Showing posts with label காந்தி. Show all posts
Showing posts with label காந்தி. Show all posts

Saturday, August 15, 2009

தமிழனால் அரை நிர்வாணப்பக்கிரியான காந்திஜி

.


நண்டு : இன்று 63வது சுதந்திர தினம் .


நொரண்டு : ஆம் ,
மிகச்சிறந்த ஜனநாயக நாடான இந்தியா, உலகிலே மிகச்சிறந்த
மக்காளாட்சிக்கு
எடுத்துக்காட்டாய் ,
மணி மகுடமாய் திகழ நாமெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் .


நண்டு : எப்படி எவ்வாறு ?


நொரண்டு : நாம் நமது தலைவர்களின் எண்ணங்களை நிறைவு செய்யவேண்டும் .


நண்டு : புரியவில்லை உதாரணத்திற்கு எதாவது ....?


நொரண்டு : ஐயா ,நண்டு நான் எதச்சென்னாலும் நீ ஏத்துக்கப்போறதில்லை .
நான் ஒருவரைப்பத்தி ஒன்றைச்சொல்ல அவரைப்பத்தி ஏதோ எங்கொங்கோ அவ்வப்போது படித்ததைவைத்து
. அய்யகோ அவர் அப்படிச்சொல்லவில்லை , அதற்காக அவர்அப்படிச்செய்யவில்லை .
அவர்அப்படிப்பட்டவரும் இல்லை . எனக்கு நல்லா தெரியும் . ஏன்னா எனது அறிவுக்கு
இன்றுவரை நீங்கள் கூறும் விசயம் எட்டாமலே இருக்குது . அது எப்படி எனக்கே தோன்ற நல்ல
சிந்தனைகள் வரமுடியும். அப்படியே வந்தாலும் அதை எப்படி ஏத்துக்கறது என
உம்மைப்போன்றவர்கள் திரிகின்றீர் .உங்க புத்தி ஏந்தான் இப்படி ஆகிவிட்டதோ தெரியவில்லை .


நொரண்டு : உன் வேலை என்ன , அதச்செய்யப்பா ,அதவிட்டுட்டு என்னைப்போன்றவர்களை
சுயநலவாதிகள்னு ஏன் பேசிக்கிட்டு இருக்கே . சரி சொல்லுப்பா கேக்கிறேன் .


நண்டு : காந்தியடிகளை ''அரைநிர்வாணப்பக்கிரி '' னு யார் கீண்டல் செய்தார்கள்
தெரியுமா ?


நொரண்டு : சர்ச்சில் தானே . ஆ..ம்...மையா ..


நண்டு : நான்
எதச்சொல்லவர்றேன் ,நீங்க எத நெனச்சுக்கரீங்க ,மெத சொல்லவந்ததை கேளுங்க .


நொரண்டு : எதையும் புரியிர மாதிரி சொல்லு ...


நண்டு : தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் மனிதன் மனிதனை அடிமைப்படுத்தும்
நிலையினை , மனிதனை மனிதனாக பார்க்காத தன்மையை , அதனின்று மனிதனாக விடுதலை பெற
துடித்துக்கொண்டிருந்த தமிழக ஒப்பந்தக்கூலிகளைக்கண்டார் . மற்றவர்களைப்போல் அல்லாது
அவர்கள் கொள்கைப்பிடிப்புடனும் , அதே நேரத்தில் அகிம்சை வழிப்போரட்டத்தில் ஆழ்ந்த
நம்பிக்கையும் வைத்து இயங்கிவந்தனர் .மேலும்,
அவர்கள் மனிதனை மனிதனாகப்பார்க்கும் மக்களாகவும் இருந்தனர் . அவர்களின் தியாகம் ,உண்மை
,உறுதி,விடுதலை உணர்வு ஆகியவற்றைக்கண்டு ஆச்சரியப்பட்டார் . இது அவரை மிகவும்
கவர்ந்தது . அவர்களின்பால் மிகுந்த அன்பும் ,பாசமும் கொண்டார் . அகிம்சைப்போராட்டம் இங்கு
தான் இப்படித்தான் ஆரம்பமானது .
தென்னாப்பிரிக்காவிலிருந்த தமிழர்களின் ஆதரவு எப்பொழுதும் காந்திக்கும் ,அவரின்
போராட்டத்திற்கும் உந்து சக்தியாக இருந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை உறுதுணையாகவும்
இருந்தது . இது தான் காந்தியை இந்திய விடுதலைப்போராட்டத்திற்கே உந்திச்செல்லும்
சக்தியாகவும் ஆனது .


இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு தன்னை முழுவதும் ஈடுபடுததிக்கொள்ள காந்தியடிகள்
இந்தியா முழுவதும் பயணம் செய்கின்றார் .
அவர் தென்னாப்பிரிக்காவில் கண்ட தமிழர்கள் எப்படிப்பட்டவர்கள் ? .
மனிதன் மனிதனை அடிமைப்படுத்தாத , மனிதனை மனிதனாக பார்க்கும் தன்மையுடையவர்களை .
தென்னாப்பிரிக்காவிலேயே அவர்கள் அப்படியெனில் தமிழகத்தில் , அவர்களின் தாயகத்தில்
சிறப்புடன் இருப்பர் என்றே எண்ணி இருந்தார் .

தனது போராட்டத்திற்கு தென்னாப்பிரிக்காவில் எப்படி தமிழர்கள் உந்து சக்தியாக
இருந்தார்களே .இங்கும் தமிழர்கள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பார்கள் என்ற எண்ண
ஓட்டத்தில் இருந்த காந்தி தனது பயணப்படி தமிழகம் வருகின்றார் .


ஒரு எளிய கிராம வாசியை பார்க்கின்றார் .

அவர் பார்த்த தமிழனின் நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது .

மிகப்பெரிய மனித நேயம் கொண்ட இவர்களின் நிலை இதுவா என மிகவும் மன வேதனை
அடைந்தார் .தங்களின் பண்பாடு ,கலாச்சாரம் இன்ன பிற அடையாளங்களை தொலைத்துவிட்டு
இருக்கின்றனறே இப்படி என மனமொடிந்தார் .

சிந்து சமவெளிப்பரப்பில் பிறந்த காந்திக்கு தமிழனின் பண்பாடும் ,நாகரிகமும்
இரத்தத்தில் கலந்த ஒன்றாகத்தானே இருக்க முடியும் .

தங்களின் அடையாளங்களை என்று இந்த மனித நேயர்கள் முழுமையாகப் பொறுகின்றார்களே ,அது
வரை அவர்களைப்போல தானும் ஆடை உடுத்துவேண்டும் என்று உறுதி பூண்டார் .கத்தியவார்
ஆடைகளான (KATHIAWARI DRESS) வேட்டி, நீண்ட குர்த்தா,தலைப்பாகை ஆகியவற்றைத் துறந்து
அரை வேட்டிக்கும் மேல் துண்டுக்கும் மாறினார் தமிழனால் மனித நேயத்திற்காக .
கதராடைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் .கையில் ராட்டையுடன் கடைசி வரை தனது
எண்ணத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் .

இதனாலேயே ''அரை நிர்வாணப்பக்கிரி '' என்ற ஏச்சுக்கும் ஆளானார் .


நொரண்டு : அப்ப ,தமிழனால்தான் அரை நிர்வாணப்பக்கிரியானார்னு சொல்ற


நண்டு : நான் சொல்லவில்லை இது உண்மை ,வரலாறு .

முடிவுக :

தமிழன் தனமானத்துடன் ,தனித்துவத்துடன் தனது நிலையில் உயர்ந்து விளங்கும் காலம் வரை
காந்தி ''அரை நிர்வாணப்பக்கிரி '' யாகவே அறியப்படுவார் என்பதுவே உண்மை .


.