Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

Sunday, July 5, 2009

ஈரோடு, Mhow -ல் சுப்ரீம் கோர்ட் கிளை -அரசிடம் கோரிக்கை

முன்பு
நான் ஈரோடு சென்று
மதுரை திரும்பும்பொழுதெல்லாம்
எனது நண்பரும் ,'
'நவின ஊடகம் '' ஆசிரியரும் ,
வழக்கறிஞருமான எஸ் .இளங்கோவன் ,
என்ன இந்த முறையாவது '' பெரியார் இல்ல''த்தை கண்டுவந்தீரா? என்பார் .
இல்லை என்ற பதிலே எப்பொழுதும் .

பொதுவாகவே, ஒருவரின் பிறந்த இடத்தையோ,வாழ்ந்த இடத்தையோ,மறைந்த இடத்தையோ பார்ப்பதால்
என்ன பயன் ?
ஒன்றும் இல்லை என்ற கருத்து எனதாக இருந்தது .

ஒரு வழக்கு விசயமாக ஈரோடு காவல்நிலையத்திற்கு சென்ற பொழுது ஆய்வாளர் வெளியே
சென்றிருந்த படியால் சற்று காலாற நடந்து வரலாம் என நண்பர் கூற ,நடக்க அங்கே
''பெரியார் நினைவில்ல''த்தைக் கண்டு உள்ளே சென்றோம் .
பெரியார் பற்றிய ஒரு நல்ல புரிதல் மேலும் .
பகுத்தறிவினால் மனித குலத்தின் உயர்விற்கு உழைத்த அவரின் தொண்டு நேரடியான
பாதிப்பை ஏற்படுத்துயது .
ஓரு ஆகச்சிறந்த இலக்கிய படைப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துமே அத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தியது .
அதற்கெல்லாம் காரணம் எனது நண்பர் தான் .
இலக்கியச் சந்திப்புகள் ,பகுத்தறிவுக்கூட்டங்கள் ஆகியவற்றில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும்
அவர் ,நிறைய புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வார்.
பின் நீண்ட கேட்பிற்குப்பின் திருப்பித்தருவார் .
நானும் நினைத்துக்கொள்வேன் ,படிப்பதற்கு வேண்டி காலம் தாழ்த்துகின்றார் என .
இருந்தலும் அவர் செறிவேறிய தன்மையில்லாமலே இருந்தார் .
குடும்பச்சூழல் என நினைத்துக்கொண்டேன் .
'' பெரியார் இல்ல''த்தை விட்டு வெளியே வந்த அவர் ,காவல்நிலையத்தின் பணிமுடிந்து
வெளியே வரும் வரை எதுவும் பேசவில்லை .
சரி ,கிளம்புகின்றேன் என்றேன் .
''பெரியார் மன்றம் '' இதற்கு பின்புறம்தான் இருக்கு சென்று வரலாம் என்றார் .
ஏன் என்றேன்.
நூலகத்தில் புத்தகம் எடுக்கலாம்னு ...என்றார் .
என்ன புத்தகம் வேண்டும் என்றேன்.
எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்றார் .
என் கையில் '' பெரியார் -ஆகஸ்டு 15'' மட்டும் தான் உள்ளது என்றேன் .
சரி கொடுங்கள் என்றார் .
இதை ஏற்கனவே தாங்கள் படித்தது தானே என்றேன் . மிகப்பெரிய தயக்கத்துடன் ,மன்னிக்கவும் ,
நீங்கள் கொடுக்கும் அனைத்துப்புத்தகங்களையும் வாங்கிச்சென்று அன்றே படிக்க நினைப்பேன் .
ஆனால் ,ஒரிரு பக்கங்கள் மட்டுமே படிப்பேன் அவ்வளவே .
ஆனால் ,
இன்று 'பெரியார் நினைவில்ல''த்திற்குச்சென்று பார்த்த பிறகு எனக்குள் ஒரு பொறி ஏற்பட்டது
போன்று உணர்கிறேன் .
எவ்வளவு பெரிய மனிதர் ''பெரியார் '' .
நம் காலத்தில் வாழ்ந்த அவரை தெரிந்துகொள்ளாமல் இருப்பது மூடத்தனமல்லவா ? என்ற எண்ணம்
ஏற்பட்டது என்றார் .
எனக்கு அப்பொழுது தான் ஒரு பொறி .
நாம் அப்படி இருக்கலாம் .
ஆனால்,சமுதாயத்தில் பலர் அப்படியில்லை .
அப்படிப்பட்டவர்களுக்கு ...???
அப்படிப்பட்டவர்களுக்காகவே ,
உயர்ந்த மனிதர்கள் தோன்றிய இடங்களில் அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கக்கூடிய
விதத்தில் மிகப்பெரிய அமைப்புகள் ஏற்படுத்துவதன் மூலம் அந்த அமைப்பிற்கு வருகை
தருபவர்கள் கட்டாயம் அந்த உயர்ந்த மனிதர்களைப்பற்றியும் ,அவராது கொள்கை கோட்பாடுகளையும்
அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் . மேலும் ,ஏன் இந்த அமைப்பு இங்கு வந்தது ? என்ற
கேள்விக்கு ,பகுத்தறிவும் ,மனித நேயமும் என்ற பதில் அந்த அமைப்பில்
பணிபுரிபவர்களிடமும் ,அந்த அமைப்பிற்கு வருகை தருபவர்களிடமும் , அந்த அமைப்பை
அலங்கரிப்பவர்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் .மேலும் , அந்த அமைப்பின்
பயன்பாடு மக்களை அந்த உயர்ந்த மனிதர்களை நினைத்துப்பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்தும் என்பது திண்ணம் என்ற எண்ணம் ஏற்பட்டது .

பொதுவாக ,ஒரு ஊரில் மிகப்பெரிய அமைப்புகளில் பணியாற்ற வருபவர்கள் அந்த ஊரின்
சிறப்பை அறிந்துகொள்வதும் ,சிறிதளவாவது அதனில் செயல்பட நினைப்பதும் ,மேலும்
,அவ்வவ்வூரில் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவ்வூரின் சிறப்பை பேசும் போதெல்லாம்
மனதில் அதன் தாக்கம் ஏற்பட்டு இயங்குவதும் இயல்பாகும் -இது உளவியல் .

இத்தருணத்தில் தான்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
நாட்டின் முக்கிய நகரங்களில் அமைக்க
சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளதை படித்தேன் .
பிற நகரங்களில் சுப்ரீம் கோர்ட் கிளைகளை அமைப்பதற்கு பதிலாக
பெரியார் பிறந்த ஈரோட்டிலும் ,
அம்பேத்கார் பிறந்த *Mhow* விலும்
அந்த மனித நேய தலைவர்களுக்கு
நீதித்துறையின் மூலமாக கொடுக்கும்
சரியான மரியாதையாக இருக்கும் .
இதன் மூலம் அவர்களை பலதரப்பட்ட மக்கள் மேலும் அறிந்து கொள்வர் என்பது உண்மை .

ஆகவே ,
ஈரோடு
மற்றும்
Mhow -ல்
சுப்ரீம் கோர்ட் கிளைகளை
அமைக்க அரசிடம்
கோரிக்கை வைக்கிறேன் .
தாங்களும்
கோரிக்கைகள் வைக்க வேண்டுகிறேன் .


எனவே ,
பகுத்தறிவுப் பகலவன் பெரியார் பிறந்த மண்ணை , சட்டமேதை அம்பேத்கார் பிறந்த மண்ணை
மதிக்கவேண்டும் ,
அவர்களின் புகழினை பரப்ப வேண்டும் ,
அவர்களின் கொள்கை கோட்பாடுகளை வளர்க்கவேண்டும்
என்ற எண்ணமுள்ள
ஒவ்வொரு மனிதரும்
அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுகிறேன் .


காந்திக்கும் அப்படியே ...



என
நண்டு .


.


.


.

Saturday, February 21, 2009

நாட்டுடமையாக்கலும் -பெரியாரும்

.


இலக்கியவாதிகளின் எழுத்துக்கள்
மற்றும்
நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள்
மற்றும்
தேசியவாதிகளின்
உடைமைகள் ,எழுத்துக்கள்
ஆகியவைகள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

நிறைய வேறுபாடுகள் உண்டு .


ஒரு சிந்தனையாளராக பெரியாரை நினைக்கும் எவரும் அவரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேமாட்டார்கள்.
ஏனெனில் நாட்டுடமையாக்கல் என்றால்
என்ன என்பது பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தெரியும் .


பாமரத்தனமானவர்களின் பார்வைக்கு ....


பெரியாரின் எழுத்துக்கள்
அழிந்து வருகிறது
அதனின்று அதனை காப்பாற்ற
நாட்டுடமையாக்கப்படுவதல் மட்டுமே முடியும்
என்ற நிலையில்,
மற்றும்
பெரியாரின் எழுத்துக்கள்
மக்களால் அறியப்படவேயில்லை
எனவே
நாட்டுடமையாக்கப்படுவதால் மட்டுமே
மக்கள் மத்தியில் அறியப்படவைக்க முடியும் அப்பொழுதுதான்
அது சாத்தியமாகும்
என்ற நிலையில்
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால்
அது மிகவும் நியாயமாக இருக்கும் .
தவிர்த்து,
பெரியாரின் கொள்கைகள்
அனைத்தும் உயிர்ப்புடன்
உள்ள நிலையில்
அவர் ஆரம்பித்த
அனைத்தையும்
அவரின் அன்பினைப்பெற்ற
அவரின் நேரடியான
அன்பர்களால்
நிர்வகிக்கப்பட்டும் ,
செலுமைப்படுத்தப்பட்டும்
வரும் நிலையில்
பெரியாரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைப்பது்

பாமரத்தனமாக உள்ளது .

பெரியாரை பெரியாராக மட்டுமே பார்க்கவும்.
அடையாளமாக பார்ப்பது பாமரத்தனமாகும் .


.
.