Tuesday, January 5, 2010

திருவள்ளுவர் சிந்தனையாளரெனில் ...

.


நோரண்டு :

திருவள்ளுவர் சிந்தனையாளரெனில்...

நண்டு :

என்ன எனில்
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளர்னு சொல் .

நோரண்டு :

சரி ,
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளரெனில் ...
திருக்குறளில் எனக்குள்ள சந்தேகம் என்னானா ?

நண்டு : என்ன ?

நோரண்டு : என்னானா ?

நண்டு : என்ன ?


நோரண்டு :

சரி ,

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ''

கருத்தென்ன சொல் பாப்போம் ?


நண்டு :

ஆதி பகவனுக்கு
முன் தோன்றியது
அகரத்தை முதலாகக்கொண்ட
தமிழ் எழுத்துக்கள்.


நோரண்டு : புரியல ...

நண்டு :

இதிலிருந்து கடவுளுக்கு முன் எழுத்துக்கள் தோன்றியது என்கின்றார் .

நோரண்டு : புரியல ...


நண்டு :

மனிதன் தோன்றும் பொழுது கடவுள் தோன்றவில்லை . எழுத்துக்கள் தோன்றியபொழுதும் கடவுள்
தோன்றவில்லையடா மனிதா என்கின்றார் .


நோரண்டு :

இது யாருடைய உரை?.
உன் உரையா ?
நீ சொன்னப்புறம்
நான் படித்த
உரைகளில்
எதிலும் இப்படியில்லையோ .


நண்டு :

ஆம் ,எனது உரை தான் .

நீ என்னடானா ,
யாரோ எழுதிய உரையை வைத்து
ஒரு சிந்தனையாளனை ,
கவிஞனை
புரிந்துகொண்டேன் ,
எனக்கூறுவது
உனக்கே முட்டாதனமாக
தெரியவில்லையா.
உனக்குனு அறிவில்லையா ?.
நீ சிந்திக்கவே மாட்டாயா ?.
.

நோரண்டு:

அப்படியாக்கிவிட்டார்கள் எங்களை.

நண்டு :

யாரைக்குறை செல்கின்றாய் .
இப்பொழுது
உன்னால்
சிந்திக்க முடிகின்றது தானே .
ஏன் சிந்திக்க மாட்டேங்கர .

நோரண்டு :

நீ மட்டும் சொன்ன ..


நண்டு :

நான் என்ன சொன்னேன்...

நோரண்டு :

அதுக்கொல்லாம் காரணம் சிலருனூ ...

.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -3 ...தொடரும் .


.


.


.

.

.