Wednesday, January 13, 2010

போங்கடா...நீங்களும்...

.

நொரண்டு : படத்த பாரு ?

நண்டு :என்ன
எங்கோ இருட்ல எடுத்து இருக்க...செல்போனிலையா ?

நொரண்டு :ஆமாம் ,
நேத்து நானும் என் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருந்தேம் . திடிரென
என் மனைவி ஏங்க ஏங்க இங்க பாருங்க என்றாள் , பார்த்த எனக்கு ஒன்னும் புரியவில படத்துல
பாக்கர பையன் helmet போட்டுக்கிட்டு சைக்கிள ரோட்ட கிராஸ் செய்ய பாத்துக்குட்டு
இருந்தான் .நான் வண்டிய நிப்பாட்டி போட்டோ எடுத்தேன் . அவன் டிஸ்டப் ஆகல ,என்னாடா
வித்தியாசமா இருக்கானேனு அவங்கிட்டப்போய் ஏப்பா helmet போட்டுருக்கனேன்.அதுக்கு அவன்
நீங்க எதுக்கு போட்டுரிக்கீங்கனான்? தலைக்கு பாதுகாப்புக்கு என்றேன் .அவன் சொன்னான்
அதுக்குத்தான் நாங்களும் போட்டுருக்கு- னான்.இது எங்களமாதிரி வண்டிவச்சிருக்கிறவங்க
போடறது,சைக்கில் ஓட்டரவங்க போடறது வேறனு சொன்னேன் . போங்கடா...நீங்களும்...னு
செல்லிட்டு பரந்துட்டான் ..

நண்டு :அவன் கருத்தும் சரிதானே.

நொரண்டு :அதனால ...

நண்டு :நல்ல கருத்துக்களை அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் .

நொரண்டு :இல்லைனா ?

நண்டு : வாழ்க்கையே விபத்துத்தான் .

நொரண்டு :என் இப்படி சொல்ற...

நண்டு : நான் சொல்லவில்லை ...

நொரண்டு : வள்ளுவரா ...

நண்டு :ஆம்.

நொரண்டு :என்னானு ...

நண்டு :

''கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. ''

நொரண்டு :சரி ,அர்த்தம் சொல்லு .

நண்டு :

செவிடு என்பது காது என்ற கருத்தின் தவறு அல்ல,
குருடு என்பது கண்என்ற கருத்தின் தவறு அல்ல,
ஊமை என்பது வாய்என்ற கருத்தின்தவறுஅல்ல, அதுபோலவே
எண்குணத்தான் தாளை வணங்கா என்பது தலை என்ற கருத்தின் தவறு அல்ல .


நொரண்டு : இன்னும் .

நண்டு : தாளை வணங்கவேண்டும் என்ற கருத்து தான் தவறானது .

நொரண்டு : ம் ...மேலும் ...

நண்டு :
எளிமையான மனிதனுக்குத்தேவையான உயர்ந்த குண நலன்களை பெற்றவர் தலை தாளை வணங்கா.

நொரண்டு : சுருக்கமாக

நண்டு :
நல்ல கருத்துக்களை
அறிந்து
ஏற்றுக்கொண்டு
தேவையான குண நலன்களை பெற்றவர்
எளிய உயர்ந்த குறையில்லா மனிதர் .

.


.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.


.


.