Thursday, December 24, 2009

ஆட்டுக்குட்டிகளும் ,ஆறாவது அறிவும் -நானும் ,டோமிப்பயலும் .

.


என் நண்பனின் ஊருக்கு
விடுமுறையைக்கழிக்க
சென்றிருந்த பொழுது
நடந்த
ஒரு நிகழ்வு .
இது நடந்து 30 வருடம் ஆகுது .

அப்பல்லாம்
கிராமத்துப்பக்கம்
காலைக்கடனை முடிக்க
வெளிக்காட்டுக்கு
போரது தான் வழக்கம் .

அவங்க ஊருல
ரயில்வே பாதை போகுது .
அத ஒட்டி இருத்தது
வெளிக்காடு.

ரயிலு வர நோரத்துல
எனக்கு
அவசரம் என்றதால்
மட்ட மதியம்
போனேம் .

நாங்க போன சமயம்
ஆடுக
மேஞ்சுக்கிட்டிருந்த்து .

சற்றோ தயக்கத்துடன் நான் .
மேய்ப்பனை பார்த்து .

ஆடுகள் ஏனே
இயல்பில்
தண்டவாளங்களை
கடக்க ஆரம்பித்தன .

சற்று ஆறுதல் மனத்தில்
அந்தப்பக்கம் போய்விடுவார் என.
அந்தப்பக்கம் போய்விட்டால்
எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .

இரயில் வரும் சப்தம் .

மேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த

வந்துவிட்டது இரயில் .

ஆடுகள்
அந்தப்பக்கம் போனவைகள்
பார்த்து
இரயிலை
பொறுட்படுத்தாமல்
கடக்க ....

இறக்கும் தனது
சக ஜீவன்களைக்கண்டும்
சென்று கொண்டிருத்தன .


மேய்ப்பவர் கடக்க இருந்த
மீத ஆடுகளை
முடிந்த வரை
கூச்சலிட்டு தடுக்க .

5 ஆடுகள் பலியாயின .


எனக்கு ஒன்றும் ஓடவில்லை .

ஆடிவிட்டது ஆடி .

அவரிடம் சென்றேம் .

மேய்பவரும் சிறுது வருத்தப்பட்டார் .

விபத்தில் தப்பிய
ஆடுகளை
மனம் பதைக்க பதைக்க
கட்டிப்பிடித்தேன் .

அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .

எனக்கு வியப்பாக இருந்தது .

நண்பனிடம் கேட்டேன் .

அவன் சொன்னால்

இந்த மந்தை ஆடுகள் இப்படித்தான் .

தனக்கு முன் செல்வதைப்பார்த்து
ஏன் ,எதுக்குனே
தெரியாம பின்தொடரும் .

அதுக்குனு அறிவு வளத்தாது .

முன்னாடி போரதுக்கும் அது கிடையாது .
ஏதே வாழுதுக .

தான் செத்தாலும் கவலைப்படாது ,
கூட இருக்கரதப்பத்தி கவலையும் படாது .


இன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும் .
மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா
கழிச்சு போகும்
அவ்வளவு தான் .

குறஞ்ச விலைக்கு போகுதேங்கர
கவலையத்தவுத்து வேற கவலை
மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .

.......


பகுத்தறிவு - 6வது அறிவு .

மனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் .
மத்ததெல்லாம் குறைவாம் .

எனக்குத் தெரிந்த
அனைவரிடமும்
நான் கேட்ட ஒரே கேள்வி .

6வது அறிவு பகுத்தறிவு
எனில்
மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன ?

99% நபர்களால் சரியாக
கூறமுடியவில்லை .

4 தோறுது அவ்வளவே .

நீங்களும் கூறிப்பார்க்களாமே .

பெரும்பான்மையினருக்கு
தெரியவில்லை
என்பதால்
5 அறிவுதானு இனி ஏத்துக்களாமுனு
ஒத்துக்களாமே .


.....


எங்க குட்டி செல்லப்பயல் (பையன் இல்லை)
டோமிப்பயல் .
அவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .
அது ..
குண்டு ..குண்டு டோமி டா..
குட்டி .. குட்டி டோமி டா..
குட் ..குட் டோமி டா..
குடு குடுனு வருவான்டா ..

இப்படி பாடுனதும்
எங்க குட்டிமா
குடுகுடுனு ஓடிவந்து மடியில
படுத்துக்குவான் .

ரொம்ப செல்லம் ...

அவனுக்கு நிறைய அறிவு .

நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .


ஏதாவது தப்பு செஞ்சானா
உடனை
காலைத்துக்கி
மன்னிப்பு கேப்பான் .
மேல படத்தில பாருங்க தெரியுதா .

காவலுக்கு கெட்டிக்காரன் .

சுறுசுறுப்பானவன் .

கொஞ்சுனா ....
எப்படி ரசிப்பான் தெரியுமா .

காலடியிலே கிடப்பான் .

அவனுக்கு வேண்டியது

வயித்துக்கு ..... அவ்வளவே ...

அதற்கு அவன் கொடுப்பது

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

எஜமான விசுவாசம் ...

அவனில்லாவிட்டால்
எமக்கு
உண்மையில்
உலகே இருமைதான் .
அவன் தான்
எனக்கு
சகலமும் .


...


இப்ப நாமெல்லாம்
இப்படித்தான்
வளர்ந்துகொண்டு வரேமுனு நினைக்கிறேன் .

அய்யா பகுத்தறிவுப்பகலவரே

6 அறிவுகள்
என்னானு சொல்லாம

6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா

நாங்க என்ன செய்ய ...

5 லேயே நிககுரோம் ...


.


.

.