Thursday, January 21, 2010

எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன் ...


.


நொரண்டு : காந்தியடிகள் தமிழ் கற்றாரா ...

நண்டு : ....

நொரண்டு : திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு : ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் .
திருக்குறளை
அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? .
மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :
ஆம் .
அதிக கலைச்சொற்களை பயிலுதல்
அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் .
மொழிபெயர்ப்பு ....

நொரண்டு : ஏன் ?

நண்டு :நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில்
குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கோட்கவேண்டிய கேள்வி .

நொரண்டு : ஓ ...

நண்டு : ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம் அதனை கற்றபது தான் சிறப்பு என
கூறுகின்றார் .

நொரண்டு : ஓ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் ,
கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ஓ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :
மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். ''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு



என்றும் ...


நண்டு :நீ சொல்வருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .
அமிழ்து என்பது தமிழே கிடையாது .
அதுவும் திருவள்ளுவர் காலத்தில்
சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது .
அமிழ்து என்பது பின்னாள் சேர்த்துக்கொண்ட
ஒரு சொல் .
சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம்
தனித்தமிழ் காலம் .
தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ஓ ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .
அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .
அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ்
பண்பாட்டை .
அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால் தமிழ் என வருமென்றும் சொல்லி
ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை
புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் .
நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் .
தேவர்களை ஏற்றுக்கொண்டால்
அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே .
இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு...
எங்கேபோய்
முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன்.
தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு : அடப்பாரதேசிகளா ...

நண்டு :ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும்
கடினப்பட்டே ஆனால் அமைப்பை உடைக்கும் திறனற்று .
அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .
குறளின் சிறப்பே இது தான் .
இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார்
போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...
குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு : ஆகா...ஆகா ...

.


.

.

.வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...

தொடரும் ....

.

.


.