Tuesday, January 12, 2010

தமிழில் தமிழர்கள் கற்றது ...

.

நொரண்டு :
''எனக்குத்தெரிந்து தமிழில் ஒன்னும் இல்லை '' என என் நண்பன் சொன்னான் ...

நண்டு : எதுக்கு இதப்பேசினிங்க ...

நொரண்டு :ஏன்?

நண்டு : அப்பத்தான் அதுக்குத்தகுந்த விளக்கம் கொடுக்க முடியும் .


நொரண்டு : தமிழ் மொழியின் சிறப்பு பத்தி நான் சொன்னதுக்கு ...அறிவார்ந்த விசயங்கள்
தமிழில் இல்லை,அறிவை தமிழ் பிரதிபளிக்கவில்லை . தமிழில் அறிவியல் பார்வையில்லை ....

நண்டு : அப்படியில்லை ,
உண்மையும் அதுவல்ல .
அப்படி ஆக்கப்பட்டு விட்டது
பக்தி இயக்கங்களால் .
தமிழ் மொழியே பக்தி இயக்கமாக ஆக்கிவிடப்பட்டுவிட்டபடியால் .
அப்படி
ஒரு மொழி
பக்தி இயக்கமாகும் பொழுது
அந்த மொழியில்
பக்திப்பரவசம் மட்டுமே இருக்கும் .


நொரண்டு : அப்படியா ?

நண்டு : இதைத்தான் வள்ளுவர்

> அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
> பிறவாழி நீந்தல் அரிது.

என்றார் .


நொரண்டு :அப்படினா?


நண்டு :
''அறவாழி அந்தணன்
என்பவனால்
பிறவாழி நீந்தல் முடியாது
அவன்தாள் சேராவிடில் ''


நொரண்டு : புரியல ...

நண்டு : அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால் அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .


நொரண்டு : இதிலிருந்து அவர் கூறும் செய்தி .

நண்டு : பிறவற்றையும் கற்கவேண்டும் .


நொரண்டு : ஓ,
தமிழன் தமிழை இப்படித்தான் கற்றானா?. மற்றவற்றை கற்காமல் .


நண்டு :இப்படித்தான் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது .

நொரண்டு : இப்பத்தான் எல்லாத்தையும் கற்கின்றானோ? .


நண்டு : இருந்தாலும்
இது ஆங்கிலேயர்கள் தந்தது .

நொரண்டு : ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு... ஆங்கிலேயர்கள்
நமக்கு உருவாக்கிய கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறைனு சொல்றாங்களே ...

நண்டு :
இப்பவும்
அப்படித்தான்
கற்றுவருகின்றான்
தமிழன் தமிழை .
அதனால் தான் ஆங்கிலத்தின் மீது தமிழனுக்கு அவ்வளவு ஆர்வம் .

நொரண்டு : அதனால் ?

நண்டு :நாம் உருவாக்குவோம் அறிஞர்களை உருவாக்கும் தமிழ் கல்வி முறையை .

.


.

.

.