Saturday, February 21, 2009

நாட்டுடமையாக்கலும் -பெரியாரும்

.


இலக்கியவாதிகளின் எழுத்துக்கள்
மற்றும்
நாட்டுக்கு உழைத்த நல்லோர்கள்
மற்றும்
தேசியவாதிகளின்
உடைமைகள் ,எழுத்துக்கள்
ஆகியவைகள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

சிந்தனையாளர்களின் எழுத்துக்கள்
நாட்டுடமையாக்கப்படுவதற்கும்

நிறைய வேறுபாடுகள் உண்டு .


ஒரு சிந்தனையாளராக பெரியாரை நினைக்கும் எவரும் அவரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவேமாட்டார்கள்.
ஏனெனில் நாட்டுடமையாக்கல் என்றால்
என்ன என்பது பகுத்தறிவாளர்களுக்கு மட்டுமே தெரியும் .


பாமரத்தனமானவர்களின் பார்வைக்கு ....


பெரியாரின் எழுத்துக்கள்
அழிந்து வருகிறது
அதனின்று அதனை காப்பாற்ற
நாட்டுடமையாக்கப்படுவதல் மட்டுமே முடியும்
என்ற நிலையில்,
மற்றும்
பெரியாரின் எழுத்துக்கள்
மக்களால் அறியப்படவேயில்லை
எனவே
நாட்டுடமையாக்கப்படுவதால் மட்டுமே
மக்கள் மத்தியில் அறியப்படவைக்க முடியும் அப்பொழுதுதான்
அது சாத்தியமாகும்
என்ற நிலையில்
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தால்
அது மிகவும் நியாயமாக இருக்கும் .
தவிர்த்து,
பெரியாரின் கொள்கைகள்
அனைத்தும் உயிர்ப்புடன்
உள்ள நிலையில்
அவர் ஆரம்பித்த
அனைத்தையும்
அவரின் அன்பினைப்பெற்ற
அவரின் நேரடியான
அன்பர்களால்
நிர்வகிக்கப்பட்டும் ,
செலுமைப்படுத்தப்பட்டும்
வரும் நிலையில்
பெரியாரின் எழுத்துக்களை
நாட்டுடமையாக்கவேண்டும் என்ற கோரிக்கையை
முன்வைப்பது்

பாமரத்தனமாக உள்ளது .

பெரியாரை பெரியாராக மட்டுமே பார்க்கவும்.
அடையாளமாக பார்ப்பது பாமரத்தனமாகும் .


.
.