Monday, January 11, 2010

என்னை யாரும் இங்கு அசச்சுக்கமுடியாது என்று இருமாப்புடன் திரியரானுக...

.



நொரண்டு :

திருப்பதி கோயிலுக்கு போறவங்க பூராம்
பெரிய பெரிய ஆளுங்களா ,
பணக்காரங்களா
இருக்காங்கப்பா .
என்ன கூட்டங்கற ...


நண்டு : ஏன்கிட்ட ஏன் சொல்ற

நொரண்டு :

இல்ல,
அவன்அவன் ...
பெரும்புள்ளியாஇருக்கறவனேல்லாம்
அங்க க்யூவில 5 மணிநேரம் 6 மணிநேரம்னு ...


நண்டு : என்ன சொல்லவர்ர ...

நொரண்டு : ம்...

நண்டு : என்ன ம்....

நொரண்டு :


நான் தான் மிகப்பெரியவன் ,
எனக்கு பதிலா எவனாவது பொறந்து தான் வரனும் ,
தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர் ,
எமக்கு நிகர் யாரும் இல்லை ,
எனக்கு உவமையாக்க்கூட
இங்கு யாருக்கும் தகுதி இல்லை ,
என் பீல்டுல நான் தான் சூப்பர் ஸ்டார் ,
நா படிக்காத விசயமே கிடையாது ,
நான் பாக்காத பணமில்லை ,
நான் போகாத ஊரில்ல ,
நான் மிகப்பெரிய சதனையாளர்
யாராலையும் எட்ட முடியாது என்னை,
எல்லாம் எனக்கு தெரியும் ,
என்ன மீறி எதுவும் நடக்காது ,
என்னால் எதையும் சமாளிக்கமுடியும் ,
என்னை யாரும் இங்கு அசச்சுக்க முடியாது
என்று
இருமாப்புடன் திரியரானுகல சிலர் இவனுகளுக்கு ஏதாச்சும் எதிர்பாராமல் நடந்துச்சுனா என்ன செய்வானுக ?

நண்டு : என்ன செய்வார்கள் ?

நொரண்டு : பதில செல்லுப்பா ?

நண்டு :

யார் கர்வத்துடன் இருந்தாலும் முதலில அவன் மடையனாகத்தான் இருப்பான் ...

நொரண்டு :

ஏய் ,ஒரேயடியா என்ன விட்டா ஒவரா போற ,
நீ என்ன பெரிய இவனா? ,
மடையங்கர ,
என்ன நினைச்சுக்கிட்ட ,
நீயும் கர்வமாத்தானே பேசற ...


நண்டு :

நொரண்டு இப்படி நீ நினைப்பதுவும்
கர்வம் தான் ..
உன்னுள் உள்ள கர்வம் இது .
உன்னால் முடிந்த
வெளிப்படுத்த முடிந்த
கர்வம் .



நொரண்டு : எப்படி


நண்டு :

எதையும் சிந்திக்காமல் ,
சொல்லவந்ததையும் புரிந்துகொள்ளாமல் ,
மடையன் என்ற வார்த்தையை கேட்டவுடனே நம்மைத்தான் என்ற முன்முடிவுடன் இருக்கின்றாய் அல்லவா ?
அது தான் அகந்தை .


நொரண்டு :ஓ ...


நண்டு :

இப்படி ''தனக்குவமை இல்லாதான் '' என தனக்குள் நினைப்பவருக்கு வரும் மனக்கவலை பற்றி வள்ளுவர் என்ன சொல்றார்னு தெரியுமா?


நொரண்டு : சொல் .


நண்டு :

''தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. ''



நொரண்டு :

இதுக்கு பரிமேலழகர் கருத்துரை
''கடவுளுடைய திருவடிகளைச் சேராதவர்களுக்கு மனக்கவலை நீங்கு்தல் இல்லை ''


நண்டு : அடுத்து ..

நொரண்டு : நீ சொல்லு ...

நண்டு :

''தனக்குவமை இல்லாதான் என்பவனால்
அவனின் மனக்கவலை மாற்றல்முடியாது
தாள்சேராவிடில் .''


நொரண்டு : இன்னும் சொல்லு ...

நண்டு : இருமாப்புடன் திரியரானுகல சிலர் இவனுகளுக்கு ஏதாச்சும் எதிர்பாராமல் நடந்துச்சுனா என்ன செய்வாங்கனு கேட்டாயல்லவா அதற்கு பதில் அவர்கள் சாமி குப்பிடப்போவார்கள் .


நொரண்டு : இப்படி சுருக்கம சொன்னா எனக்கு புரியாது விரிவா சொல்லு .

நண்டு : இத தனியா புத்தகமா போடறேன் .அதுல விரிவா சொல்ரேன், அப்ப முழுசா தெரிஞ்சுக்கோ .

நொரண்டு : அதுவரைக்கும் ...

நண்டு : ப்ளாக்லேயே படி .

நொரண்டு : சரி இதுக்கு அர்த்தம் .

நண்டு : கர்வம் கூடாது .




.




.




வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.










.





.



.