Saturday, January 9, 2010

ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் ...



.


.



நொரண்டு :ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் ...

நண்டு : என்ன , ரொம்ம குசியா இருக்க ...

நொரண்டு : ஆமாம்ப்பா ,ஆமாம் .கண்டகண்டத யோசிக்காம ஆண்டவன் கொடுத்ததை அனுபவிக்கலாமுனு பாட்டு பாடிக்கிட்டு ... பாட்டகேள் ,''ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் ...என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் ...''
ஹக்...ஹக்...ஹா...

நண்டு : ம்...

நொரண்டு : இது 21ம் நூற்றாண்டு ,மனிதனை அனுபவிடானூ ஆண்டவன் அனைத்தையும் வாரி,வாரி அவவனுக்கு கொடுத்து அனுபவிக்கவே விட்டுவிட்ட யுகம் ....

நண்டு : ம்...ம்...

நொரண்டு :என்ன ,இதுக்கும் வள்ளுவர் ஏதாச்சும் சொல்லிருக்காரானு யோசிக்கிறையா ?

நண்டு : ம்...ம்...ம்...


நொரண்டு :என்ன சொல்ற ?

நண்டு :

'' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ''

இதுக்கு பொருள் தெரிஞ்சா நீ ...


நொரண்டு : இதுக்கு ...


நண்டு : யார் ,யாரு என்ன சொல்லிருக்காங்கனு ,அதான சொல்ல வர .

நொரண்டு :ம்..

நண்டு : பரிமேலழகர் உரையமட்டும் சொல்லு ?

நொரண்டு :

'' கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் அடையா.''

நண்டு : மு.வ ....

நொரண்டு :இதா ,உனக்கு தெரியாதா , உன் கருத்துரைய கூறு.

நண்டு :


''இருள் சேரும் ,

இருவினையும் சேராது ,

இறைவன் கொடுத்த பொருளை சேர்த்தவன் என்ற புகழுடன் வாழ்பவரிடத்து .''


நொரண்டு : அப்படியா


நண்டு : இங்கு இறைவன் என்பது அரசையும் குறிக்கும் . சேர் என்பதில் அடைந்தவன் ,பெற்றவன் என்பதும் அடங்கும் .

நொரண்டு : ஜாலியா இருந்தேன் ....





.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் -6




.


.