Friday, January 1, 2010

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் .

.

நொரண்டு :வள்ளுவர் என ஒருத்தர் இருந்தாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :திருக்குறள் என்ற பெயரில் தான் எழுதினாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :1330 குறள் தான் எழுதினாரா ?

நண்டு:கூடவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம் .

நொரண்டு :அப்படினா ...

நண்டு:இடைச்செருகல்கள் பல ...

நொரண்டு :புரியவில்லை .

நண்டு:பாரதியில் கூட இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கு தெரியுமா ?

நொரண்டு :பாரதியவிடு ...வள்ளுவருக்கு வா .

நண்டு:நிறைய இடைச்செருகல்கள் ..

நொரண்டு :எதனால் ?

நண்டு: வள்ளுவர் தனது அருமையான கருத்துக்களை எளிமையாக கூறிய மிகச்சிறந்த ஒரு
சிந்தனையாளர் .

மேலும்

'உலகின் முதல் சிந்தனையாளரும் '

இவரே.


நொரண்டு :ஓ.!!!!

நண்டு: அவரின் கருத்துக்கள்
அவரின் காலத்திலும் ,
பின்னிட்டும்
சமுதாய ஏற்றத்திற்கு
ஆதாரமாக இருப்பதாலும் , எக்காலத்திலும் எவருக்கும் ஏற்புடையதாக இருப்பதாலும் ,
குறைவில்லாத
தெளிந்த சிந்தனையுடன்
காலத்தால்
அனைத்தையும் விஞ்சி இருப்பதாலும். மூத்த குடியின்
தரமான
தரணிபோற்றும்
கருத்தாக இருந்ததாலும் .
தமிழில் இருந்ததாலும் .

நொரண்டு :இடைச்செருகல் செய்தது யார் ?

நண்டு: முதலாம் வேற்றரசுக்காலத்தினரும் ,தமிழரசு எழுச்சிககாலத்தினரும் மற்றும் அதற்குப்
பிந்தையோரும் .

நொரண்டு :சரியாகச்சொல்லவும்.

நண்டு:கி.பி.250 லிருந்து .

நொரண்டு :அப்படியெனில் வள்ளுவர் காலம் .

நண்டு:தொல்காப்பியத்திற்கும்
முந்தியது .

நொரண்டு : ஓ...ஓ.....

நண்டு:திருக்குறளை அதன் மூலத்தினின்று ஆய்ந்தால் .
சிந்துவை காணலாம் .

நொரண்டு :எப்படி ?

நண்டு:அதிகாரம் 75 ஐ படிக்க

நொரண்டு :
கல்தோன்றா மண் தோன்றா முத்த குடி யாருக்கு தேவையோ அவர்கள் பாத்துக்கட்டும்.
நீ இடைச்செருகல் செய்தது யார் ? என கூறு .

நண்டு: சரி ,
வள்ளுவரை மதவாதியாக ஆக்க மதவாதிகள் .

நொரண்டு : ஏன்
இவரே எதாவது ஒரு மத அடிப்படைவாதியாக இருந்திருக்கலாம் இல்லையா .

நண்டு:சரியான பார்வைதான் ,
ஆனால்
எந்த மதத்தை அவர் பின்பற்றியிருப்பார் என்பதற்காகத்தான்
இடைச்செருகல் செய்தது .

நொரண்டு :அவர்
எதை பின்பற்றியிருப்பார் என
நீ நினைக்கின்றாய் ?.

நண்டு:சிந்துவிற்கு முந்தைய
தமிழன் பின்பற்றிய வாழ்க்கைமுறையை .

நொரண்டு :நீ சிந்துவிற்கு போகாதே . இடைச்செருகல் செய்தது யார் ? .

நண்டு: தொகுத்தவர்கள் ...

நொரண்டு :தொகுத்தவர்களா , மதவாதியாக ஆக்க மதவாதிகளா ? குழப்பாதே .

நண்டு: தொகுத்த மதவாதிகள் .

நொரண்டு : யார் ?

நண்டு: யார் ?

நொரண்டு : அது தான் யார் ?

நண்டு: பல மதத்தவரின் இடைச்செருகல்கள்
இருந்தாலும் .
கடைசியாக
நம் கையில் கிடைத்திருப்பது
இந்து மதத்தினரின்
இடைச்செருகல்கள்
அதிகம் கொண்ட
திருக்குறள் .

நொரண்டு :எப்படி சொல்கின்றாய் ?

நண்டு:தமிழ் இலக்கிய வர்ரலாற்றை படி

நொரண்டு :சுருக்கமா சொல்லுப்பா . எங்களுக்கு அதப்பத்தியெல்லாம் தெரியவேண்டியது
அவசியமில்லை

நண்டு: அப்படினா இது புரியாது .

நொரண்டு : அதெல்லாம் முடியாது .
நீ சொல் .

நண்டு: சரி .
சமய வெறியாட்டங்கள நேரங்கிடச்சா தெரிஞ்சுக்க .
இப்ப
குறள் 543 ,
குறள் 556 மற்றும் குறள் 560
ஆகிய 3 மட்டும் படி .
அவைகள் இடைச்செருகல்கள் .

.... மேலும் இடைச்செருகல்கள் தொடரும் ...


.


.

.