Saturday, January 23, 2010

ஈடிபஸ் காம்பஸ் -மறுதோன்றி

.

.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்

நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.

கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக

தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.

கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....

என்ற பழங்குடிகளின் பழம் பாடல் காலம் காலமாக மலைகள் முழுவதும் கேட்டுக் கொண்டே
இருக்கிறது. இன்றும்
அவர்களின் வாய்கள் அவற்றை முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது என்று ஆரம்பித்தது என்று
தெரிந்து கொண்டாலும் எப்போது முடியும் தெரியவில்லை. காரணம், ஈடிபஸ் கண்டுபிடிக்க
முடியாத இடம் நோக்கி சென்றுவிட்டான். அவனை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறு தகவல்தான்
மேற்கூறிய பழங்குடிகளின் உள்ளகுமுறல்…

ஈடிபஸ் தனது குதிரையின் மூலம் தீப்ஸிலிருந்து நகருகிறான்.
எவ்வளவு நேரம், தூரம் ஓடியது என்று தொரியவில்லை.
கண்குழியில் அதிக வலி எடுக்கவே குதிரையை நிறுத்தினான்.
குதிரையை மட்டுமே உதவியாக கொள்ள வேண்டியிருப்பதால் அதனது எண்ணத்திற்கு அதிக மதிப்பு
கொடுத்தால்தான் மீண்டும் பயணிக்க முடியும் என்பதால் குதிரைக்கு ஓய்வு கொடுக்க எண்ணி
குதிரையில் இருந்து இறங்கி அமர்ந்தான்.
கைகளாலே மெல்ல மெல்ல இடத்தின் தன்மையை ஆராய்ந்தான்.
கைகளை அங்கும், இங்கும் போட்டு துலாவினான்.
அவன் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.
ஆம், தடி ஒன்று கிடைத்துவிட்டது.
அதன் உதவியுடன் இடங்களை துலாவ ஆரம்பித்தான்.
தடி ஏதோ சலசலப்பை ஏற்படுத்த அதை நோக்கி நகர்ந்தான்.
ஒரு செடியினைக் கைப்பற்றினான்.
என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.
வேக வேகமாக அதன் இலைகளை பறித்து கண் குழிகளில் கசக்கி அப்பிக் கொண்டான். சற்று இதமாக
இருக்கவே மீண்டும் சில இலைகளை சேகரித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து கண் குழிகளில்
ஊற்றினான்.
கண் குழிகளில் குளுமை தெரியவே ஆனந்தமாக அப்படியே செடியை ஒட்டியே படுத்துக் கொண்டான்.
அதிகம் பயணித்த களைப்பில் அயர்ந்துவிட்டான். பறவைகள் சத்தங்கள் கேட்டு எழுந்தான். பறவைகளின்
சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கவே பகல்பொழுது என்று உணர்ந்து தன் கையில் கிடைத்த தடியை
மட்டும் துலாவி எடுத்தான். அதன் உதவியினால் மெல்ல எழுந்து தடியை தட்டி தட்டி நடக்க
ஆரம்பித்தான்.
குதிரையை அழைக்கும் ரகசிய மொழியில் குதிரையை அழைத்தான்.
குதிரையிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கையிலுள்ள தடியினை அங்கும் இங்கும்
வேகமாக ஆட்டினான்.
எதிரில் எதுவும் இல்லை.
குதிரை தன்னை பிரிந்து சென்றுவிட்டது என்று யூகித்துக் கொண்டான்.
இனிமேல் குதிரையை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கவலையுடன் நொந்து அமர்கின்றான்.
பிறகு குச்சியின் அளவிற்கு வேகமாக நடப்பது என்ற முடிவுக்கு வருகின்றான்.
நீண்ட தொலைவிற்கு பிறகு அவனால் எதையும் அடையமுடியவில்லை.
பறவைகளின் இரைச்சல் மட்டும் அடங்கிக் கொண்டு இருந்தது.
ஒரு கணக்கிற்கு வர ஆரம்பித்தான்.
பறவைகளின் இரைச்சலிலிருந்து பறவைகளின் இரைச்சல் வரை நகர்வது என்று முடிவு செய்தான்.
களைப்பின் காரணமாக அமர்ந்தான்.
கையில் ஏதோ தட்டுப்பட அதனை எடுத்து முகர்ந்தான்.
அது ஒரு பழம்.
உற்சாகமானான்.
பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.
உடனே உண்ண ஆரம்பித்தான்.
அங்கேயே அயர்ந்துவிட்டான்.
மீண்டும் பறவைகளின் ஒலியில் எழுந்தான்.
பசி எடுக்கவே உண்டது ஞாபகம் வந்தது. பழத்தின் மரம் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற
ஆவலில் குச்சியின் உதவியுடன் ஒரு மரத்தை கண்டுபிடித்தான்.
தான் கண்டுபிடித்த மரம் தவறானது என்று மரத்தில் ஏறிய பின்பு உணர்ந்து பல முயற்சிக்கு
பிறகு உண்மையான மரத்தினை கண்டுகொண்டான்.
அங்கேயே இருக்க முடிவு எடுத்தான்.
பொருளற்ற,
ஆள் அம்புகளற்ற,
உறுப்புகளற்ற
ஈடிபஸை
அவன் நினைத்துப் பார்க்கிறான்.
"ஓ" வாழமுடிகிறதே!
எப்படி?
எப்படி?
இவைகள்
இல்லாமல்
ஒரு நிமிடம் கூட
வாழ முடியாது
என்ற
நினைப்பில்தானே
வாழ்ந்துவந்திருக்கிறேன்.
அநேக உயிர்களையும், பொருட்களையும் அழித்தேன்.
அநேக போர்களை நான் மேற்கொண்டேன். அப்போது ஏன் தெரியவில்லை?
தெரிந்திருந்தால், மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து
மக்களுக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பேனே.
இப்போது நான் யாருக்கும் அரசன் இல்லை.
எனது வாழ்விற்காக யாரின் உழைப்பையும் சுரண்ட மாட்டேன்,
முடியவும் முடியாது.
இருந்தாலும்,
என்னால்
முன்னைவிட பிரச்சனைகளற்ற
வாழ்க்கையை
இப்போது வாழ முடிகிறது.
இருந்தாலும்
தான் முன்பு அறியாது இருந்ததுபோல்,
இன்னும் தன் நாட்டிலும், வெளியிலும் மனிதர்கள் அறியாமையில் உள்ளனர். அவர்களுக்கு நான்தான்
வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான்.
வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன்
தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான். தனது நாட்டிற்கு எதிர் திசையில்தான் பயணம்
செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே. அவன் மட்டும் சரியான பயணத்தை மேற்கொண்டிருந்தால்
தீப்ஸ் மீண்டும் மிக நல்ல ஒரு அரசனை பெற்றிருக்கும்.

அவன் அடைந்துள்ள இடம் தீப்ஸிலிருந்து கிட்டதட்ட 500 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள
ஒரு மிகப் பெரிய மலை முகடென்பது அவனுக்குத் தெரியாது.
பறவைகள், ஊர்வன, விலங்குகள் ஆகியவற்றின் நகரும் ஓசைகள், அண்மையில் ஏற்படும் வாசனைகள்,
இடத்தினை பற்றிய படிப்பினை ஆகியவற்றை அவன் இப்பொழுது நன்றாக அறிந்து கொண்டான். சில
சமயம் பலமாக தாக்கப்பட்டான் மிருகங்களால். மிருக வெறி கொண்டு தட்டுத்தடுமாறி
போரிட்டான். ஓடினான், காயமுற்றான், தடியாலடித்து துரத்தினான், கையிலிருந்த தடியை
மட்டும் எச்சூழ்நிலையில் தவறவிட்டதில்லை.
அதுதான் அவனுக்கு
வழிகாட்டியாகவும்,
ஆதாரமாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கிறது.
தடியைப் பற்றி அவனின் கருத்து இப்படித்தான் இருந்தது.
"மனிதன் வாழ்வதற்கு தன்னை தவிர்த்து பிற ஒன்று தேவை.
அது அதிகமாக அதிகமாக மனிதன் அவற்றிற்கு அடிமையாகின்றான்.
தடி எனது வழிகாட்டி.
நான் அதனை பின்பற்றுகிறேன்.
நானும் அடிமையே.
உயிரற்ற ஒன்றுக்கு".
மிருகங்களிடம் ஏற்பட்ட போரினால் தடியில் ஆங்காங்கு இரத்தக் கரைகள் அப்பிக் கொண்டன. அவைகள்
அத்தடியினை சிவப்பு நிறத்தில் பளபளக்கச் செய்தது. அவனின் உடம்பில் மிகச் சிறந்த
வீரத்தழும்புகள் ஏற்பட்டிருப்பதாக உணருகிறான்.
எவ்வளவோ மருத்துவர்களின் உதவியுடன் போர் களத்தில் ஏற்பட்ட புண்களை மருந்துகொண்டு
குணப்படுத்த முடிந்தாலும், அதிக வலியும், ஆற அதிக நாட்களும் ஆகும். ஆனால் இங்கு புண்கள்
ஆற தான் ஏதேதோ தளைகளைமட்டும் தடவிக் கொண்டாலும் உடனே குணமாகிவிடுகிறதே என வியந்தான்.
நீரோடைகளின் சலசலப்பு,
மலைகளின் கலகலப்பு
பள்ளத்தாக்குகளின் கலகலப்பு,
ஆற்றின் சலசலப்பு,
அடர்ந்த காடுகளின் சலசலப்பு,
விலங்குகளின் குரல்,
அவைகளின் அசைவுகளினால் ஏற்படும் சலசலப்பு
ஆகியவற்றை துல்லியமாக கணிந்து
ஒவ்வொன்றுக்கும் சரியான தீர்வை வைத்திருந்தான்.
காற்று வாசனைகளை கடத்துகின்றது.
அதன் மூலம் அருகில், தூரத்தில் உள்ளதை உணர முடிகிறது.
காற்றின் சலசலப்பினால் தம்மைச் சுற்றி உள்ளவைகளின் நிலைகளை தெளிவாக தெரிந்துகொள்ள
முடிகின்றது.
காற்றின் அசைவினால்தான் இவைகளனைத்தும் சாத்தியம்.
காற்றே அனைத்திற்கும் ஆதாரம் என்று கூறிக்கொண்டான்.
தான் தன் உணவுக்காக அலைவதும் இல்லை,
நீரை தேக்கி வைப்பதும் இல்லை,
உடையை பற்றி பிரச்சனையும் இல்லை,
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதே
என்று நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்.
மீண்டும், மீண்டும் தீப்ஸை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டான்.
ஆனால் தற்பொழுது தனக்கு எவ்வளவு ஆனந்தம் அவனுக்கே வியப்பை அளித்தது.
தான் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற நினைப்பு வந்தது.
இன்னும் எவ்வளவு தூரம் என்ற நினைப்புடன் தீப்ஸிலிருந்து அதிக தூரம் விலகி கொண்டிருந்தான்.
மனித வாடையே இதுவரை அவனுக்கு தென்படவில்லை.
நேரம், காலம், நாள் எல்லாம் அவனுக்கு புறிபடவில்லை.
அனைத்தும் மனிதனை கட்டுப்படுத்தும் தண்டனைச் சட்டங்களாகவே நினைத்தான்.
அவை அனைத்தும் பொய் என முடிவுக்கு வந்தான்.
நாமே நமக்காக போட்டுக்கொண்ட விலங்கு
என்பதனை கொஞ்சம், கொஞ்சமாக தனது கருத்தாக உருப்பெறச் செய்துகொண்டான்.

தான் தீப்ஸிலிருந்து பொழுது முழுக்க முழுக்க மூடத்தனத்திலும், மூட பழக்கவழக்கங்களிலும்
இருந்ததை எண்ணிப்பார்க்கிறான்.
எப்படித்தான் நூறு சதவீதம் மூடப்பழக்கத்தில் வாழ முடிந்தது நம்மால்?
வாழ்ந்தும்தானே இருக்கின்றோம்.
நானே இப்படி என்றால் மற்றவர்களும் அப்படித்தானே.
என்ன வாழ்க்கை,
மூட பழக்க வழக்கங்களிலே பிறந்து, வாழ்ந்து, மடிவது.
எல்லோரும் அப்படித்தானே.
யார் இதற்கு முடிவு கட்டுவது.
மிகவும் கடினமான செயல்தான்.
இருந்தாலும் இனியும் தான் மூடத்தனத்தை ஒழிக்க பாடுபடாவிட்டால்
நான் மனித குலத்திற்கு உதவி செய்யாதவனாகிவிடுவேன்.
மத நம்பிக்கைகள், மதக் கோட்பாடுகள் எப்படி மனிதனை மூடனாக, மடையனாக, முட்டாளாக
மனிதனை வைத்திருப்பதுடன் சிந்திக்கக்கூடாத சூழலையும் வருவாக்கி, சிந்திக்க
முடியாதவனாக முடமாக்கி வைத்துள்ளது.
பிறந்தால், இறந்தால், நோயுற்றால், குணமானால், நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால்,
உறங்கினால், விழித்தால், சிந்தித்தால், கண்டால், எழுதினால், பறவை பறந்தால், விலங்கு
பார்த்தால், படித்தால், பழகினால், சுத்தமாக இருந்தால், அசுத்தமானால் எது செய்தாலும்
பகுத்தறிவற்ற செயலிலல்லவா மக்கள் வாழ்க்னிறனர்.
பகுத்தறிவுடன் யாரும் சிந்திப்பதில்லையே பகுத்தறிவுடன் சிந்திப்பதே முட்டாள் தனமாக,
மூடத்தனமாக மனித குலத்திற்கே கெடுதி செய்ய வந்ததாக அல்லவா நினைத்து வாழ்ந்து வந்துள்ளோம்.
நான் மட்டுமா,
என் மக்களும்
அண்டை மக்களும்,
அரசர்களும் அப்படித்தானே.
என்ன வான் ஒலி,
மனிதனை மன நோயாளியாக்கி பேசும் பேச்சல்லவா இது.
நான் எப்படி இதனை ஏற்றேன்.
"ஓ" அனைவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்.
அரசனையே ஏமாற்றும் அளவிற்கு
பாதுகாப்புடன், பத்திரமான இடத்தில்ல்லவா
மூடப்பழக்கவழக்கங்கள் உள்ளன.
பகுத்தறிவு எங்கே?
ஓரிடத்திலும் இல்லை….
இல்லை.
பகுத்தறிவதற்கு
மனிதன் தன் நிலை பற்றி சரியாக புரிந்து, அறிந்து கொள்ளாததே, விரும்பாததே காரணம்.
நான் அதற்கு மிகச் சிறந்த விடையை அளிக்க வேண்டும்.
காமம் அனைத்திற்கும் பொதுவானது.
கற்பு என்பது பொய்.
மனிதர்கள் உணவை மையமாக கொண்டே வாழ்கிறார்கள்.
வாழ்க்கை என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது.
உண்பது, உடுப்பது, பொழுது போக்குவது மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்கின்றனர்.
ஏன், எனக்கே தெரியாமல் இருந்ததே.
நான் இந்த அறிவை அடைந்தது எதனால். காதுகளை நன்றாக பயன்படுத்தியதால் அல்லவா? நானே
தான் எனது ஆட்சியை இழந்தேன்.
ஐயோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டேனே.
மூடப் பழக்கத்தினால் முடமானேனே
என்று ஓங்காரத்துடன் கத்தினான்.
காடுகளும், மலைகளும் ஒரு நிமிடம் ஆடி அதிசயித்தது.
"ஏ ஈடிபஸின் கையிலுள்ள நன்னெறி காட்டும்.
நல்வழி காட்டும் தடியே உலகில் அதிகமான மூடப் பழக்கவழக்கம் மற்றும் மனிதனை மனிதனாக
நினைக்காத தேசம் ஒன்று உண்டு என்றால் அது நோக்கி என்னை அழைத்துச் செல்.
நீதான் எனக்கு வழிகாட்டி.
உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை"
என்று கூறி தனது கையிலுள்ள தடியினை, தனது தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து நின்ற
இடத்திலிருந்து கரகரவென்று சுழன்று நின்றான். அவன் கையிலிருந்த தடி
இந்திய துணைக்கண்டம்
இருந்த திசையை நோக்கி காட்டியது.
அத்திசை நோக்கி நகர்ந்தான்.

மல்யுத்தக்கலத்தில் மிகப்பெரிய மல்யுத்தம் நடக்கிறது. வெற்றி பெருக்னிறான் ஈடிபஸ்.
பழங்குடிகள் ஆரவாரத்துடன் ஈடிபஸை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
அவர்கள் நீ யார். எங்களுக்கு கூறு.
ஒன்று நீ வீரனாக இருக்க வேண்டும்,
அல்லது அரசனாக இருக்க வேண்டும்.
அதில் நீ யார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இரந்தனர்.
ஈடிபஸ் எங்கள் ஊரில் அனைவரையும் ஏமாற்றும் கதை ஒன்று உண்டு.
அதுதான் என்னைப் பற்றிய நீங்கள் கேட்கும் கதை.ஆனாலும்...
என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறி தனது கைகளை உயர்த்தி காண்பித்து
எனக்கான பாதை இதோ தெரிகிறது,
எனது கை வழியாக உங்களுக்குத் தெரிகின்றதா என்றான்.
பழங்குடியினர் அவனது கையிலுள்ள தடியிலிருந்து கோடு ஒன்று கிழக்கு நோக்கிச் செல்வதை
பார்க்கின்றனர்.
சூரியன் மேற்கில் பிரகாசமாக இருக்கின்றான்.
எங்கள் ஊரி்ல் ஒரு பொய் உண்டு.
அது என்னைப் பற்றியது.
அரச வாழ்வு பற்றி தவறான ஒன்று நிலவி இனி உலகில் அரசாள் விரும்புபவர்களுக்கு அதுவே
உதாரணமாக இருக்கும்.
அரசர்கள் அனைவரும் கொடூரண்களாகவே காண்பிக்கப்படுவர்.
ஆனால், உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
போரில் அனைவருக்கும் முன்னே அரசன் தான் சாகின்றான்.
படைகள் சிறிது பின்வாங்கினாலும் சிதறிய படைகளில், சேர்ந்த புதியவர்கள் எதிரியின்
கையாட்களாக மாறி முதலில் கொல்ல நினைப்பது தனது முன்னாள் அரசனைத்தான் என்பதை நான்
அனுபவப்பூவமாக உணர்ந்தவன், ஒன்றல்ல இரண்டல்ல பல போர்களில்.
வெற்றி பெறபவனே அரசன்.
போர் என்றால் உண்மையில் சாவுக்கும், வாழ்வுக்குமான சரியான எல்லைக்கோடு அல்ல.
ஒருவன் இயல்பாக சாவதையே இயற்கை விரும்புகிறது.
ஆனால் அரசர்களோ போரில் சாவதையே மிகவும் விரும்புகின்றனர்.
உண்மையில் வீரம் என்பது போரினில் கிடையாது.
அனைத்தும் கோழைத்தனமான தந்திரங்களே. போரில் யார் யார், எதை எதைச் செய்ய வேண்டும் என
தீர்மானித்து இயங்குகின்றோம். ஆனால் வெற்றி யாரிடமிருந்து வருமென யாருக்கும் தெரியாது.
சில சமயம் வெற்றி பெற்றுள்ளோம் என்ற பிரச்சனை இல்லாமல் தங்களை மாய்த்துக்கொண்ட கோழைகளை
போர்க்களத்தில் பார்த்துள்ளேன்.
மக்களை காப்பவன்,
மக்களை காக்க
மனிதர்களை கொன்றுதான்
சாத்தியமென்றால்
அது காட்டுமிராண்டித்தனமானது.
ஒரு கோடிபேரை காக்க
பல்லாயிரம் பேர்
இறக்க வேண்டுமென்றால்
அது முட்டாள்தனமானது.
தாங்கள் மடிவோம்
என்ற உறதியுடன்
போருக்கு புறப்படுபவன்
தாங்களால்
காக்கப்படுவது,
தங்களால் வாழப்பார்ப்பது்
கோழைகளே
என்பதை அறிந்தால்
உண்மையில்
அவன் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிடுவான்.
வீரம், வீரத்திற்காக மடியுமிடம்
போர்க்களமல்ல
என்பதால் போரை வெறுக்கிறேன்.
நான் தனியாளாக நின்று பலரை கொன்றிருக்கிறேன்.
ஆனால் நாடு, நான் வென்றதாக கூறி
தன்னை எனது பாதத்தில் வைத்து
பிறகு
தீப்ஸின் மூடசதிகாரர்களின்
வலையில் மாட்டி
சதிகாரர்களால்
நாட்டின் காலடியில் தள்ளப்பட்டேன். உண்மையில் அரசர்கள்
பாவம் செய்தவர்கள்.
மன்னிக்க முடியாதவர்கள்.
மன்னிக்க முடியாத செயல் செய்தவர்கள். அரசர்கள்
அவர்களுக்கு கிடைத்ததை அவர்கள் அனுபவித்தார்கள்.
அவர்கள் அனுபவிப்பதற்காகவே
சிலர் அவர்கள் விரும்பியதை தாங்களே விரும்பி அனுபவிக்க கொடுத்தார்கள்.
இதில் ஒளிவு எதுவும் இல்லை.
உண்மையில் பல சமயங்களில் விருப்பமில்லாமலும் அவர்கள் சிலதை அனுபவிக்கும்படியும் ஆனது.
விரும்பிய சில சமயம் வன்முறையில் முடிந்தது. அப்படி விரும்பியவன் எவனொ அவனுக்கு
சாவுமணி அடித்தார்கள்.
அரசர்களுக்கென்று சொந்த சொத்தும் கிடையாது. தனி சுகம் என்பதும் கிடையாது.
அனைத்தும் மக்களுடையது, அனைத்தும் மக்களுக்கானது,

மக்களால் அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் ஒருபோதும் முடியாது என்பதாலேயே அரசனை
அவர்கள் நம்புகின்றார்கள்.

ஈடிபஸ் மயங்கி விழுந்தான்.


ஒரு பறவைகளின் இரைச்சல்கள் அதிகமானதருணம் தீப்ஸின் போரிகையின் சப்தம் கேட்டு
அதிசயித்தான். ஒரு பழங்குடியினை அழைத்து கேட்டான். அவன் ஏதோ தெரியவில்லை. மிகப்
பெரிய உருவங்களில் மனிதர்கள் நகர்ந்து வருகின்றனர் என்றான். ஈடிபஸ் உணர்ந்து கொண்டான். தீப்ஸ்
மக்கள் தன்னைத் தேடி வருகின்றனர் என்பதனை. அவர்களைப் பார்க்க ஈடிபஸ் விரும்பவில்லை.
பழங்குடியினாரிடமிருந்து விடைபெறுகின்றான். தனக்கு தானே
திசைக்காட்டியாக,
வழிகாட்டியாக ஆக்கிக்கொண்டு.
தடியினை தூர எரி்கிறான்.
உலகில் உயிர்வாழும்ஆசையை தவிர்த்து பிறஆசைகள் இல்லாதவன்.
புது புது ஓசைகள் கேட்டும் ஞாபகப்படுத்தியும், இனங்கண்டும் கொள்கின்றான்.
அவைகளுக்கென சில பெயர்களை தனக்குள் வைத்துக் கொள்கின்றான்.
அவன் இதுவரை ருசிக்காதவைகளை, நுகராதவைகளை அனுபவிக்கின்றான்.
தான் தூர தேசம் வந்துவிட்டதை உணர்கிறான்.
இனிமேல்தான் கடினமான சோதனைகளை சந்திக்கப் போகிறான் என்பது அவனுக்குத் தெரியாது.
இப்போது அவனுக்கு தாய், தந்தை, வளர்ப்புத் தாய், தந்தை, குழந்தைகள், நாடு போன்றவை ஏதோ
ஒரு நிகழ்வின் சந்திப்பாகவேபடுகிறது. அரசனாக இருந்த சமயங்களைவிட, இப்பொழுது
செய்யும், ஒவ்வொரு செயலும் அர்த்தமுடையதாகவும், அர்த்தப்படுவதாகவும் உணர்கிறான். அவன்
பாதங்கள் மிளகு விளையும் நாட்டை அடைகின்றது.

.

.


.

ஈடிபஸ் காம்பஸ் -மறுதோன்றி ...புனைவு

.


.

.

.