதான்.
இது தவிர பதவி ஆசை ,
சலசலப்பு அரசியல்
ஆகியவற்றால்
லாலு, முலாயம், மாயாவதி போன்றவர்கள் வீழ்ந்தனர்.
இதை மறுக்கும் யாவரும்
அரசியல் அறிவு பெறாதவர்களே. மறுக்கும் கட்சிகள்
அழிவைத் தேடிக்கொள்ளும் கட்சிகளே.
முடிவாக ஒரு சில காரணங்களை மட்டுமே முன்வைத்து கூட்டணி ஏற்படுத்தியோ
அல்லது
வெளியிலிருந்தோ
ஒரு கட்சி ஆட்சியமைக்க அனுமதிக்கும்
எந்த கட்சிகளும் நாளடைவில் பலவீனப்பட்டு
ஆதரவில்லாமல்
தேய்ந்து மறைந்து போவதுடன். தங்களின் கட்சியின் கொள்கை கோட்பாடுகளை
அசிங்கப்படுத்தி
அழிந்து போகும்.
மக்கள் எதற்காக வாக்களித்தனரோ அதற்காக முழுமையாக காலத்திற்கேற்ப செயல்படும் கட்சிகளே
வளர்ச்சி பெறும். மலர்ந்து செழிக்கும்.
கம்யூனிஸ்டு தலைவர்கள் நிலைப்பாடு தான் தோற்றதே தவிர்த்து
கம்யூனிஸம் தோற்கவில்லை. கம்யூனிஸ்டுகளும் தோற்கவில்லை.
கட்சித்தலைமையின் நிலைப்பாட்டினால் கட்சிஆதவாளர்களின் மனோநிலையில் மாறுதல் ஏற்பட்டு
இவர்களுக்கு இந்த முடிவு கிடைத்தது.
இதை மறுப்பவர்களுக்கு இறுதி முடிவு கிடைக்கும்.
.
Monday, March 30, 2009
இந்தியாவைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து போகும் கட்சிகள்?
"அரசியலை சாக்கடையாக்கி விட்டார்களே ஒழிய அரசியல் சாக்கடை அன்று"
நண்டு :
இந்தியாவைப் பொறுத்தவரை....
நொரண்டு :
இந்தியா என்பது மத, இன, ஜாதி, மொழி சார்பற்ற ஒரு அற்புதமான நாடு.
அந்தப் பாதையில் அது சுதந்திரமாக பயணம் செய்து ஒன்றுபட்ட மாந்தரினத்தை உருவாக்க
அது மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாமனைவரும் அதற்கு உறுதுணையாக, விழிப்புணர்வுடன்
இருந்து நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் அதற்கு செய்ய வேண்டும்.
இந்தியா என்பது ஆங்கிலேயன் நமக்கு கொடுத்த பெயரல்ல.
நாம் உருவாக்கிய தேசத்திற்கு நாம் வைத்த பெயர்.
நமது பெயர்.
நாம் வாழ்ந்து வரும் காலத்திற்கு சற்று
முன் நமது தந்தையர், தாத்தாக்களின் போராட்டத்தில் சுதந்திரம் பெற்று நம்மிடம் கொடுத்துச்
சென்றுள்ள தேசம்.
நம்மிடம் விட்டுச் சென்றுள்ள மழலை.
நமது அறிவாற்றலால் அதனை முன்னிறுத்தி வளப்படுத்தவேண்டும் என்றஎண்ணத்துடன் நாட்டை வழிநடத்த
எத்தணிக்கும் தொண்டர்களை உருவாக்கும் எந்தக் கட்சியும் தேசியக் கட்சியாக பரிணாமிக்கும்.
வெற்றியும் பெறும்.
இது நமது தேசம்.
நமது காலத்தில் நமக்காக கொடுத்த சுதந்திர பூமி. அகிம்சை வழியில் நமக்கு அளிக்கப்பட்ட
மகத்தான தேசம்.
நமக்காக நாம் உருவாக்கிய அனைத்து அம்சங்களைக் கொண்ட ஒரு அரசியலமைப்பின்பால் நமது கையில்
விடப்பட்ட ஒரு அழகிய பூந்தோட்டம்
என நினைக்கும் கட்சிதான்
இந்தியா முழுதும் பிரகாசிக்க முடியும்.
அப்படி நினைக்காத எதுவும் தேசியக் கட்சியாக பரிணமிப்பது மிகவும் கடினம்.
இந்தியா என்ற ஒன்றும் கிடையாது.
ஆங்கிலேயன் தனது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய பெயர் .
பின் அவற்றை நாம் பின்பற்றி வருகின்றோம்.
இந்தியா என்பது ஒரு மாயை என கூறிக்கொண்டு
( இதற்கு முன் இப்படி ஒரு தேசம் இருந்ததில்லை என்றால் உலகில் எத்தனை தேசங்களின் பெயர்கள்
கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இருந்து வந்துள்ளது என காட்ட முடியுமா? -என
வாதங்கள் புரிவேரிடம் கேட்களாமே )
மொழிவாரியாக, இனம் வாரியாக பேசிக் கொண்டு, ஆங்காங்கு செல்வாக்கு பெற்று ,பெற முயன்று
வரும் கட்சிகள் மாநிலக் கட்சியாக இருந்து கொண்டு மத்தியில் ஆட்சியில் தங்களின்
பிரதிநிதித்துவத்திற்கேற்ப சில சமயம் செல்வாக்கு பெற முடியுமே தவிர தேசத்தைப்
பொறுத்து அவைகளின் செல்வாக்கு தவிர்க்கக்கூடிய அளவிலே, பூஜியமகவே இருக்கும் .
இந்தியாவைப் பொறுத்தவரை
காந்தியம்
முதலிடம்
வகிக்கின்றது.
காந்தியக் கொள்கைகள்
உள்கட்டமைப்பில் விரிவடையும் தன்மை கொண்டன.
இந்த விசயத்தில்
காந்தியத்தை
இன்றைய காங்கிரஸ் கடைபிடிக்கின்றதோ, இல்லையோ,
அது காந்தியின் காலத்திலிருந்து
அவரின் கொள்கைகளை உள்வாங்கி
இயங்கிக் கொண்டு வந்ததால்
காந்தியத்தின் பாதையில் அது செல்வதாக அதன் அனுதாபிகள் எடுத்துக்கொள்வதால்
முதலிடம் அதற்கு தரலாம்.
மார்ச்சியம் .......
மார்ச்சியம் பின்பற்றும் கட்சிகளைப் பொறுத்தவரை இன்னும் அழுத்தம் திருத்தமான செயல்பாடுகள்
தேவை.
அவர்களின் செயல்பாடுகள் மந்தமாக இருப்பதால் முதலிடத்தில் இருக்கவேண்டிய
இவர்களுக்கு
இரண்டாமிடம் தான்.
அது தவிர்த்து மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், மொழியின் பெயரால், தோன்றி
அதற்குள்ளே காலம் தள்ள நினைக்கும் கட்சிகள் தேசியக் கட்சிகள் போன்று தெரிந்தாலும்,
உருவானாலும், ஓட்டு வங்கிகளை வைத்திருந்தாலும் காலத்தால் நிலைத்து நிற்குமா என்பது
கேள்விக்குறியே.
அவைகள் சி்று கட்சிகளாக, மாநிலக் கட்சிகள் அந்தஸ்திலேயே தங்களின் பயணத்தை தொடர்ந்து
முடிவைத் தேடிக்கொள்ளும். அத்தகைய கட்சிகளைப்பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை.
பொதுவாகவே,
எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும்,
அவைகளை கையில் எடுத்துக்கொண்டு பயணப்படும் எத்தகைய பெரிய ஓட்டு வங்கிகளைக் கொண்டபெரிய
கட்சியும் தொடர்ந்து தனது அனுபவத்தினால் அவைகளின் கொள்கை மற்றும் கோட்பாட்டினை
செலுமைப்படுத்தாமல் அப்படியே பயணப்பட்டது
எனில் அக்கட்சிகள் எத்தகைய உயர்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளை பின்பற்றி இருந்தாலும்
உறைந்துவிடும்.
அலெக்சாண்டர் உலகப் பேரரசை நிறுவினான். அதற்கு காரணம்
சாக்ரடீஸ்....
அரசு விரியும் தத்துவம் அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.
இவ்வாறுதான் கருத்து வளர்ச்சியில் விரிவடையும் தேசம்.
தேச நலன்.
அவ்வாறு விரிவடையா,
செலுமைப்படுத்தா கருத்துக்களைக் கொண்ட கட்சிகள்
சுருங்கி மறைந்துவிடும்.
எது எப்படியிருந்தாலும் மக்கள் விழிப்புணர்வு பெறப்பெற அதற்க்கேற்ப
மக்களாட்சித்தத்துவமும் விரிவடைந்து உயர்ந்த தன்மை கொண்ட கருத்துள்ள கட்சிகள் தவிர்த்து மற்ற
எல்லா கட்சிகளும்
அழிந்துவிடும்.
அதற்கான காலம்
அவைகள் கொள்கை கோட்பாட்டிலே அமையும்.
நண்டு :
சரி, இந்தியாவைப் பொறுத்தவரை, தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த எந்த கட்சிகள் அழிந்து
போகும் கட்சிகள்?
நொரண்டு :
இந்தப் பதிவைப் படிக்கும் நீங்கள் ஏதாவது ஒரு கட்சி சார்ந்தவராக இருந்தால் அதன் கருத்தை
அறிந்துகொண்டாலே, அதன் ஆயுட்காலம் தெரிந்துவிடும் .
நடுநிலையாளராக இருப்பீர்கள் எனில் எந்த கட்சியின் கருத்து விரிவடைவதாக இருக்கிறதே
அதற்கே ஆயுட்காலம் அதிகம்
(மூடராக இல்லாத பட்சத்தில் ).
இந்தியாவைப் பொறுத்தவரை,
தமிழகத்தைப் பொறுத்தவரை
ஏன்
உலகத்தைப் பொறுத்தவரை கூட
பகுத்தறிவு கருத்துக்களும் ,
பொதுவுடமை சித்தாந்தங்களும்
கொண்டு
அஹிம்சை வழியில்
நடந்து செல்லும
மக்கள் கட்சிகளுக்கு
ஆயுட்காலம் என்பது
வரையறுக்கமுடியாத
ஒன்றாக இருக்கும் .
அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி? .... முற்றும்
"அரசியல் அறிவு பெற முயலாதவன் மூடன்"
.
Saturday, March 28, 2009
அழிந்து போகும் அரசியல் கட்சிகள்… எவை? எவை? ...எப்படி? எப்படி?
"அரசியல் அறிவு பெற முயலாதவன் சமுதாய விலங்காவான்"
நண்டு :
தேர்தல் கூட்டணிகள் தற்பொழுது சூடு பிடித்துள்ளவைபோல் தெரிகின்றது.
நொரண்டு :
மக்களின் கைமையில் ஆட்சியைப் பிடிக்க அனைத்து யுத்திகளையம் மேற்கொள்ள வேண்டும்தானே.
அப்பொழுதுதானே கட்சி அதன் ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்த முடியும். அது தானே ஒவ்வொரு
கட்சித்தலைவரும் விரும்புவர்.
நண்டு :
அப்போ, மக்களை ஏமாற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்
நொரண்டு :
மக்களை ஏமாற்றுவது என்பது வேறு, ஒரு கட்சி தனது ஸ்திரத் தன்மையை நிலை நாட்டுவது
என்பது வேறு. பொதுவாகவே ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி மக்களை ஏமாற்றி ஓடடுகளை
வாங்குகின்றனர் என்பது பழுத்த ஜனநாயக நாட்டில் நடக்க முடியாத ஒன்றாகும். ஆனால் மக்களை,
தங்களின் வாக்காளர்களாக தங்களின் கட்சியின் தொண்டர்களாக வைத்துக்கொள்ள அனைத்துக் கட்சிகளும்
ஒவ்வொரு யுத்தியை தன்னுள்ளே வைத்திருக்கும்.
ஏமாற்றுகின்றனர், ஏமாற்றிவிட்டனர் , ஏமாற்றப்படுவது என்பதெல்லாம் பொதுவாக ஒட்டுமொத்த
மக்களின் மீது குவியும் கருத்து. ஆனால் ஒவ்வொரு கட்சியும் தங்களின் தொண்டர்களை ஏமாற்ற
விரும்புவது கிடையாது. ஏமாற்றவும் செய்யாது. சூழல் சரியில்லாமல் போகலாம்.
நண்டு :
அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தேர்தலுக்கு தேர்தல் மாறிக் கொண்டே வருகின்றதே.
நொரண்டு :
ஜனநாயகத்தின்படி நிலை வளர்ச்சியில் இது ஒரு அத்தியாயமாகும்.
மக்களாட்சித்துவம் இன்னும் சோதனை முயற்சியாலேயே இருக்கிறது.
சாக்ரடீஸூக்கு முந்திய கால கட்டத்தில் தான் அனைவரும் .
ஆட்சி அதிகாரத்தை
மட்டும் கைப்பற்ற நினைக்கும் அரசியல் கட்சிகள்
தங்களை ஸ்திரப்படுத்திக்கொள்ள, வழப்படுத்திக்கொள்ள, நிருவனமாகிப்போவதால்
தங்களின் நிலைப்பாட்டினை அடிக்கடி மாற்றிக்கொண்டே வருகின்றது.
இன்று தற்பொழுது உள்ள அரசியல் கட்சிகள் சிறந்த நிர்வாகிகளை நாடுகின்றன.
நிருவாகிகளாக இருக்க அக்கட்சியும், அரசியல் தளத்திலிருந்து நிருவாகத்தளத்திற்கு இடம்
பெயர்கின்றது.
இப்படி நிர்வாகிகளைக் கொண்ட அரசியல் கட்சிளாக இருக்கின்றது.
எனவே,சிறந்த நிர்வாகிகள் கொண்ட அமைப்பு சிறந்த அரசியல் கட்சியாக இருக்கிறது.
நிர்வாகிகள் மேல் மட்டத்திலிருந்து அடித்தட்டு தொண்டர்வரை பல தட்டுகளில் இருக்கின்றனர்.
நிர்வாகிகளில் சிறந்த நிர்வாகி சர்வதிகாரிக்கு ஒப்பான செயல்களையே கட்சிக்குள் மேற்கொள்வார்.
இது ஒரு
சர்வாதிகார கொடுங்கோல் அரசை வீழ்த்த ஏற்பட்ட
ஜனநாயகத்திற்கு
ஏற்பட்ட
முதல் அடியாகும்.
நல்ல நிர்வாகியால் நல்ல செயல்கள் நடப்பதுபோல் தோன்றினாலும் ஜனநாயகத்திற்கு சரியான
பின்னடைவே பின்னிட்டு ஏற்படும். காரணம் இப்படிப்பட்ட நிர்வாகிகள் மூலம்தான் கட்சிகள்
தங்களின் பலத்தை நிரூபித்துக் கொண்டு வருகின்றன.
இப்படிப்பட்ட நிர்வாகிகள்தான்
தங்களின் அதிகாரத்தை பிரயோகம் செய்து தங்களின் ஸ்தானத்தை நிலைப்படுத்திக்கொள்ள
எதுவேண்டுமானாலும் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் தான்
அட்டூழியங்களும்,
அட்டகாசங்களும்,
சாகசங்களும்,
வித்தைகளும்,
குரங்கு மாதிரி அந்தர் பல்டிகளும், அரசியல் கலத்தில்.
சிறந்த அரசியல் தலைவர்கள்தான் சிறந்த அரசியல் கட்சிகளை நிலைநிறுத்த முடியும்.
அப்படிப்பட்டவர்களால்தான் இத்தகைய செயல்களுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.
நண்டு :
சிறந்த அரசியல் தலைவர்கள் மட்டும் அரசியல் கட்சிக்கு என்றால் ...
நொரண்டு :
அரசை,
அரசியல் கட்சியை தலைவராக இருந்து ஒருவர் வழி நடத்த வேண்டும். நிர்வாகியாக இருந்து
நிர்வகிக்கக்கூடாது.
நல்ல நிர்வாகிகள் மக்களைப் பார்க்க மாட்டார்கள்.
நல்ல நிர்வாகம் சார்புடையது.
தலைவர்களிடம் சர்வாதிகாரப் போக்கு காணப்படாது.
தலைவர்கள் மக்களை மட்டுமே பார்ப்பார்கள் .
மன்மோகன்சிங் சிறந்த நிர்வாகி.
நண்டு :
புதுப்புது அரசியல் கட்சிகள் தோன்றிக்கொண்டே உள்ளதே ......
நொரண்டு :
"அரசியல் என்பது வாழும் முறை" என்றாகிவிட்ட சமூகத்தில்
அரசியல் என்பது வாழ்வாகி விடுகின்றது.
நாம் அனைவரும ஒட்டுமொத்தமாக அரசியல் அடித்தளத்தில் இருக்கின்றோம்.
தனிமனிதன் தொட்டு அனைத்தையும் அரசியல் பதம் பார்த்துக் கொண்டுள்ள நிலையில் அது தவிர்த்த
ஒரு நிலையை மனிதன் சிந்தித்துப்பார்க்கக்கூட முடியாதபடி தன்னை ஜக்கியப்படுத்திக்
கொண்டுவிட்டான்.
இப்படிப்பட்ட சூழலில் அரசியல் என்னும் மையம் மெல்லமெல்ல பற்றியபொழுது மேலும் மனிதன்
தன்னுடைய மையத்தை அரசியலின் பால் நகர்த்தி முடித்த அளவு தன்னை முன்நிறுத்தி தனது
வாழ்வை வளப்படுத்தி, நலப்படுத்தி, சுகப்படுத்திக் கொண்டு பின் தனது வம்சத்தையும், அதன்
வழியிலே அமர்த்தி தனது வாழ்வையும், வம்சத்தையம் வடம்பிடிக்க ஆரம்பித்தான்.
தன்னை முன்நிருத்த அவனுக்கு ஏதாவது ஒன்று தேவைப்பட்டது, கிடைத்தது,
பயன்படுத்திக் கொள்கின்றான்.
தான் முன்நிருத்த ஏதுவாக தனக்கு பின் பல கைகள் தேவை என்பதனையும் அவைகள்
அசையாக்கைகளாக இருக்க தன்னிடம் நிலையாக ஏதாவது ஒன்று இருக்க வேண்டும் என்பதையும்
உணர்ந்த அவன், அதனை தனது பயணத்தில் தொடர்ந்து பெற்றுக்கொண்டே வந்த அனுபவத்தின் மூலம் பெற்ற
அறிவின் துணையுடன் கண்டுகொண்டு, அதன்மூலம் ஒரு முடிச்சைப் போடுகிறான்.
அந்த முடிச்சுதான்
அவனைத் தலைவனாக்குகிறது. மற்றவர்களை அவனின் தொண்டர்களாக்குகிறது.
அந்த முடிச்சுதான் அவனின் உயிர்மூச்சாகின்றது, பேச்சாகின்றது. அவனின் கொள்கையாகிறது
அந்த கொள்கைகள் முந்நிருத்த அவனால் கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட முடிச்சு யாராலும் அவிழாத்படி இருக்கும்படியும், தொடர்ந்து நீடித்துக்கொண்டே
இருக்கும்படியும், விடைகாணா தேடுதல் வேட்டையிலேயே போடும் கேள்விகளிலே திக்குமுக்காட
வைத்து தொண்டர்களை தூங்க வைத்து வேட்டையாடி வித்தைகள் பல கற்றுக் கொள்கின்றான்.
வசீகரத்திலே (அது பேச்சாக இருக்கலாம், தோற்றமாகவும் இருக்கலாம், கருத்தாகவும்
இருக்கலாம்). மயக்கி, மயங்கி விழுந்த மனிதன் தொண்டராகவே தொடரும் அவலம் தொடர தலைவன்
மட்டும் வடத்தை தனது பகுதிக்குள் இழுத்துக்கொண்டே விடை காணா முடிச்சுடன் பல மட்டங்கள்
குட்டி, குட்டி தலைவர்களை உருவாக்கிக்கொண்டே சுழல்கின்றான்.
அவன் தான்தலைவாகவும்,
மற்றவர்கள் தொண்டனாகவும் சிம்மாசன போட்டியை அடைகிறான்.
இப்படிப்பட்ட
சிம்மானச போட்டியில்தான் முடிச்சுகளின் ஆழங்கள் பார்க்கப்படுகிறது.
அப்பொழுது ஏற்படும் கருத்து மோதலின்போது வெடித்து சிதறுவதுதான் அவன் போட்ட முடிச்சு .
முடிச்சு அவிழ்ந்தால் கட்சி என்னவாகும்.
தொண்டர்கள் அவிழ்ந்து போவார்கள். அப்படியெனில் முடிச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்.
எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு சிக்கல் நிறைந்ததாக
இருக்கவேண்டும்.
எவ்வளவுக்களவு சிக்கல் நிறைந்ததாக இருக்கமுடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு ஆதாயம் அதிகம்.
ஆனால் தொண்டர்கள் கொள்கை கொள்கைக்காகவே வாழ வேண்டும். ஆனால் கொள்கைப் பற்றி முழு அறிவும்
பெற்றுவிடக்கூடாது.
பெற்றுவிட்டால் தலைவன் தலைவனாக இருக்கமாட்டான்.
அந்த அளவு கொள்கை இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நெருக்கடியில் வாழும் மனிதன் அரசியல் வாழ்வாகிவிட்ட சமுதாயத்தில் தானும்
ஏதாவது ஒரு கட்சியை அவனது சுயநலத்திற்காக பின்பற்றுவது ,அல்லது பின்பற்றுவது மாதிரி
தொடர்கின்றான்.
அவன் தொண்டனானால் தொண்டன் என்பவன் முடிச்சுக்குள் வரவேண்டும். முடிச்சே உயிர் மூச்சாக
நினைக்க வேண்டும்.
ஆனால் உயிடன் இருந்து என்ன பயன் என்ற கேள்வியை மட்டும் கேட்கக்கூடாது.
இப்படியாகத்தான் சமுதாயத்தில் அரசியல் கட்சி உருவாகிக்கொண்டே இருக்கிறது.
நண்டு :
இப்படி உருவாகும் கட்சியின் ஆயுட்காலம் எதைப்பற்றி அமையும்
நொரண்டு :
முடிச்சுக்கு ஆதாராமான கருத்தில் உள்ளது அதன் ஆயுட்காலம்.
அந்த கருத்து தொடர்ந்து அக்கட்சியை வழிநடத்தி செல்லும் .
அவையே அக்கட்சியின் ஆணிவேர் ஒரு கட்சி தொடர்ந்து, அதன் வேராகிய கருத்தை தழுவியே செல்ல
வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு கருத்து ஆழமாகவும், அகலமாகவும் இருக்கிறதே , கருத்தை
பின்பற்றுகிறதே ,அவ்வளவுக்கவ்வளவு அக்கட்சியும் வேறுன்றி பரவி செழிக்கும்.
ஆழமான ,அழுத்தமான,
மனித நேயம் கொண்ட சிறந்த கொள்கை ,கோட்பாடுகளை உள்ளடக்கி ஏற்படுத்தப்பட்ட இயக்கங்களின்
கருத்திலிருந்து தோன்றும் அரசியல் கட்சிகள்தான் நிலைத்து நிற்கும்.
சமுதாயம் என்பதில் அரசு என்ற கட்டமைப்பில் அதன் கொள்கைகளும் கோட்பாடுகளும்
சமுதாயத்தையும், அரசையும் தாண்டி இருக்கும்பட்சத்தில் அக்கட்சி அந்த சமுதாயத்தில், அரசியல்
நிலையான இடத்தினை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அது தொடர்ந்து தனது ஆளுகையை செலுத்திக் கொண்டே இருக்கும்.
அதன் செயல்பாடுகள் அந்த அமைப்பைத் தாண்டி பயனளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
இது விரிவடையும் விதியாகும். இவ்வாறு விரிவடையும் தன்மையுடையவைகள் காலத்தால்
தொடர்ந்து மக்களுக்கு பயனடையும் அமைப்பாக இருக்கும்.
உலகளவில் மார்க்ஸ்க்கு முதலிடம் .
நண்டு :
தமிழகத்தைப் பொறுத்தவரை
நொரண்டு :
தமிழர்கள் ஆழந்த தமிழ் உணர்வாளர்கள். மொழிப்பற்றும், இனப்பற்றும் ஒருங்கே பெற்றவர்கள். தமிழ்
இனம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களால் ஒரு பொழுதும் தாங்கிக் கொள்ள முடியாது.
அடிபட்டு, அடிபட்டு, மிதிபட்டு, மிதிபட்டு சொல்லவொண்ணா துயரங்களைக் கடந்து வந்துள்ள
இனத்தினர், இனி ஒருபோதும் அத்தகைய சுழலுக்கு இடமளிக்காமல் செல்வார்கள் அல்லது செல்ல
வைக்கப்படுவார்கள்.
மேலும்,
தமிழகத்தைப் பொறுத்தவரை
தந்தைப்பெரியாரின் அடிச்சுவட்டிலிருந்து
தான் விடியலும் ,வெளிச்சமும்.
அவரின் சிந்தனைகளை பின்பற்றி
தனது பயணத்தை எந்தக்கட்சியும் தொடர்ந்தால் மிகவும் பிரகாசமான
எதிர்காலத்தை அடையும் .
இங்கு மண் பேசும் மருந்து தந்தைப்பெரியார்
............ தொடரும்
.
Friday, January 2, 2009
இடைத்தேர்தலை தடுப்பது எப்படி ?
நண்டு : திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயிக்கப்போவது யார் என்று கூற முடியுமா ?
நொரண்டு : எனக்கு யார் ஜெயிக்கிறார்கள்,யார் தோற்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை .ஆனால் ,ஜனநாயகம் முற்றிலும் தோற்றுக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது .
நண்டு :புரியவில்லை .......
நொரண்டு :இடைத்தேர்தல் என வந்துவிட்ட உடன் ஆளும் கட்சியும் ,எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டு சூழலுக்கு ஏற்ப அணிகள் அமைத்துக்கொண்டு் அங்கு வெற்றியை தக்கவைத்துக்கொள்ள முனைவது சரியான பாதைதான். ஆனால் ...
நண்டு : ஆனால் ..என்ன ..?
நொரண்டு : மிகப்பெரிய ஜனநாயகநாட்டில் நடக்கும் எந்தத் தேர்தலிலும் வன்முறையை கையாலும் கட்சிகள் ஜனநாயகநாட்டில்
கட்சிகளாக இருக்க தகுதியுடையவை அல்ல.
கலைஞரும் , ஜெயலலிதாவும் கட்டளையிட்டால் அவர்களின் கட்சிகளி்ல் அதன்படி மட்டுமே நடக்கும் தொண்டர்கள் மட்டுமே உண்டு . அவர்கள் எந்தப்பிரச்சனையும் வரக்கூடாது என கட்டளையிட்டால் ..இப்படியா நடக்கும் .
தாங்கள் ஜெயித்தால் மகேசன் தீ்ர்ப்பு என்றும் , தோற்றால் பணநாயகம் என்று
கூறிக்கொள்ளப்போகிறார்கள் .
அப்படியிருக்க வன்முறைக்கு காரணம் எதுவாக இருக்கும் ?
அது ஒன்று தி.மு.க அல்லது அ.தி.மு.க என மட்டுமே மக்கள் சிந்திக்க வேண்டும் .
மாறாக மூன்றாவதாக மற்ற எந்த கட்சியையும் மக்கள் ஒருபோதும்
நீனைத்துப்பார்க்கக்கூடகூடாது என்பதுவேயாகும்.
இது ஒருவகையான பாசிஸ்ட் கொள்கையாகும்.
இவற்றை மக்கள் ஒருபோதும் அங்கிகரிக்கவே கூடாது .
நண்டு : மக்களா ... சரி..வேறு ஏதாவது மாற்று ....
நொரண்டு :பொதுவாக இடைத்தேர்தலின் போது தான் இத்தகைய செயல்கள் அதிகம் நடக்கிறது.ஆனால், பொதுத்தேர்தலில் இவ்வளவு நடப்பதில்லை .எனவே பொதுத்தேர்தலில்தேர்ந்தெடுக்கும் முறையி்ல் மாற்றங்கள் கொண்டுவருவதன் முலம் இடைத்தேர்தலை தடுத்துவிடமுடியும் .
நண்டு : இடைத்தேர்தலை தடுக்க எத்தகைய மாற்றங்களை தேர்தலில் கொண்டு வரலாம் என நினைக்கின்றாய் ..ஏதாவது சில யோசனைகள் கூறலாமே.
நொரண்டு : ம்.. என்னைக்கேட்டால் ...ஒவ்வொரு கட்சியும் இரண்டு நபர்களை வேட்பாளராக நியமிக்கவேண்டும் . முதன்மை வேட்பாளராக ஒருவர் ,மற்றவர் முன்னிலை வேட்பாளர் .இருவருக்கும் ஒரேசின்னத்தில் தனித்தனியாக வாக்குச்சீட்டுகள் அளிக்கப்படவேண்டும் .இருவர் பொற்ற வாக்குகளும்
எண்ணப்படவேண்டும்.ஆனால் ,முதன்மை வேட்பாளர்கள் பொற்றவாக்குகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்படவேண்டும் . முதன்மை வேட்பாளர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ முன்னிலை வேட்பாளர் அவருக்குப்பதில் நியமிக்கப்படவேண்டும். இப்படிமுன்னிலை வேட்பாள ர் நியமிக்கப்பட்டிருக்கும் சமயத்தில் அவர் இறந்தாலே அல்லது அப்பதவியினின்று தன்னை விடுவித்துக்கொண்டாலோ அடுத்து அதிக வாக்குகள் வாங்கிய கட்சியின்
முதன்மை வேட்பாளருக்கு அப்பதவி போய்விடவேண்டும் .
இப்படிப்பட்ட ஒரு சட்டதிருத்தத்தை தேர்தல் கமிசன் கொண்டுவருவதன் மூலம் இடைத்தேர்தலே வராமல் தடுத்துவிடமுடியும் .
நண்டு : ...இடைத்தேர்தலற்ற ---புதிய பொதுத்தேர்தலை கற்பனை செய்து பார்க்கிறேன் ...
.

