Thursday, December 24, 2009

ஆட்டுக்குட்டிகளும் ,ஆறாவது அறிவும் -நானும் ,டோமிப்பயலும் .

.


என் நண்பனின் ஊருக்கு
விடுமுறையைக்கழிக்க
சென்றிருந்த பொழுது
நடந்த
ஒரு நிகழ்வு .
இது நடந்து 30 வருடம் ஆகுது .

அப்பல்லாம்
கிராமத்துப்பக்கம்
காலைக்கடனை முடிக்க
வெளிக்காட்டுக்கு
போரது தான் வழக்கம் .

அவங்க ஊருல
ரயில்வே பாதை போகுது .
அத ஒட்டி இருத்தது
வெளிக்காடு.

ரயிலு வர நோரத்துல
எனக்கு
அவசரம் என்றதால்
மட்ட மதியம்
போனேம் .

நாங்க போன சமயம்
ஆடுக
மேஞ்சுக்கிட்டிருந்த்து .

சற்றோ தயக்கத்துடன் நான் .
மேய்ப்பனை பார்த்து .

ஆடுகள் ஏனே
இயல்பில்
தண்டவாளங்களை
கடக்க ஆரம்பித்தன .

சற்று ஆறுதல் மனத்தில்
அந்தப்பக்கம் போய்விடுவார் என.
அந்தப்பக்கம் போய்விட்டால்
எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .

இரயில் வரும் சப்தம் .

மேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த

வந்துவிட்டது இரயில் .

ஆடுகள்
அந்தப்பக்கம் போனவைகள்
பார்த்து
இரயிலை
பொறுட்படுத்தாமல்
கடக்க ....

இறக்கும் தனது
சக ஜீவன்களைக்கண்டும்
சென்று கொண்டிருத்தன .


மேய்ப்பவர் கடக்க இருந்த
மீத ஆடுகளை
முடிந்த வரை
கூச்சலிட்டு தடுக்க .

5 ஆடுகள் பலியாயின .


எனக்கு ஒன்றும் ஓடவில்லை .

ஆடிவிட்டது ஆடி .

அவரிடம் சென்றேம் .

மேய்பவரும் சிறுது வருத்தப்பட்டார் .

விபத்தில் தப்பிய
ஆடுகளை
மனம் பதைக்க பதைக்க
கட்டிப்பிடித்தேன் .

அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .

எனக்கு வியப்பாக இருந்தது .

நண்பனிடம் கேட்டேன் .

அவன் சொன்னால்

இந்த மந்தை ஆடுகள் இப்படித்தான் .

தனக்கு முன் செல்வதைப்பார்த்து
ஏன் ,எதுக்குனே
தெரியாம பின்தொடரும் .

அதுக்குனு அறிவு வளத்தாது .

முன்னாடி போரதுக்கும் அது கிடையாது .
ஏதே வாழுதுக .

தான் செத்தாலும் கவலைப்படாது ,
கூட இருக்கரதப்பத்தி கவலையும் படாது .


இன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும் .
மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா
கழிச்சு போகும்
அவ்வளவு தான் .

குறஞ்ச விலைக்கு போகுதேங்கர
கவலையத்தவுத்து வேற கவலை
மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .

.......


பகுத்தறிவு - 6வது அறிவு .

மனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் .
மத்ததெல்லாம் குறைவாம் .

எனக்குத் தெரிந்த
அனைவரிடமும்
நான் கேட்ட ஒரே கேள்வி .

6வது அறிவு பகுத்தறிவு
எனில்
மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன ?

99% நபர்களால் சரியாக
கூறமுடியவில்லை .

4 தோறுது அவ்வளவே .

நீங்களும் கூறிப்பார்க்களாமே .

பெரும்பான்மையினருக்கு
தெரியவில்லை
என்பதால்
5 அறிவுதானு இனி ஏத்துக்களாமுனு
ஒத்துக்களாமே .


.....


எங்க குட்டி செல்லப்பயல் (பையன் இல்லை)
டோமிப்பயல் .
அவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .
அது ..
குண்டு ..குண்டு டோமி டா..
குட்டி .. குட்டி டோமி டா..
குட் ..குட் டோமி டா..
குடு குடுனு வருவான்டா ..

இப்படி பாடுனதும்
எங்க குட்டிமா
குடுகுடுனு ஓடிவந்து மடியில
படுத்துக்குவான் .

ரொம்ப செல்லம் ...

அவனுக்கு நிறைய அறிவு .

நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .


ஏதாவது தப்பு செஞ்சானா
உடனை
காலைத்துக்கி
மன்னிப்பு கேப்பான் .
மேல படத்தில பாருங்க தெரியுதா .

காவலுக்கு கெட்டிக்காரன் .

சுறுசுறுப்பானவன் .

கொஞ்சுனா ....
எப்படி ரசிப்பான் தெரியுமா .

காலடியிலே கிடப்பான் .

அவனுக்கு வேண்டியது

வயித்துக்கு ..... அவ்வளவே ...

அதற்கு அவன் கொடுப்பது

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

அவனில்லாவிட்டால்
எமக்கு
உண்மையில்
உலகே இருமைதான் .
அவன் தான்
எனக்கு
சகலமும் .


...


இப்ப நாமெல்லாம்
இப்படித்தான்
வளர்ந்துகொண்டு வரேமுனு நினைக்கிறேன் .

அய்யா பகுத்தறிவுப்பகலவரே

6 அறிவுகள்
என்னானு சொல்லாம

6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா

நாங்க என்ன செய்ய ...

5 லேயே நிககுரோம் ...


.


.

.

Monday, December 21, 2009

அரிசி தமிழனின் உணவா ?

.

நண்டு: வணக்கம் நொரண்டு


நொரண்டு :ஏன் நண்டு


நண்டு: எனக்கு ஒரு சந்தேகம் ?


நொரண்டு : என்ன ?


நண்டு: அரிசி தமிழரின் உணவா ?


நொரண்டு :புரியவில்லை


நண்டு: அட ,
நமது உணவுகள் பதார்த்தங்கள் அனைத்தும்
தற்பொழுது
அரிசியினால் செய்யப்படுபவைகளே.
அரிசியில்லாமல் நமது உணவு வகைகளே இல்லை என்று கூறலாம் .
அப்படிப்பட்ட அரிசியை நாம் ஆரம்பம் தொட்டே பயன்படுத்தி வருகின்றோமா?

நொரண்டு :RICE என்ற சொல்லே அரிசி என்ற சொல்லில் இருந்து தான் வந்தது என்பதினின்று
நாம் அதற்கு உரிமைகோரலாமே ..

நண்டு: இது தவறான பார்வை .

நொரண்டு : என்ன செல்லவர்ர

நண்டு: அட ,சங்க நுற்களில் அரிசியைப்பற்றி ஒரு குறிப்பு இல்லை .
திணை போன்றவைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது .

நொரண்டு :அப்படியயேனில்
அரிசியை என்றிலிருந்து பயன்படுத்தி வந்தான் ?.

நண்டு: அது குறித்தான ஆய்வுகள் கட்டாயம் தேவையாக உள்ளது .


நொரண்டு :சரி தான் ,உனக்கு என்ன ஆச்சு ?

நண்டு: ஒன்னுமில்லை , இப்போவேல்லாம்
கம்மஞ்சோறு ,
கேப்பக்கழி ,
ராகி கூலு
எல்லாம்
இல்லாமல் போனதோடு
மட்டுமல்லாது ,
அதப்பத்தி பேசரதோ ,
சாப்டதா சொல்ரதோ கூட
கோவலமா நினைக்கப்படுவது என்பது என்னமோ
நாம் எதையோ இழந்த விட்ட மாதிரி இருந்துச்சு அதனால் தான் .

நொரண்டு :அதனால்

நண்டு: நாம் இது போன்று எத்தனை அடையாளங்களை இழந்திருக்கின்றோம்
என நினைக்கும் பொழுது
மனது கனக்கிறது .

நொரண்டு :.....

நண்டு: .......

நொரண்டு :......

.


.


.

Wednesday, December 2, 2009

கட்டாய திருமணப்பதிவு -அரசுக்கு ஒரு வேண்டுகோள்


.













நண்டு: வணக்கம் நொரண்டு ஏதாவது சிறப்புச் செய்திகள் ...

நொரண்டு: நண்டு திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்னூ அரசு
அறிவித்துள்ளது தெரியுமா ?

நண்டு: தெரியும் ,நல்ல விசயம் தானே ....

நொரண்டு: கட்டாயம் என கூறிய பின் ,அதற்கு எளிய வழியை கடைப்பிடிக்காமல் ...

நண்டு: புரியவில்லை

நொரண்டு: இதற்கு முன் நடந்த 99 % திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாகவே
வரலாறு இல்லை ,காரணம் தெரியுமா ?

நண்டு: நீயே சொல்லூ ..

நொரண்டு: பதிவு செய்வதிலுள்ள சிக்கல்....
முதலில் ,அதாவது அரசன் அரசிகள் கலத்துல சொத்துருக்கரவர்கள் மட்டுமே மனுசங்க,அவங்க மட்டுமே அரசில் அங்கம் .
நம்ம நாட்டுலையும் சுதந்திரத்திற்கு
முன் அப்படி இருந்தது,
அதனால சொத்திருக்கவங்களின் திருமணம் மட்டுமே திருமணமாக அங்கிகரிக்கப்பட்டது .
அதனால் சொத்து எங்கு பதிவு செய்யப்படுகிறதோ இங்கு திருமணமும் பதிவு செய்யப்பட்டது .
அப்பத்தானே சொத்துருக்கரவர்கள் மட்டுமே குடிமகனாக அங்கிகரிக்க முடியும் ....

நண்டு: சரி பழைய கதை இருக்கட்டும் ...

நொரண்டு: சுதந்திரத்திற்குப்பின் அப்படியே பலவிசங்கள் தொடர்ந்தது போல் இதிலும் தொடந்தது ...

நண்டு: பழைய கதையவிடு ...இப்ப என்ன சொல்லவர ...

நொரண்டு: அட , மக்களாட்ச்சியில் சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய
வேண்டும் ...

நண்டு: அதற்கு இப்ப என்ன ?

நொரண்டு: இந்த சட்டத்தின் நன்மைகள் எளிமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதுவே
எனது கோரிக்கை .

நண்டு: எப்படி ..

நொரண்டு: பிறப்பு ,இறப்பை எப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்கின்றேமே
அதுபோலவே திருமணமும் உள்ளாட்சி அமைப்புகளிலேயே பதிவு செய்ய அனுமதிக்கலாமே .
மேலும் ,எதற்கொள்ளாமோ இலவசம் இருக்கும் பொழுது இதற்கு மட்டும் 100 எதற்கு . மனமொத்து
காதல் திருமணம் செய்பவர்களிடம்
சட்டம்''4(C)-ல் திருமண அழைப்பிதழ் அல்லது திருமணம் நடைபெறும் இடத்தை குறிப்பிடும்
ஏனைய ஆதாரம் ''
என கேட்டால் எங்கிருத்து வரும் , மேலும் , இது தான் திருமணத்தை உறுதி
செய்கின்றதா .

இப்படித்தான் பழைய பதிவு முறையில் இருந்த வரம்பிற்கு மீறிய அரசர் காலத்து
கட்டுப்பாடுகளால் யாரும் அந்தப்பக்கமே போனதில்லை . திரும்பவும் சற்று சிறிய
மாற்றத்துடன் தொடர்வது . அதற்கு தண்டனை எனக்கூறுவது ஜனநாயகமன்று .

நண்டு: அதற்கு என்ன செய்யச்சொல்ற ...

நொரண்டு: உள்ளாட்சி அமைப்பிடம் பதிவிற்கான அதிகாரத்தை கொடுத்து ,இலவசமாக
பதிவுச்சான்றிதழ் வழங்குவதே சாலச்சிறத்தாக இருக்கும் .
அதை அரசு செய்தால் நலமாக இருக்கும் .

நண்டு: மிக நல்ல யோசனை தான் .
அரசுக்கு ஒரு வேண்டுகோளாக நான் இதனை வைக்கின்றேன் .
இதைப்படிப்பவர்களும் வைப்பார்கள் என நம்புகின்றேன் .
அரசும் இதனை பரிசீலிக்கும் என
நம்புகின்றேன் .


நொரண்டு: எனவே,
. இதன்முலம் ஒரு வேண்டுகோள் ::
. தமிழக முதல்வர் அவர்களே ,
. மிக நல்ல பலனை மக்கள் அடைய ...
. உள்ளாட்சி அமைப்பிடம் திருமண பதிவிற்கான
அதிகாரத்தை கொடுத்து ,
இலவசமாக பதிவுச்சான்றிதழ்
வழங்க வேண்டுமாய்
மக்களின் சார்பாக வேண்டுகிறேன் .
தாங்கள் செய்வீர்கள்
என
நம்புகின்றேன் .





.



.


.