Friday, January 29, 2010

மரம் நட்டால் மழை வருமா ?

-மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .-


நொரண்டு : மரங்கள் நட்டால் மழை வருமா?

நண்டு :முதலில் நடப்படும் மரக்கன்றுகளில் எத்தனை மரங்களாகின்றன ? ஆயிரத்தில் ,லட்சத்தில்
...ஒன்று ....

நொரண்டு :இது வரை மரக்கன்றுகள் நடப்படுவது மட்டும் விளம்பரமாக இருப்பதால் அதைப்பற்றிய
யாருக்கும் கவலை இல்லை ....

நண்டு :அப்படியே அவைகள் வளர்ந்தாலும் உண்மையில் பயன் தராது .

நொரண்டு : எப்படி ?

நண்டு : அவைகளால் மழைச்சூழலை ஏற்படுத்த முடியாது .

நொரண்டு :ஓ....அப்படியா !!!

அப்போ... மழைநீர் சேகரிப்பு ....

நண்டு : மனிதனுக்கு நல்ல பயன்தரும் ,அவைகள் மழைக்கு உதவாது .


நொரண்டு : ஓ...!!!

நண்டு : வள்ளுவர்

''விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி. ''

என்ற குறளில் கூறுகின்றார் .

நொரண்டு : விளக்கம்

நண்டு :

மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .


நொரண்டு :சற்று விளக்கமாக

நண்டு :

மழை பொய்த்தாலும் ,
பெய்த மழை
கடலினால்
மழையினால்
நிலத்தின் கண் வீழ்ந்த வடிந்த நீரானாது
நிலத்தினுள் சென்று
நிலத்தின் கண் நின்று
நிலத்தடி நீராகி
உணவுக்கு நீராகி
பசியை ஆற்றும் .

நொரண்டு :ம்...மழை நீர் நிலத்தடி நீராகி மனிதனுக்கு பயன்படும் அப்படித்தானே .

நண்டு : அப்படியும் தான் ...மழையில்லா காலங்களில் ...

நொரண்டு :நிலத்தடி நீர் பற்றி வள்ளுவர்.

நண்டு : ஆம் ,வள்ளுவரே தான் ...


..


வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....

..


.

.

Saturday, January 23, 2010

ஈடிபஸ் காம்பஸ் -மறுதோன்றி

.

.
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
அவர்கள் அரசனை,
எங்கள் தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்

நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
காடுகளும், மலைகளும்
எங்கள் இருப்பிடமாக
வனாந்திரம்
எங்கள் வசத்தில் இருந்தபோது
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்.

கடுமையான போட்டிக்கு இடையே
அவரவர் உணவை அவரவர் தேடி
சூரிய ஒளிக்குள் சுழன்று கொண்டு
உலகம் முழுவதும் ஓரினமாக

தேடும் உணவை பகிர்ந்து கொண்டு
சேகாரம் செய்யா சேர்ந்தினமாக
உணவுத் தேடலே வாழ்வுரிமையாக
நாங்களும் அப்படித்தான்
இருந்து வந்தோம்
அவர்களுடைய அரசன்
எங்களின் தலைவனாகும் வரை.

கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள்
காட்டு வழியே ஓடி கடல் கடந்து
மிளகு விளையும் தேசம் நோக்கி சென்ற
அவர்களின் அரசனை
எங்களுடைய தலைவனை
கண்டுபிடித்து தாருங்கள்
கண்டுபிடித்து தாருங்கள் ....

என்ற பழங்குடிகளின் பழம் பாடல் காலம் காலமாக மலைகள் முழுவதும் கேட்டுக் கொண்டே
இருக்கிறது. இன்றும்
அவர்களின் வாய்கள் அவற்றை முணு முணுத்துக் கொண்டே இருக்கிறது என்று ஆரம்பித்தது என்று
தெரிந்து கொண்டாலும் எப்போது முடியும் தெரியவில்லை. காரணம், ஈடிபஸ் கண்டுபிடிக்க
முடியாத இடம் நோக்கி சென்றுவிட்டான். அவனை கண்டுபிடிக்க உதவும் ஒரு சிறு தகவல்தான்
மேற்கூறிய பழங்குடிகளின் உள்ளகுமுறல்…

ஈடிபஸ் தனது குதிரையின் மூலம் தீப்ஸிலிருந்து நகருகிறான்.
எவ்வளவு நேரம், தூரம் ஓடியது என்று தொரியவில்லை.
கண்குழியில் அதிக வலி எடுக்கவே குதிரையை நிறுத்தினான்.
குதிரையை மட்டுமே உதவியாக கொள்ள வேண்டியிருப்பதால் அதனது எண்ணத்திற்கு அதிக மதிப்பு
கொடுத்தால்தான் மீண்டும் பயணிக்க முடியும் என்பதால் குதிரைக்கு ஓய்வு கொடுக்க எண்ணி
குதிரையில் இருந்து இறங்கி அமர்ந்தான்.
கைகளாலே மெல்ல மெல்ல இடத்தின் தன்மையை ஆராய்ந்தான்.
கைகளை அங்கும், இங்கும் போட்டு துலாவினான்.
அவன் நினைத்ததுபோலவே நடந்துவிட்டது.
ஆம், தடி ஒன்று கிடைத்துவிட்டது.
அதன் உதவியுடன் இடங்களை துலாவ ஆரம்பித்தான்.
தடி ஏதோ சலசலப்பை ஏற்படுத்த அதை நோக்கி நகர்ந்தான்.
ஒரு செடியினைக் கைப்பற்றினான்.
என்ன நினைத்தான் என்று தெரியவில்லை.
வேக வேகமாக அதன் இலைகளை பறித்து கண் குழிகளில் கசக்கி அப்பிக் கொண்டான். சற்று இதமாக
இருக்கவே மீண்டும் சில இலைகளை சேகரித்து நன்றாக கசக்கி சாறு பிழிந்து கண் குழிகளில்
ஊற்றினான்.
கண் குழிகளில் குளுமை தெரியவே ஆனந்தமாக அப்படியே செடியை ஒட்டியே படுத்துக் கொண்டான்.
அதிகம் பயணித்த களைப்பில் அயர்ந்துவிட்டான். பறவைகள் சத்தங்கள் கேட்டு எழுந்தான். பறவைகளின்
சத்தம் கேட்டுக்கொண்டு இருக்கவே பகல்பொழுது என்று உணர்ந்து தன் கையில் கிடைத்த தடியை
மட்டும் துலாவி எடுத்தான். அதன் உதவியினால் மெல்ல எழுந்து தடியை தட்டி தட்டி நடக்க
ஆரம்பித்தான்.
குதிரையை அழைக்கும் ரகசிய மொழியில் குதிரையை அழைத்தான்.
குதிரையிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் கையிலுள்ள தடியினை அங்கும் இங்கும்
வேகமாக ஆட்டினான்.
எதிரில் எதுவும் இல்லை.
குதிரை தன்னை பிரிந்து சென்றுவிட்டது என்று யூகித்துக் கொண்டான்.
இனிமேல் குதிரையை நம்பி பிரயோஜனம் இல்லை என்று கவலையுடன் நொந்து அமர்கின்றான்.
பிறகு குச்சியின் அளவிற்கு வேகமாக நடப்பது என்ற முடிவுக்கு வருகின்றான்.
நீண்ட தொலைவிற்கு பிறகு அவனால் எதையும் அடையமுடியவில்லை.
பறவைகளின் இரைச்சல் மட்டும் அடங்கிக் கொண்டு இருந்தது.
ஒரு கணக்கிற்கு வர ஆரம்பித்தான்.
பறவைகளின் இரைச்சலிலிருந்து பறவைகளின் இரைச்சல் வரை நகர்வது என்று முடிவு செய்தான்.
களைப்பின் காரணமாக அமர்ந்தான்.
கையில் ஏதோ தட்டுப்பட அதனை எடுத்து முகர்ந்தான்.
அது ஒரு பழம்.
உற்சாகமானான்.
பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது.
உடனே உண்ண ஆரம்பித்தான்.
அங்கேயே அயர்ந்துவிட்டான்.
மீண்டும் பறவைகளின் ஒலியில் எழுந்தான்.
பசி எடுக்கவே உண்டது ஞாபகம் வந்தது. பழத்தின் மரம் பக்கத்தில்தான் இருக்க வேண்டும் என்ற
ஆவலில் குச்சியின் உதவியுடன் ஒரு மரத்தை கண்டுபிடித்தான்.
தான் கண்டுபிடித்த மரம் தவறானது என்று மரத்தில் ஏறிய பின்பு உணர்ந்து பல முயற்சிக்கு
பிறகு உண்மையான மரத்தினை கண்டுகொண்டான்.
அங்கேயே இருக்க முடிவு எடுத்தான்.
பொருளற்ற,
ஆள் அம்புகளற்ற,
உறுப்புகளற்ற
ஈடிபஸை
அவன் நினைத்துப் பார்க்கிறான்.
"ஓ" வாழமுடிகிறதே!
எப்படி?
எப்படி?
இவைகள்
இல்லாமல்
ஒரு நிமிடம் கூட
வாழ முடியாது
என்ற
நினைப்பில்தானே
வாழ்ந்துவந்திருக்கிறேன்.
அநேக உயிர்களையும், பொருட்களையும் அழித்தேன்.
அநேக போர்களை நான் மேற்கொண்டேன். அப்போது ஏன் தெரியவில்லை?
தெரிந்திருந்தால், மிக நல்ல வாழ்க்கை வாழ்ந்து
மக்களுக்கும் அமைதியையும், ஆனந்தத்தையும் தரும் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருப்பேனே.
இப்போது நான் யாருக்கும் அரசன் இல்லை.
எனது வாழ்விற்காக யாரின் உழைப்பையும் சுரண்ட மாட்டேன்,
முடியவும் முடியாது.
இருந்தாலும்,
என்னால்
முன்னைவிட பிரச்சனைகளற்ற
வாழ்க்கையை
இப்போது வாழ முடிகிறது.
இருந்தாலும்
தான் முன்பு அறியாது இருந்ததுபோல்,
இன்னும் தன் நாட்டிலும், வெளியிலும் மனிதர்கள் அறியாமையில் உள்ளனர். அவர்களுக்கு நான்தான்
வழிகாட்ட வேண்டும் என்று உரக்கச் கூறிக்கொண்டான்.
வழிகாட்ட வேண்டும் என்ற ஆசையுடன்
தன் நாடு நோக்கி பயணம் மேற்கொண்டான். தனது நாட்டிற்கு எதிர் திசையில்தான் பயணம்
செய்கின்றோம் என்பதனை அறியமாட்டாமலேயே. அவன் மட்டும் சரியான பயணத்தை மேற்கொண்டிருந்தால்
தீப்ஸ் மீண்டும் மிக நல்ல ஒரு அரசனை பெற்றிருக்கும்.

அவன் அடைந்துள்ள இடம் தீப்ஸிலிருந்து கிட்டதட்ட 500 கிலோ மீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள
ஒரு மிகப் பெரிய மலை முகடென்பது அவனுக்குத் தெரியாது.
பறவைகள், ஊர்வன, விலங்குகள் ஆகியவற்றின் நகரும் ஓசைகள், அண்மையில் ஏற்படும் வாசனைகள்,
இடத்தினை பற்றிய படிப்பினை ஆகியவற்றை அவன் இப்பொழுது நன்றாக அறிந்து கொண்டான். சில
சமயம் பலமாக தாக்கப்பட்டான் மிருகங்களால். மிருக வெறி கொண்டு தட்டுத்தடுமாறி
போரிட்டான். ஓடினான், காயமுற்றான், தடியாலடித்து துரத்தினான், கையிலிருந்த தடியை
மட்டும் எச்சூழ்நிலையில் தவறவிட்டதில்லை.
அதுதான் அவனுக்கு
வழிகாட்டியாகவும்,
ஆதாரமாகவும்
பாதுகாப்பாகவும் இருக்கிறது.
தடியைப் பற்றி அவனின் கருத்து இப்படித்தான் இருந்தது.
"மனிதன் வாழ்வதற்கு தன்னை தவிர்த்து பிற ஒன்று தேவை.
அது அதிகமாக அதிகமாக மனிதன் அவற்றிற்கு அடிமையாகின்றான்.
தடி எனது வழிகாட்டி.
நான் அதனை பின்பற்றுகிறேன்.
நானும் அடிமையே.
உயிரற்ற ஒன்றுக்கு".
மிருகங்களிடம் ஏற்பட்ட போரினால் தடியில் ஆங்காங்கு இரத்தக் கரைகள் அப்பிக் கொண்டன. அவைகள்
அத்தடியினை சிவப்பு நிறத்தில் பளபளக்கச் செய்தது. அவனின் உடம்பில் மிகச் சிறந்த
வீரத்தழும்புகள் ஏற்பட்டிருப்பதாக உணருகிறான்.
எவ்வளவோ மருத்துவர்களின் உதவியுடன் போர் களத்தில் ஏற்பட்ட புண்களை மருந்துகொண்டு
குணப்படுத்த முடிந்தாலும், அதிக வலியும், ஆற அதிக நாட்களும் ஆகும். ஆனால் இங்கு புண்கள்
ஆற தான் ஏதேதோ தளைகளைமட்டும் தடவிக் கொண்டாலும் உடனே குணமாகிவிடுகிறதே என வியந்தான்.
நீரோடைகளின் சலசலப்பு,
மலைகளின் கலகலப்பு
பள்ளத்தாக்குகளின் கலகலப்பு,
ஆற்றின் சலசலப்பு,
அடர்ந்த காடுகளின் சலசலப்பு,
விலங்குகளின் குரல்,
அவைகளின் அசைவுகளினால் ஏற்படும் சலசலப்பு
ஆகியவற்றை துல்லியமாக கணிந்து
ஒவ்வொன்றுக்கும் சரியான தீர்வை வைத்திருந்தான்.
காற்று வாசனைகளை கடத்துகின்றது.
அதன் மூலம் அருகில், தூரத்தில் உள்ளதை உணர முடிகிறது.
காற்றின் சலசலப்பினால் தம்மைச் சுற்றி உள்ளவைகளின் நிலைகளை தெளிவாக தெரிந்துகொள்ள
முடிகின்றது.
காற்றின் அசைவினால்தான் இவைகளனைத்தும் சாத்தியம்.
காற்றே அனைத்திற்கும் ஆதாரம் என்று கூறிக்கொண்டான்.
தான் தன் உணவுக்காக அலைவதும் இல்லை,
நீரை தேக்கி வைப்பதும் இல்லை,
உடையை பற்றி பிரச்சனையும் இல்லை,
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதே
என்று நினைத்து ஆச்சர்யப்பட்டுக் கொண்டான்.
மீண்டும், மீண்டும் தீப்ஸை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டான்.
ஆனால் தற்பொழுது தனக்கு எவ்வளவு ஆனந்தம் அவனுக்கே வியப்பை அளித்தது.
தான் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்ற நினைப்பு வந்தது.
இன்னும் எவ்வளவு தூரம் என்ற நினைப்புடன் தீப்ஸிலிருந்து அதிக தூரம் விலகி கொண்டிருந்தான்.
மனித வாடையே இதுவரை அவனுக்கு தென்படவில்லை.
நேரம், காலம், நாள் எல்லாம் அவனுக்கு புறிபடவில்லை.
அனைத்தும் மனிதனை கட்டுப்படுத்தும் தண்டனைச் சட்டங்களாகவே நினைத்தான்.
அவை அனைத்தும் பொய் என முடிவுக்கு வந்தான்.
நாமே நமக்காக போட்டுக்கொண்ட விலங்கு
என்பதனை கொஞ்சம், கொஞ்சமாக தனது கருத்தாக உருப்பெறச் செய்துகொண்டான்.

தான் தீப்ஸிலிருந்து பொழுது முழுக்க முழுக்க மூடத்தனத்திலும், மூட பழக்கவழக்கங்களிலும்
இருந்ததை எண்ணிப்பார்க்கிறான்.
எப்படித்தான் நூறு சதவீதம் மூடப்பழக்கத்தில் வாழ முடிந்தது நம்மால்?
வாழ்ந்தும்தானே இருக்கின்றோம்.
நானே இப்படி என்றால் மற்றவர்களும் அப்படித்தானே.
என்ன வாழ்க்கை,
மூட பழக்க வழக்கங்களிலே பிறந்து, வாழ்ந்து, மடிவது.
எல்லோரும் அப்படித்தானே.
யார் இதற்கு முடிவு கட்டுவது.
மிகவும் கடினமான செயல்தான்.
இருந்தாலும் இனியும் தான் மூடத்தனத்தை ஒழிக்க பாடுபடாவிட்டால்
நான் மனித குலத்திற்கு உதவி செய்யாதவனாகிவிடுவேன்.
மத நம்பிக்கைகள், மதக் கோட்பாடுகள் எப்படி மனிதனை மூடனாக, மடையனாக, முட்டாளாக
மனிதனை வைத்திருப்பதுடன் சிந்திக்கக்கூடாத சூழலையும் வருவாக்கி, சிந்திக்க
முடியாதவனாக முடமாக்கி வைத்துள்ளது.
பிறந்தால், இறந்தால், நோயுற்றால், குணமானால், நின்றால், நடந்தால், பார்த்தால், பேசினால்,
உறங்கினால், விழித்தால், சிந்தித்தால், கண்டால், எழுதினால், பறவை பறந்தால், விலங்கு
பார்த்தால், படித்தால், பழகினால், சுத்தமாக இருந்தால், அசுத்தமானால் எது செய்தாலும்
பகுத்தறிவற்ற செயலிலல்லவா மக்கள் வாழ்க்னிறனர்.
பகுத்தறிவுடன் யாரும் சிந்திப்பதில்லையே பகுத்தறிவுடன் சிந்திப்பதே முட்டாள் தனமாக,
மூடத்தனமாக மனித குலத்திற்கே கெடுதி செய்ய வந்ததாக அல்லவா நினைத்து வாழ்ந்து வந்துள்ளோம்.
நான் மட்டுமா,
என் மக்களும்
அண்டை மக்களும்,
அரசர்களும் அப்படித்தானே.
என்ன வான் ஒலி,
மனிதனை மன நோயாளியாக்கி பேசும் பேச்சல்லவா இது.
நான் எப்படி இதனை ஏற்றேன்.
"ஓ" அனைவரும் என்னை ஏமாற்றிவிட்டனர்.
அரசனையே ஏமாற்றும் அளவிற்கு
பாதுகாப்புடன், பத்திரமான இடத்தில்ல்லவா
மூடப்பழக்கவழக்கங்கள் உள்ளன.
பகுத்தறிவு எங்கே?
ஓரிடத்திலும் இல்லை….
இல்லை.
பகுத்தறிவதற்கு
மனிதன் தன் நிலை பற்றி சரியாக புரிந்து, அறிந்து கொள்ளாததே, விரும்பாததே காரணம்.
நான் அதற்கு மிகச் சிறந்த விடையை அளிக்க வேண்டும்.
காமம் அனைத்திற்கும் பொதுவானது.
கற்பு என்பது பொய்.
மனிதர்கள் உணவை மையமாக கொண்டே வாழ்கிறார்கள்.
வாழ்க்கை என்றால் என்ன என்று அவர்களுக்குத் தெரியாது.
உண்பது, உடுப்பது, பொழுது போக்குவது மட்டுமே வாழ்க்கையாக நினைத்து வாழ்கின்றனர்.
ஏன், எனக்கே தெரியாமல் இருந்ததே.
நான் இந்த அறிவை அடைந்தது எதனால். காதுகளை நன்றாக பயன்படுத்தியதால் அல்லவா? நானே
தான் எனது ஆட்சியை இழந்தேன்.
ஐயோ என்னை நானே ஏமாற்றிக் கொண்டேனே.
மூடப் பழக்கத்தினால் முடமானேனே
என்று ஓங்காரத்துடன் கத்தினான்.
காடுகளும், மலைகளும் ஒரு நிமிடம் ஆடி அதிசயித்தது.
"ஏ ஈடிபஸின் கையிலுள்ள நன்னெறி காட்டும்.
நல்வழி காட்டும் தடியே உலகில் அதிகமான மூடப் பழக்கவழக்கம் மற்றும் மனிதனை மனிதனாக
நினைக்காத தேசம் ஒன்று உண்டு என்றால் அது நோக்கி என்னை அழைத்துச் செல்.
நீதான் எனக்கு வழிகாட்டி.
உன்னைத் தவிர எனக்கு வேறு துணையில்லை"
என்று கூறி தனது கையிலுள்ள தடியினை, தனது தலைக்கு மேல் உயர்த்தி பிடித்து நின்ற
இடத்திலிருந்து கரகரவென்று சுழன்று நின்றான். அவன் கையிலிருந்த தடி
இந்திய துணைக்கண்டம்
இருந்த திசையை நோக்கி காட்டியது.
அத்திசை நோக்கி நகர்ந்தான்.

மல்யுத்தக்கலத்தில் மிகப்பெரிய மல்யுத்தம் நடக்கிறது. வெற்றி பெருக்னிறான் ஈடிபஸ்.
பழங்குடிகள் ஆரவாரத்துடன் ஈடிபஸை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
அவர்கள் நீ யார். எங்களுக்கு கூறு.
ஒன்று நீ வீரனாக இருக்க வேண்டும்,
அல்லது அரசனாக இருக்க வேண்டும்.
அதில் நீ யார்? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே இரந்தனர்.
ஈடிபஸ் எங்கள் ஊரில் அனைவரையும் ஏமாற்றும் கதை ஒன்று உண்டு.
அதுதான் என்னைப் பற்றிய நீங்கள் கேட்கும் கதை.ஆனாலும்...
என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை என்று கூறி தனது கைகளை உயர்த்தி காண்பித்து
எனக்கான பாதை இதோ தெரிகிறது,
எனது கை வழியாக உங்களுக்குத் தெரிகின்றதா என்றான்.
பழங்குடியினர் அவனது கையிலுள்ள தடியிலிருந்து கோடு ஒன்று கிழக்கு நோக்கிச் செல்வதை
பார்க்கின்றனர்.
சூரியன் மேற்கில் பிரகாசமாக இருக்கின்றான்.
எங்கள் ஊரி்ல் ஒரு பொய் உண்டு.
அது என்னைப் பற்றியது.
அரச வாழ்வு பற்றி தவறான ஒன்று நிலவி இனி உலகில் அரசாள் விரும்புபவர்களுக்கு அதுவே
உதாரணமாக இருக்கும்.
அரசர்கள் அனைவரும் கொடூரண்களாகவே காண்பிக்கப்படுவர்.
ஆனால், உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.
போரில் அனைவருக்கும் முன்னே அரசன் தான் சாகின்றான்.
படைகள் சிறிது பின்வாங்கினாலும் சிதறிய படைகளில், சேர்ந்த புதியவர்கள் எதிரியின்
கையாட்களாக மாறி முதலில் கொல்ல நினைப்பது தனது முன்னாள் அரசனைத்தான் என்பதை நான்
அனுபவப்பூவமாக உணர்ந்தவன், ஒன்றல்ல இரண்டல்ல பல போர்களில்.
வெற்றி பெறபவனே அரசன்.
போர் என்றால் உண்மையில் சாவுக்கும், வாழ்வுக்குமான சரியான எல்லைக்கோடு அல்ல.
ஒருவன் இயல்பாக சாவதையே இயற்கை விரும்புகிறது.
ஆனால் அரசர்களோ போரில் சாவதையே மிகவும் விரும்புகின்றனர்.
உண்மையில் வீரம் என்பது போரினில் கிடையாது.
அனைத்தும் கோழைத்தனமான தந்திரங்களே. போரில் யார் யார், எதை எதைச் செய்ய வேண்டும் என
தீர்மானித்து இயங்குகின்றோம். ஆனால் வெற்றி யாரிடமிருந்து வருமென யாருக்கும் தெரியாது.
சில சமயம் வெற்றி பெற்றுள்ளோம் என்ற பிரச்சனை இல்லாமல் தங்களை மாய்த்துக்கொண்ட கோழைகளை
போர்க்களத்தில் பார்த்துள்ளேன்.
மக்களை காப்பவன்,
மக்களை காக்க
மனிதர்களை கொன்றுதான்
சாத்தியமென்றால்
அது காட்டுமிராண்டித்தனமானது.
ஒரு கோடிபேரை காக்க
பல்லாயிரம் பேர்
இறக்க வேண்டுமென்றால்
அது முட்டாள்தனமானது.
தாங்கள் மடிவோம்
என்ற உறதியுடன்
போருக்கு புறப்படுபவன்
தாங்களால்
காக்கப்படுவது,
தங்களால் வாழப்பார்ப்பது்
கோழைகளே
என்பதை அறிந்தால்
உண்மையில்
அவன் போர்க்களத்திலிருந்து வெளியேறிவிடுவான்.
வீரம், வீரத்திற்காக மடியுமிடம்
போர்க்களமல்ல
என்பதால் போரை வெறுக்கிறேன்.
நான் தனியாளாக நின்று பலரை கொன்றிருக்கிறேன்.
ஆனால் நாடு, நான் வென்றதாக கூறி
தன்னை எனது பாதத்தில் வைத்து
பிறகு
தீப்ஸின் மூடசதிகாரர்களின்
வலையில் மாட்டி
சதிகாரர்களால்
நாட்டின் காலடியில் தள்ளப்பட்டேன். உண்மையில் அரசர்கள்
பாவம் செய்தவர்கள்.
மன்னிக்க முடியாதவர்கள்.
மன்னிக்க முடியாத செயல் செய்தவர்கள். அரசர்கள்
அவர்களுக்கு கிடைத்ததை அவர்கள் அனுபவித்தார்கள்.
அவர்கள் அனுபவிப்பதற்காகவே
சிலர் அவர்கள் விரும்பியதை தாங்களே விரும்பி அனுபவிக்க கொடுத்தார்கள்.
இதில் ஒளிவு எதுவும் இல்லை.
உண்மையில் பல சமயங்களில் விருப்பமில்லாமலும் அவர்கள் சிலதை அனுபவிக்கும்படியும் ஆனது.
விரும்பிய சில சமயம் வன்முறையில் முடிந்தது. அப்படி விரும்பியவன் எவனொ அவனுக்கு
சாவுமணி அடித்தார்கள்.
அரசர்களுக்கென்று சொந்த சொத்தும் கிடையாது. தனி சுகம் என்பதும் கிடையாது.
அனைத்தும் மக்களுடையது, அனைத்தும் மக்களுக்கானது,

மக்களால் அவர்களைக் காத்துக்கொள்ள அவர்களால் ஒருபோதும் முடியாது என்பதாலேயே அரசனை
அவர்கள் நம்புகின்றார்கள்.

ஈடிபஸ் மயங்கி விழுந்தான்.


ஒரு பறவைகளின் இரைச்சல்கள் அதிகமானதருணம் தீப்ஸின் போரிகையின் சப்தம் கேட்டு
அதிசயித்தான். ஒரு பழங்குடியினை அழைத்து கேட்டான். அவன் ஏதோ தெரியவில்லை. மிகப்
பெரிய உருவங்களில் மனிதர்கள் நகர்ந்து வருகின்றனர் என்றான். ஈடிபஸ் உணர்ந்து கொண்டான். தீப்ஸ்
மக்கள் தன்னைத் தேடி வருகின்றனர் என்பதனை. அவர்களைப் பார்க்க ஈடிபஸ் விரும்பவில்லை.
பழங்குடியினாரிடமிருந்து விடைபெறுகின்றான். தனக்கு தானே
திசைக்காட்டியாக,
வழிகாட்டியாக ஆக்கிக்கொண்டு.
தடியினை தூர எரி்கிறான்.
உலகில் உயிர்வாழும்ஆசையை தவிர்த்து பிறஆசைகள் இல்லாதவன்.
புது புது ஓசைகள் கேட்டும் ஞாபகப்படுத்தியும், இனங்கண்டும் கொள்கின்றான்.
அவைகளுக்கென சில பெயர்களை தனக்குள் வைத்துக் கொள்கின்றான்.
அவன் இதுவரை ருசிக்காதவைகளை, நுகராதவைகளை அனுபவிக்கின்றான்.
தான் தூர தேசம் வந்துவிட்டதை உணர்கிறான்.
இனிமேல்தான் கடினமான சோதனைகளை சந்திக்கப் போகிறான் என்பது அவனுக்குத் தெரியாது.
இப்போது அவனுக்கு தாய், தந்தை, வளர்ப்புத் தாய், தந்தை, குழந்தைகள், நாடு போன்றவை ஏதோ
ஒரு நிகழ்வின் சந்திப்பாகவேபடுகிறது. அரசனாக இருந்த சமயங்களைவிட, இப்பொழுது
செய்யும், ஒவ்வொரு செயலும் அர்த்தமுடையதாகவும், அர்த்தப்படுவதாகவும் உணர்கிறான். அவன்
பாதங்கள் மிளகு விளையும் நாட்டை அடைகின்றது.

.

.


.

ஈடிபஸ் காம்பஸ் -மறுதோன்றி ...புனைவு

.


.

.

.

Thursday, January 21, 2010

எங்கே போய் முன்தோன்றிய மூத்த குடியாவது தமிழன் ...


.


நொரண்டு : காந்தியடிகள் தமிழ் கற்றாரா ...

நண்டு : ....

நொரண்டு : திருக்குறளை கற்பதற்காக ....

நண்டு : .....

நொரண்டு : ஏன் அமைதியா இருக்க .???

நண்டு : ....

நொரண்டு : சரி அது இருக்கட்டும் .
திருக்குறளை
அதன் உண்மையை
தமிழ் கற்றால் தான் அறிந்துகொள்ள முடியுமா ? .
மொழி்பெயர்ப்பு அதனை வெளிப்படுத்தாதா ?

நண்டு :
ஆம் .
அதிக கலைச்சொற்களை பயிலுதல்
அதிக ஆழத்திற்கு இட்டுச்சொல்லும் .
மொழிபெயர்ப்பு ....

நொரண்டு : ஏன் ?

நண்டு :நான் மொழிபெயர்ப்பில் குறளை படித்ததில்லை .யாரவது தங்களின் மொழியில்
குறளைப்படித்து பின் தமிழ் கற்று குறள் படித்தவரிடம் கோட்கவேண்டிய கேள்வி .

நொரண்டு : ஓ ...

நண்டு : ஆனால் தமிழில் கற்பது பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

நொரண்டு : கூறு .

நண்டு :

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.''

என்ற குறளில்
தமிழ் தான் முன்தோன்றிய மொழி என்று கூறுவதன் மூலம் அதனை கற்றபது தான் சிறப்பு என
கூறுகின்றார் .

நொரண்டு : ஓ...


நண்டு :மேலும் ,

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளின் மூலம்
தமிழ் கற்பதனால் உண்டாகும் பயனை கூறுகின்றார் .

நொரண்டு : என்ன பயன் ?

நண்டு :
தமிழ் ,
கற்றவருக்கு மழைபோல்
அனைத்தையும் கொடுக்கும் என்கின்றார் .

நொரண்டு : ஓ... இப்படியும் கூறியுள்ளாரா !!!


நண்டு :
மேலும் ,

''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். ''

என்ற குறளின் மூலம் ...

நொரண்டு : இதுக்கு



என்றும் ...


நண்டு :நீ சொல்வருவதை சொல் .

நொரண்டு : அது வந்து
நான் பாத்த புத்தகத்திலெல்லாம்
''அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு போட்டுருக்கு
நீ
''தமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்'' னு
எடுத்திருக்க...

நண்டு :
அவர்கள் பார்வையே தவறு .
அமிழ்து என்பது தமிழே கிடையாது .
அதுவும் திருவள்ளுவர் காலத்தில்
சுத்தத்தமிழ் பயன்படுத்திவந்த பொழுது .
அமிழ்து என்பது பின்னாள் சேர்த்துக்கொண்ட
ஒரு சொல் .
சுருங்கக்கூறின் திருவள்ளுவர் காலம்
தனித்தமிழ் காலம் .
தனித்தமிழன் காலம் .


நொரண்டு : ஓ ...அப்படியா ..

நண்டு :
பின்னாள் சேர்த்தவர்கள் .
அமிழ்து என்பது தமிழுக்கு முன்பு தோன்றியதுபோல் ஆக்கி . தமிழை பின்னுக்கு தள்ளினர் .
அந்த ஒரு வார்த்தையைக்கொண்டே தமிழை கேவலப்படுத்திவிட்டனர் தமிழை ,தமிழனை ,தமிழ்
பண்பாட்டை .
அமிழ்து ,அமிழ்து,அமிழ்து ...என்று சொல்லிக்கொண்டே வந்தால் தமிழ் என வருமென்றும் சொல்லி
ஏமாற்றியதோடு . தமிழ் இனத்தையே மடையர்களாக்குவதற்கு இலக்கியத்திலும் இதே கருத்தை
புகுத்தி விளையாடிவிட்டனர் . எங்கும் .
நீ அமிழ்தை ஏற்றுக்கொண்டால் தேவர்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் .
தேவர்களை ஏற்றுக்கொண்டால்
அவர்களின் அடிவருடிகளை உமக்கு முன்னவர்களாக ஏற்றுக்கொண்டுவிட்டாய் அவ்வளவே .
இவ்வாறு ஒவ்வொன்றாய் ஏற்றுக்கொண்டு...
எங்கேபோய்
முன் தோன்றிய மூத்த குடியாவது தமிழன்.
தெரிகின்றதா கபட நாடகம் .

நொரண்டு : அடப்பாரதேசிகளா ...

நண்டு :ஆனால் ,இடைச்செருகலுக்கு் குறள் மட்டும் மிகவும் கடினமாக இருந்ததால் மிகவும்
கடினப்பட்டே ஆனால் அமைப்பை உடைக்கும் திறனற்று .
அதனால் தான் இப்பொழுது நம்மால் எளிதில் அதனை அடையாளம் காணமுடிகிறது .
குறளின் சிறப்பே இது தான் .
இப்படியொல்லாம் நடக்கும் என நினைத்துத்தான் என்னவோ வள்ளுவர் குறள் வடிவத்தில் இயற்றினார்
போலும் .

நொரண்டு : சரி ஏன் இத்தனை பீடிகை...
குறளுக்கு விளக்கம் சொல் .

நண்டு :
தமிழ்தினும்
மிகவும் இனிமையான மகிழ்வைத்தரும்
தம் மக்கள்
இட்டும் ,தொட்டும் ,துழந்தும்
சிறு கையாள் அளாவப்பட்டு
குழைந்து எழு்தும் தமிழை பார்க்கும் பொழுது .

நொரண்டு : மழலை எழுத்தை கூழ் என்கின்றார் .

நண்டு :ஆம்

நொரண்டு : மழையை தமிழ் என்கின்றார்

நண்டு :ஆம்

நொரண்டு : ஆகா...ஆகா ...

.


.

.

.வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...

தொடரும் ....

.

.


.

Saturday, January 16, 2010

தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் காயப்படுத்தாதீர்கள்.

.

தமிழ் அனைவருக்கும் உயிர்.
தமிழுக்கு வளம் சேரப்பது நம் அனைவருக்கும் கடன் .
அதைவிடுத்து
இதில் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொள்வது வீணே .
என்னுடன் போட்டி போட நீனைப்பவருக்கு ...
நேரம் தான் வீணாகுமே தவிர
அவரால் ஒருபயனும் தமிழுக்கு விளையாது .
அவர் யாராக இருந்தாலும்
என்னிடம் இவ்விசயத்தில் தோல்வியோ கிடைக்கும்.
காரணம் தமிழுடன் நான் இருக்கின்றேன் என பொருமையுடன் சொல்லிக்கோள்கின்றேன் .
அனைவரும் தான் இருக்கின்றோம் எனக்கூறலாம்
ஆனால்
நான் ஆதித்தமிழ்தொட்டு இருக்கின்றேன் .

சரி விசயத்திற்கு வருகின்றேன் .
எனது வலைப்பூவில்...
திருக்குறளுக்கு உரை எழுதி வருகின்றேன் .
மிக நீண்ட விளக்கத்துடன் எழுதினாலும்
வலைக்கு படிக்க வசதியாக அதில் ஒரு
குறிப்பிட்ட பகுதியை மட்டுமே,
வலையுலகினரும் எனதுரையை
வலையில் படிக்க
வெளியிட்டுக்கொண்டு வருகின்றேன் .
அதில் ஒரு சிக்கலுமில்லை ,
ஆனால் ,
அதனைப்படித்த சிலர்
அதுவும் தமிழ் கற்றறிந்த அன்பர்கள்
அதிலும் குறிப்பாக
நான் வள்ளுவரின் மழை பற்றி எழுதிய
குறள் 11 க்கான விளக்கத்தை படித்துப்பார்த்துவிட்டு
தாங்கள் அதற்கு உரிமைகொண்டாட முனைந்துள்ளதாக அறிந்தேன் .
அதற்கு விளக்கம் கொடுக்கும் முகமாக இதனை வெளியிடுகின்றேன் .

முதலில் இதனை ஆரம்பித்த பொழுதே நண்பர்கள் சென்னார்கள் நிறையா பிரச்சனைகள் வரும்
என்று குறிப்பாக மதவாதிகளிடமிருந்து .
நான் வழக்கறிஞர் என்பதால் அதப்பத்தி கவலைப்படவில்லை .
மேலும் புத்தாகமாக வெளியிட திட்டம் இருப்பதாலும் ,
எழுதி வருவதில் சிலவற்றை மட்டுமே வெளியிடுவதாலும்
பெரிதாக என் எழுத்திலுள்ள முழுமையை
யாரும் வலைப்பூவில் படித்து தெரிந்துகொள்ளவே முடியாது
என்பதாலும் நான் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை .
ஆனால் எனக்கு பிரச்சனை வந்ததோ மதவாதிகளிடமிருந்து அல்ல ,
தமிழ் வாத்திகளிடமிருந்து .

எனது வலைப்பூவில் கடந்த 15.1.2009 அன்று
தமிழ் வள்ளுவரின் மழையில் .
<http://nandunorandu.blogspot.com/2010/01/blog-post_15.html>
என்ற தலைப்பில் 11 ம் திருக்குறளுக்கு உரை எழுதியிருந்தேன் .

அதில்
''உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .
தமிழ் என்பதைஇக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .
இக்குறளின் சிறப்பே இது தான் .
இதனை
உலகிற்கு
முதல் முதலில்
கண்டுபிடித்து
அறிவிக்கின்றவன்
நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன் ''- என எழுதியிருந்தேன் .
இது உண்மையிலும் உண்மை .
இதில் எனக்கு பொருமையே .
ஏனெனில் ,
இது வரை ,
ஏன் இந்தக்கணம் வரைக்கும் கூட
யாரும் இக்குறளுக்கு இவ்வாறு பொருள் கொண்டதில்லை .
மேலும்
எனக்கு முன் திருக்குறளுக்கு உரையொழுதிய யாரும்
எந்த உரையாசிரியரும்
இந்தக்கணம் வரைக்கும் இவ்வாறு பொருளும் கொண்டதில்லை .
உரையும் கொண்டதில்லை .
இதுவே உண்மை.
இதுவே வரலாறு .
வள்ளுவர் தமிழை நான் தான் கண்டுபிடித்தேன் .
அதைவிடுத்து
சிலர் இதற்கு தாங்கள் உரிமைகோர முயற்சிப்பதாக அறிந்தேன் .
மனம் மகிழ்ந்தேன் .இப்படியாவது வள்ளுவத்தை படிக்க ஆரம்பித்துவிட்டனரே என .
ஆனால் அவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கின்றேன் .
திருக்குறளில் புதையுண்டுள்ள உண்மைகள் அதிகம் .
அவசரப்படவேண்டாம் .
இன்னும் நிறையா செல்லுகின்றேன் .
அதில் இது 1000ல் ஒன்று தான்.
ஆதலால்
இது ஒன்றிற்கு மட்டும் உரிமைகோரி உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள் .
இதற்கு ஆதரவாக இருந்து திருக்குறளை ஆழப்படுத்துங்கள் இதுவரை அகலப்படுத்தியது போதும் .
தமிழனாக இருந்து காயப்படுத்தாதீர்கள் .
அவ்வாறு நீங்கள் செய்தால் நான் எனது ஆக்கத்தை மறுபரிசிலனை செய்யவேண்டிவரும் . இதனால்
திருக்குறளுக்கு நீங்கள் மிகப்பெரிய தீங்கு செய்வதுடன் .
தமிழ் சமுதாயத்திற்கே
வரலாற்று ரீதியிலும் ,வாழ்வியல் ரீதியிலும் துரோகம் செய்தவராவீர் .

நிறுத்திக்கொள்ளுங்கள்
இத்துடன் .

நன்றி.


வாழ்க தமிழ் .

வாழ்க தமிழன் .

வாழ்க தமிழினம் .

வாழ்க வள்ளுவம் .

வீழ்ந்தது போதும் இனி வாழ்வோம் .

நன்றி.


வணக்கம் .


கடைசியாக :
இத்துடன் வலையில்
தினமும் வெளிவந்த
''வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ''
இனி மாதம் ஒருமுறை
வெளிவரும் என்பதனை
இது வரை ஆதரித்து வந்த
நல்லுள்ளங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன் .
இத்தனை நாள் ஆதரவு தந்த
நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி .

வணக்கம் .


.

.

.

Friday, January 15, 2010

தமிழ் வள்ளுவரின் மழையில் .

.


நொரண்டு : இன்னைக்கு குழுச்சாச்சா ?

நண்டு : ம் ...

நொரண்டு : குட்டிப்பசங்க கும்மாலமெல்லாம் எப்படி ?

நண்டு : அட ஏன் கேக்கர ,ஒரே ஆட்டம் தான் .
அவங்களோட சேந்து .குளிக்க வைக்கரதுக்குள்ள
அட அட ..பிறகு சாப்பிடர செய்யரது ..ஏன் கேக்கிற
மிகவும் இனிமையான ஒன்று .


நொரண்டு :ம் ...

நண்டு :அவங்க எல்லாம் இயற்கையாகவே
இருக்க விரும்புகின்றனர் .அதனால்தான் தங்களின் இயற்கை விருப்பத்திற்கு மாறாக, தங்களின்
அறிவினை வளர்த்திக்கொள்ள விரும்பாத காரணத்தினால் , தங்களின் அனைத்தையும் அதற்கேற்றார்போல்
அமைத்துக்கொண்டன .

நொரண்டு : நாம அப்படியில்லையே ...

நண்டு : ஆனால் ஒன்று ,அவர்களிடம் பழகிப்பார்த்ததில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வருகின்றன .

நொரண்டு :அதனால்தான் அரிஸ்டாடில் தனது கலாசாலைக்கு உலகொங்குமிருந்து உயிரினங்களை
வரவழைத்து ஆய்வு செய்தனர் போலும் .

நண்டு : உண்மையில் அவைகள் கற்றுத்தரும் ஒவ்வொன்றும் மிகவும் பயனுள்ளவைகளாகவே உள்ளன .


நொரண்டு : ஆமாம் ,

நண்டு : நமது தமிழ் மொழிக்கும் அவர்களின் மொழிக்கும் எவ்வளவு ஒத்துவருகின்றது என்பதை
அவர்களுடன் உரையாடிப்பார்த்த பொழுது மிகவும் ஆச்சரியப்படவைக்கும் பல விசயங்கள் ...

நொரண்டு :என்ன ?

நண்டு : தமிழ் எவ்வளவு தொன்மையானது ,அதோடு மட்டுமல்ல எவ்வளவு இயற்கை இயல்புடன்
இன்றுவரை இருந்து வருகின்றது என்பதற்கு தமிழ் மொழியையும் மற்ற பிற மொழியையும் விலங்கு
மற்றும் பிற உயிரினங்களின் மொழியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிகிறது .தமிழ்
அனைவருக்குமான அதாகப்பட்டது அனைத்து உயிரினங்களுக்குமான மொழியமைவுடன் இருக்கிறது
என்பது .

நொரண்டு :ஓ ,அப்படியா ...

நண்டு :ஆனால் இன்று நாம் அதன் விரியும் தன்மையை மலுங்கடித்துக்கொண்டு வருகின்றோம் .

நொரண்டு :இப்பொது இருக்குற பொழப்போ ....நீ வேற ...

நண்டு : ஒங்கிட்ட சொல்லி ஒரு பயனும் இல்லைதான் .இருந்தாலும் ஒங்கிட்டயும் உண்மையை கொண்டு
செல்வது என் கடமை .

நொரண்டு :யார் கொத்த்து ...சரி ,சரி ,அருக்காத ...ஊருக்குப் போன கதையச்சொல்லு ...

நண்டு : குட்டிப்பசங்களை யெல்லாம் குஷிப்படுத்திட்டு நானும் குஷியாயிட்டு வந்துட்டேன் .

நொரண்டு :ஏன் உடனே வந்துட்டே ?

நண்டு : மழை வர்ர மாதிரி மேகம் கருத்ததா அதான் ...

நொரண்டு : இப்ப எந்த காலத்துல வந்திருக்கு .எனக்குத்தெரிஞ்சு ஞாபகமில்ல . ம்.... எனக்கு
ஒரு சந்தேகம் ...

நண்டு :என்ன?

நொரண்டு :
பெங்கல் பண்டிகைல மழையப்போற்றது தானே முக்கியம் .

இளங்கோ கூட

''மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.'' -னு ....

அப்படி பெங்கல இல்லையே ....

நண்டு : ம் ....

நொரண்டு : என்ன ...ம் ....

நண்டு : வள்ளுவரும்

''வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் தமிழ்தம் என்றுணரற் பாற்று.''

என்ற குறளில் ...

நொரண்டு : இதுக்கு
மு.வ :
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால்,
மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு
அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும் .
என்றும் ....

நண்டு : பொதுவான கட்டொரும்பு உரை .

நொரண்டு : அப்படினா .

நண்டு : உரை எழுதனும் ஆனால் மூளைய பயன்படுத்தாம , முன்னெரும்பு பேன பாதையிலே ஆனால்
கொஞ்சம் நடைமாத்தி .

நொரண்டு : சரி உன் உரை கூறு .

நண்டு : மழை வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தமிழாக உணரும் பான்மையை உடைத்து .

நொரண்டு : இன்னும் ...

நண்டு : உலகத்து வாழும் உயிர்களுக்கு தமிழ் மழை போன்றது .

தமிழ் என்பதை

இக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியதை காண்க .

இக்குறளின் சிறப்பே இது தான் .

இதனை
உலகிற்கு
முதல் முதலில்
கண்டுபிடித்து
அறிவிக்கின்றவன்
நான் தான் என்பதில் பெருமிதம் அடைகிறேன் .

.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....


.


.


.

.

Thursday, January 14, 2010

கரும்பைப்போல் சுவைக்க .


.


.

நொரண்டு : வணக்கம் , தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் .

நண்டு : வணக்கம் . நன்றி ,வாழ்த்துக்கள் .

நொரண்டு : பெங்கலெல்லாம் ஊருள படு ஜோரா ..

நண்டு : ஆம் ,இருந்தாலும் நாளைக்குத்தான் எனக்கு ரொப்பப்பிடிக்கும் .

நொரண்டு : ஓ ,ஒங்களுக்கொள்ளாம் நாளைக்குத்தானே
மறந்துட்டேன் .

நண்டு : நாளைக்குத்தான் நம்மளுக்கு உழச்ச குட்டிப்பசங்களை எல்லாம் குஷிப்படுத்தும் நாள்
.அவங்கெல்லாம் நாளைக்கு ஜிகு ஜிகு இருப்பானுக ...நாளைக்கு அவங்க அடிக்கற லூட்டி
இருக்கே ...அப்ப்பா ... நினைச்சாலே ...இந்த வருசம் குட்டிப்பையன் ஒருத்தன்
புதுசா சேந்திருக்கான் .இன்னைக்கே ஜிமுஜிமுனு ஓடிக்கிட்டு இருந்தான் .நாளைக்கு
நான்வந்தப்பறம் ரண்டு பேரும் குளிப்போமுனு அவன்கிட்ட செல்லிட்டு வந்திருக்றேன் .

நொரண்டு :சரி ,சரி அதோட சேந்தாவது குளிச்சா சந்தோசம் .
சரி வருசம் பூராம் கஷ்டப்படுத்திட்டு ஒரு நாள் மட்டும் இப்படி செய்தல்
சரியா ?

நண்டு : நீ வாழ்க்கைய சுமையா பாக்குற .

நொரண்டு :அப்படியில்லை தவறான புரிதல் .

நண்டு : இல்லை இல்லை ,
உனது புரிதல் தான் தவறு .
அதனால தான் நீ
தமிழனின் கொண்டாட்டத்தை ,
தமிழனின் பண்பாட்டை,நாகரிகத்தை
தவறா அப்படி பாக்குற .

நொரண்டு : ம் ...எல்லாத்துக்கும் பிறவி என்பது ...

நண்டு : பிறவி என்பது ?

நொரண்டு : அதாகப்பட்டது வாழ்க்கை எனும் பெரும் கடலை நீந்திக்கடத்தில் என்பது அவ்வளவு
எளிதானதா ?

நண்டு : இதுக்கு வள்ளுவர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு 21ம் நூற்றாண்டுல இருக்கிற நீ சிந்தி

நொரண்டு : சொல்லு ?

நண்டு :

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்."

நொரண்டு :

இதுக்கு


இப்படியும்

உரை எழுதியுள்ளனர் .


நண்டு : ஆம் .

நொரண்டு :நீ உன் கருத்தா சொல்லு .

நண்டு :

இறைவன் அடிசேராதார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்போல்

நீந்தார் .


நொரண்டு : புரியல

நண்டு :
பிறவியை
பெரும் கடல்
என்றும் ,
சுமைஎனறும்

வாழ்க்கையை நடத்தமாட்டான்
இறைவன் அடிசேராதவன் .
இறைவன் அடிசேர்ந்தவர்கள் தான்
பிறவியையே
பெரும் குற்றமாக நினைத்து
வருந்தி
வாடுகின்றனர் .

நொரண்டு :அப்போ ...

நண்டு : வாழ்க்கை என்னும் சுவையை கரும்பைப்போல் சுவைக்கவேண்டும் .

நொரண்டு : வள்ளுவர் கூறுவது

நண்டு :வாழ்க்கை சுமையன்று .

.


.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் ...
தொடரும் ...







.





.



.

Wednesday, January 13, 2010

யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி கலந்த எனதினிய நன்னாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

எமது ப்ளாக்கை

குட் ப்ளாக்ஸில்

அமர்த்தியமைக்கு

யூத்ஃபுல் விகடனுக்கு

மிக்க நன்றி .

பார்க்க :
போங்கடா...நீங்களும்....
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp


விகடன் வாசகர்கள் அனைவருக்கும்

மற்றும்

விகடன் குழுமத்தினருக்கும்

எனதினிய நன்னாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நன்றி .

என

அன்புடன்

நண்டு @நொரண்டு .


.

.


.

போங்கடா...நீங்களும்...

.

நொரண்டு : படத்த பாரு ?

நண்டு :என்ன
எங்கோ இருட்ல எடுத்து இருக்க...செல்போனிலையா ?

நொரண்டு :ஆமாம் ,
நேத்து நானும் என் மனைவியும் ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருந்தேம் . திடிரென
என் மனைவி ஏங்க ஏங்க இங்க பாருங்க என்றாள் , பார்த்த எனக்கு ஒன்னும் புரியவில படத்துல
பாக்கர பையன் helmet போட்டுக்கிட்டு சைக்கிள ரோட்ட கிராஸ் செய்ய பாத்துக்குட்டு
இருந்தான் .நான் வண்டிய நிப்பாட்டி போட்டோ எடுத்தேன் . அவன் டிஸ்டப் ஆகல ,என்னாடா
வித்தியாசமா இருக்கானேனு அவங்கிட்டப்போய் ஏப்பா helmet போட்டுருக்கனேன்.அதுக்கு அவன்
நீங்க எதுக்கு போட்டுரிக்கீங்கனான்? தலைக்கு பாதுகாப்புக்கு என்றேன் .அவன் சொன்னான்
அதுக்குத்தான் நாங்களும் போட்டுருக்கு- னான்.இது எங்களமாதிரி வண்டிவச்சிருக்கிறவங்க
போடறது,சைக்கில் ஓட்டரவங்க போடறது வேறனு சொன்னேன் . போங்கடா...நீங்களும்...னு
செல்லிட்டு பரந்துட்டான் ..

நண்டு :அவன் கருத்தும் சரிதானே.

நொரண்டு :அதனால ...

நண்டு :நல்ல கருத்துக்களை அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் .

நொரண்டு :இல்லைனா ?

நண்டு : வாழ்க்கையே விபத்துத்தான் .

நொரண்டு :என் இப்படி சொல்ற...

நண்டு : நான் சொல்லவில்லை ...

நொரண்டு : வள்ளுவரா ...

நண்டு :ஆம்.

நொரண்டு :என்னானு ...

நண்டு :

''கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. ''

நொரண்டு :சரி ,அர்த்தம் சொல்லு .

நண்டு :

செவிடு என்பது காது என்ற கருத்தின் தவறு அல்ல,
குருடு என்பது கண்என்ற கருத்தின் தவறு அல்ல,
ஊமை என்பது வாய்என்ற கருத்தின்தவறுஅல்ல, அதுபோலவே
எண்குணத்தான் தாளை வணங்கா என்பது தலை என்ற கருத்தின் தவறு அல்ல .


நொரண்டு : இன்னும் .

நண்டு : தாளை வணங்கவேண்டும் என்ற கருத்து தான் தவறானது .

நொரண்டு : ம் ...மேலும் ...

நண்டு :
எளிமையான மனிதனுக்குத்தேவையான உயர்ந்த குண நலன்களை பெற்றவர் தலை தாளை வணங்கா.

நொரண்டு : சுருக்கமாக

நண்டு :
நல்ல கருத்துக்களை
அறிந்து
ஏற்றுக்கொண்டு
தேவையான குண நலன்களை பெற்றவர்
எளிய உயர்ந்த குறையில்லா மனிதர் .

.


.

வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.


.


.

Tuesday, January 12, 2010

தமிழில் தமிழர்கள் கற்றது ...

.

நொரண்டு :
''எனக்குத்தெரிந்து தமிழில் ஒன்னும் இல்லை '' என என் நண்பன் சொன்னான் ...

நண்டு : எதுக்கு இதப்பேசினிங்க ...

நொரண்டு :ஏன்?

நண்டு : அப்பத்தான் அதுக்குத்தகுந்த விளக்கம் கொடுக்க முடியும் .


நொரண்டு : தமிழ் மொழியின் சிறப்பு பத்தி நான் சொன்னதுக்கு ...அறிவார்ந்த விசயங்கள்
தமிழில் இல்லை,அறிவை தமிழ் பிரதிபளிக்கவில்லை . தமிழில் அறிவியல் பார்வையில்லை ....

நண்டு : அப்படியில்லை ,
உண்மையும் அதுவல்ல .
அப்படி ஆக்கப்பட்டு விட்டது
பக்தி இயக்கங்களால் .
தமிழ் மொழியே பக்தி இயக்கமாக ஆக்கிவிடப்பட்டுவிட்டபடியால் .
அப்படி
ஒரு மொழி
பக்தி இயக்கமாகும் பொழுது
அந்த மொழியில்
பக்திப்பரவசம் மட்டுமே இருக்கும் .


நொரண்டு : அப்படியா ?

நண்டு : இதைத்தான் வள்ளுவர்

> அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
> பிறவாழி நீந்தல் அரிது.

என்றார் .


நொரண்டு :அப்படினா?


நண்டு :
''அறவாழி அந்தணன்
என்பவனால்
பிறவாழி நீந்தல் முடியாது
அவன்தாள் சேராவிடில் ''


நொரண்டு : புரியல ...

நண்டு : அறத்தை மட்டுமே போதிக்கும் அந்தணர்களால் அறக்கருத்துக்களைத்தவிர்த்து பிறவற்றை
போதிக்க முடியாது .


நொரண்டு : இதிலிருந்து அவர் கூறும் செய்தி .

நண்டு : பிறவற்றையும் கற்கவேண்டும் .


நொரண்டு : ஓ,
தமிழன் தமிழை இப்படித்தான் கற்றானா?. மற்றவற்றை கற்காமல் .


நண்டு :இப்படித்தான் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது .

நொரண்டு : இப்பத்தான் எல்லாத்தையும் கற்கின்றானோ? .


நண்டு : இருந்தாலும்
இது ஆங்கிலேயர்கள் தந்தது .

நொரண்டு : ஓ ,
அவ்வளவு அறிவுப்பசி தமிழர்களுக்கு... ஆங்கிலேயர்கள்
நமக்கு உருவாக்கிய கல்வி முறை குமாஸ்தாக்களை உருவாக்கும் கல்வி முறைனு சொல்றாங்களே ...

நண்டு :
இப்பவும்
அப்படித்தான்
கற்றுவருகின்றான்
தமிழன் தமிழை .
அதனால் தான் ஆங்கிலத்தின் மீது தமிழனுக்கு அவ்வளவு ஆர்வம் .

நொரண்டு : அதனால் ?

நண்டு :நாம் உருவாக்குவோம் அறிஞர்களை உருவாக்கும் தமிழ் கல்வி முறையை .

.


.

.

.

Monday, January 11, 2010

என்னை யாரும் இங்கு அசச்சுக்கமுடியாது என்று இருமாப்புடன் திரியரானுக...

.



நொரண்டு :

திருப்பதி கோயிலுக்கு போறவங்க பூராம்
பெரிய பெரிய ஆளுங்களா ,
பணக்காரங்களா
இருக்காங்கப்பா .
என்ன கூட்டங்கற ...


நண்டு : ஏன்கிட்ட ஏன் சொல்ற

நொரண்டு :

இல்ல,
அவன்அவன் ...
பெரும்புள்ளியாஇருக்கறவனேல்லாம்
அங்க க்யூவில 5 மணிநேரம் 6 மணிநேரம்னு ...


நண்டு : என்ன சொல்லவர்ர ...

நொரண்டு : ம்...

நண்டு : என்ன ம்....

நொரண்டு :


நான் தான் மிகப்பெரியவன் ,
எனக்கு பதிலா எவனாவது பொறந்து தான் வரனும் ,
தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலர் ,
எமக்கு நிகர் யாரும் இல்லை ,
எனக்கு உவமையாக்க்கூட
இங்கு யாருக்கும் தகுதி இல்லை ,
என் பீல்டுல நான் தான் சூப்பர் ஸ்டார் ,
நா படிக்காத விசயமே கிடையாது ,
நான் பாக்காத பணமில்லை ,
நான் போகாத ஊரில்ல ,
நான் மிகப்பெரிய சதனையாளர்
யாராலையும் எட்ட முடியாது என்னை,
எல்லாம் எனக்கு தெரியும் ,
என்ன மீறி எதுவும் நடக்காது ,
என்னால் எதையும் சமாளிக்கமுடியும் ,
என்னை யாரும் இங்கு அசச்சுக்க முடியாது
என்று
இருமாப்புடன் திரியரானுகல சிலர் இவனுகளுக்கு ஏதாச்சும் எதிர்பாராமல் நடந்துச்சுனா என்ன செய்வானுக ?

நண்டு : என்ன செய்வார்கள் ?

நொரண்டு : பதில செல்லுப்பா ?

நண்டு :

யார் கர்வத்துடன் இருந்தாலும் முதலில அவன் மடையனாகத்தான் இருப்பான் ...

நொரண்டு :

ஏய் ,ஒரேயடியா என்ன விட்டா ஒவரா போற ,
நீ என்ன பெரிய இவனா? ,
மடையங்கர ,
என்ன நினைச்சுக்கிட்ட ,
நீயும் கர்வமாத்தானே பேசற ...


நண்டு :

நொரண்டு இப்படி நீ நினைப்பதுவும்
கர்வம் தான் ..
உன்னுள் உள்ள கர்வம் இது .
உன்னால் முடிந்த
வெளிப்படுத்த முடிந்த
கர்வம் .



நொரண்டு : எப்படி


நண்டு :

எதையும் சிந்திக்காமல் ,
சொல்லவந்ததையும் புரிந்துகொள்ளாமல் ,
மடையன் என்ற வார்த்தையை கேட்டவுடனே நம்மைத்தான் என்ற முன்முடிவுடன் இருக்கின்றாய் அல்லவா ?
அது தான் அகந்தை .


நொரண்டு :ஓ ...


நண்டு :

இப்படி ''தனக்குவமை இல்லாதான் '' என தனக்குள் நினைப்பவருக்கு வரும் மனக்கவலை பற்றி வள்ளுவர் என்ன சொல்றார்னு தெரியுமா?


நொரண்டு : சொல் .


நண்டு :

''தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. ''



நொரண்டு :

இதுக்கு பரிமேலழகர் கருத்துரை
''கடவுளுடைய திருவடிகளைச் சேராதவர்களுக்கு மனக்கவலை நீங்கு்தல் இல்லை ''


நண்டு : அடுத்து ..

நொரண்டு : நீ சொல்லு ...

நண்டு :

''தனக்குவமை இல்லாதான் என்பவனால்
அவனின் மனக்கவலை மாற்றல்முடியாது
தாள்சேராவிடில் .''


நொரண்டு : இன்னும் சொல்லு ...

நண்டு : இருமாப்புடன் திரியரானுகல சிலர் இவனுகளுக்கு ஏதாச்சும் எதிர்பாராமல் நடந்துச்சுனா என்ன செய்வாங்கனு கேட்டாயல்லவா அதற்கு பதில் அவர்கள் சாமி குப்பிடப்போவார்கள் .


நொரண்டு : இப்படி சுருக்கம சொன்னா எனக்கு புரியாது விரிவா சொல்லு .

நண்டு : இத தனியா புத்தகமா போடறேன் .அதுல விரிவா சொல்ரேன், அப்ப முழுசா தெரிஞ்சுக்கோ .

நொரண்டு : அதுவரைக்கும் ...

நண்டு : ப்ளாக்லேயே படி .

நொரண்டு : சரி இதுக்கு அர்த்தம் .

நண்டு : கர்வம் கூடாது .




.




.




வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் .....
தொடரும் .....
.










.





.



.

Sunday, January 10, 2010

பொய் கூறாதீர்கள் மதவாதி்களே ...

.


நொரண்டு : மதவாதி்களின் சேட்டைகள் தாங்க முடியல வரவர .

நண்டு : ம்இம் ...

நொரண்டு : .இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும் ,அவன் நெறி நின்றலும் செய்தார் வீடு
பெறுவர் எனகூறி
இன்று இளைய சமுதாயத்தை ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கி, மதவாதிகளாக்கி
கடைசியில் தீவிரவாதிகளாக்கி சமுதாயத்தை சீரழிக்கின்றனர் ....

நண்டு : இப்பொழுது மட்டுமல்ல எக்காலத்திலும் அவர்கள் அப்படித்தான் .

நொரண்டு :ஓ ..

நண்டு : அதற்குத்தான் வள்ளுவர்

'' பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். ''

என்ற குறளில் சூடு போடுகின்றார்

நொரண்டு :அப்படியா .

நண்டு : ஆம்


நொரண்டு : உன் கருத்துரை

நண்டு :


'' பொறிவாயில் ஐந்தவித்தான்
தான்
நீடுவாழ்வார்
என பொய் கூறாதீர்

ஒழுக்க நெறி நின்பவர்கள் தான் நீடுவாழ்வர் ''


நொரண்டு : பொருள் ..

நண்டு : நீ ஏற்கனவே மதவாதி்கள் கூற்றாக சொன்னதுதான் 'பொறிவாயில் ஐந்தவித்தான் '
என்பதற்கு விளக்கம்.

நொரண்டு :சுருக்க கூறு ..

நண்டு : ''கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர் .''

நொரண்டு : அப்ப வள்ளுவர் ''பொய் கூறாதீர்கள் மதவாதி்களே '' என்கின்றார்

நண்டு : ஆம் . அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தை சீரழிக்காதீர்கள் என்றும் கூறுகின்றார் .


.

.

.

Saturday, January 9, 2010

முடி வெட்டினா மூளை வளருமா ,தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .

.


நொரண்டு : தமிழ் எழுத்துச்சீர்திருத்தும் பற்றி என்ன நினைக்கற ? .

நண்டு : முடி வெட்டினா மூளை வளருமா?.

நொரண்டு : அப்ப ஏன் மொட்டை அடிக்கராங்க ?

நண்டு : மூடத்தனமுனு நீயே ஒத்துக்கர .

நொரண்டு :முட்டாள் தனமுனுஞ் சொல்லு .

நண்டு :

மொழினா என்னானு தெரிஞ்சுக்காம
தவறா புரிஞ்சுக்கிட்ட
சில முட்டாள்களின்
மூட நம்பிக்கையுனு ...

நொரண்டு :பெரியாரின் சிர்திருத்தம் ?

நண்டு :
அறிவுப்பூர்வமானது .
உன் முட்டாள்தனத்து ஏன் அய்யாவை இழுக்காத .

நொரண்டு :

இல்ல ,
இருந்தாலும்
மாற்றந்தேவை தானே,
அயல் நாடுகளில் வாழும் ...


நண்டு :

மொழிய காப்பாத்தனுமுனா
என்ன செய்யனும் தெரியுமா ?

அப்படி சொல்றவங்ககிட்ட
நான்
ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கின்றேன் .
அதுக்கு பதில் யார் சரியா செல்றாங்களே
அவங்க எழுத்துச்சீர்திருத்தம் செய்யலாமுனு சொன்னா செய்யலாம்.

நொரண்டு : கேள் .


நண்டு :

இப்பொழுது

''புதிதாக ஒரு மொழி உருவாக சாத்தியக்கூறு உண்டா ?''

நொரண்டு : ம் ...

நண்டு : பதில் சொல்லட்டும் .
அதற்கு பிறகு
நான் மொழிக்கான இலக்கணம் கூறுகின்றேன் .
அதுவரை .


நொரண்டு :அதுவரை ?.

நண்டு : இருப்பதை வளர்த்தப்பாருங்க .

நொரண்டு :இல்லைனா?

நண்டு : இல்லைனா சும்மாகிடங்க ,
ஏன்னா
நீங்க
முடிய வெட்டுனா மூளை வளரும்னு நினைக்கறீங்க .

நொரண்டு : என்ன சொல்லற

நண்டு : முடிய வெட்டுனா எங்காவது முளை வளருமா? .அப்படித்தான் இருக்கு நீங்க
சொல்லறது அதச்சொன்னேன் .

நொரண்டு : அப்ப தமிழ் ?

நண்டு :

தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .

இருந்தாலும் தமிழின் மேல் கொண்டுள்ள உமது பாசத்திற்கு
உம்மை வாழ்த்துகின்றேன் .

நொரண்டு : இதுக்கும் வள்ளுவரிடம் பதில் இருக்குனு சொல்லூவியே ?

நண்டு :

சரியா சொன்ன

இருக்கு ...


.

.


.

ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் ...



.


.



நொரண்டு :ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் ...

நண்டு : என்ன , ரொம்ம குசியா இருக்க ...

நொரண்டு : ஆமாம்ப்பா ,ஆமாம் .கண்டகண்டத யோசிக்காம ஆண்டவன் கொடுத்ததை அனுபவிக்கலாமுனு பாட்டு பாடிக்கிட்டு ... பாட்டகேள் ,''ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் ...என்ன அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் ...''
ஹக்...ஹக்...ஹா...

நண்டு : ம்...

நொரண்டு : இது 21ம் நூற்றாண்டு ,மனிதனை அனுபவிடானூ ஆண்டவன் அனைத்தையும் வாரி,வாரி அவவனுக்கு கொடுத்து அனுபவிக்கவே விட்டுவிட்ட யுகம் ....

நண்டு : ம்...ம்...

நொரண்டு :என்ன ,இதுக்கும் வள்ளுவர் ஏதாச்சும் சொல்லிருக்காரானு யோசிக்கிறையா ?

நண்டு : ம்...ம்...ம்...


நொரண்டு :என்ன சொல்ற ?

நண்டு :

'' இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. ''

இதுக்கு பொருள் தெரிஞ்சா நீ ...


நொரண்டு : இதுக்கு ...


நண்டு : யார் ,யாரு என்ன சொல்லிருக்காங்கனு ,அதான சொல்ல வர .

நொரண்டு :ம்..

நண்டு : பரிமேலழகர் உரையமட்டும் சொல்லு ?

நொரண்டு :

'' கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் அடையா.''

நண்டு : மு.வ ....

நொரண்டு :இதா ,உனக்கு தெரியாதா , உன் கருத்துரைய கூறு.

நண்டு :


''இருள் சேரும் ,

இருவினையும் சேராது ,

இறைவன் கொடுத்த பொருளை சேர்த்தவன் என்ற புகழுடன் வாழ்பவரிடத்து .''


நொரண்டு : அப்படியா


நண்டு : இங்கு இறைவன் என்பது அரசையும் குறிக்கும் . சேர் என்பதில் அடைந்தவன் ,பெற்றவன் என்பதும் அடங்கும் .

நொரண்டு : ஜாலியா இருந்தேன் ....





.


வள்ளுவர் அறியப்படவேண்டிய உண்மைகள் -6




.


.



Friday, January 8, 2010

அரிஸ்டாடிலும் சமச்சீர் கல்வியும் வள்ளுவரும் .

.

.


நொரண்டு :

LYCEUM ,
LYCEUM ம்னு
எங்கண்ணன் சொல்லிக்கிட்டிருந்துச்சு .
அப்படினா என்னாப்பா ?


நண்டு: எங்க ?


நொரண்டு : எங்கநாத்தான் சொல்லுவியா ?


நண்டு:

சரி ,
அதுவா ,

ஏதென்சில அரிஸ்டாடில் நிறுவிய கலைக்கழகம் .


நொரண்டு :அப்படினா ...

நண்டு: எப்படிச்சொல்ல ...ம்....ம்...


நொரண்டு :அதுக்கு ஏன் இந்த இழு இழுக்கர ?


நண்டு:

அதுவா ,

''வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. ''

என்ற குறள் ஞாபகத்திற்கு வந்தது .
அதான் .


நொரண்டு :

இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் .
நீ சொல்ற குறலுக்கு

பரிமேலழகர் அவர்கள் :

''கடவுளடிகளைச் சேர்ந்தவர்களுக்குப்
பிறவித் துன்பங்கள் இல்லை'' எனவும் ,

மு.வ அவர்கள்:

''விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின்
திருவடிகளைப் பொருந்தி
நினைக்கின்றவர்க்கு
எப்பொழுதும்
எவ்விடத்திலும் துன்பம் இல்லை '' எனவும்,

ஆ.வே.ரா.அவர்கள்:

''விருப்பும் வெறுப்பும் இல்லாத
இறைவன் நெறியில் வாழ்பவர்க்கு
எப்பொழுதும் துன்பம் இல்லை '' எனவும் ,
....

நண்டு:

நிப்பாட்டு ...
ம் ...
பரவாயில்லையே ...
நீயும் பல உரைகள படிக்க ஆரம்பிச்சிட்ட போல .
நல்லது .
இதயெல்லா ஏன் படிச்ச ?


நொரண்டு :

நீ என்ன சொல்லுகின்றாய்
என தெரிந்துகொள்ளத்தான் .


நண்டு: ஓ ,அப்படியா ..

நொரண்டு :

அதவிடு ,

உன் கருத்துரைய இப்ப சொல்லு .


நண்டு:

''போதிப்பதில் ,
பாகுபாடு இல்லாத
ஆசிரியரை பெற்ற மாணவர்களுக்கு
என்றும் இடும்பை இல்லை ''

நொரண்டு :நல்லா சொல்லு .

நண்டு:

அதாகப்பட்டது ,

தனது மாணக்கர்களிடம்
இவன் உயர்ந்தவன் ,
இவன் தாழ்ந்தவன் ,
இவன் பணக்காரன் ,
இவன் ஏழை ,
இவன் படிக்கின்றான் ,
இவன் படிக்கவில்லை -
என்ற இது போன்ற
எந்த ஒரு பாகுபாடுகளையும் பார்க்காது

அனைவருக்கும்
ஒரே மாதிரியாக ,
சரிநிகர் சமமாக ,
கல்வி கற்றுத்தரும்
ஆசிரியரைப்பொற்றவர்கள்

இடும்பை என்னும் கேட்டிற்கு ஆளாகார் ..

நொரண்டு :

அட ,
இது நம்ம

''சமச்சீர் கல்வியில்லையா '' ?

நண்டு:

ஆம் ,
அதுவும் அடங்கும் .


நொரண்டு :

ஓ ,
வள்ளுவர் அப்பயே செல்லிருக்காரு பாத்தியா.


நண்டு:

ஆம் ,
அது மட்டுமல்ல
அரிஸ்டாடிலும்
அத்தகைய ஒரு கலைக்கழகம் நிறுவி
மக்களுக்கு நல்லறிவு படைத்திருக்கின்றார் .

நொரண்டு : அது ...


நண்டு: அது தான் LYCEUM ம்


நொரண்டு :

ஓ......

நண்டு:


இடும்பை என்பதில்
இவனெல்லாம் ?,
யார்ரா சொல்லிக்கொடுத்தா ?,
நீயெல்லாம் படிச்சவன்? ,
யாரா உனக்கு வாத்தியார் ?,
எங்க படிச்ச ?,
படிச்சவனா இருந்தா இப்படி செய்வானா ?,
வெளிய சொல்லாத படிப்புக்கே கோவலம்? .
ஏய்யா படிப்ப கோவலப்படுத்திரிங்க ?,
உங்கள மாதிரி படிச்சவனால தான்
உலகமே கெட்டுப்போச்சு ? ,
என்பதுவும் இன்ன பிறவும் அடங்கும் .


நொரண்டு :

ஓ......ஓ....ஓ ....


.....

வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -6.

தொடரும் ...


.


.

.

.

.

.


.

Thursday, January 7, 2010

கஞ்சன் பெரியாரும் 1000 பொற்காசுகளும்

.


நொரண்டு :

கஞ்சன் பெரியார்
உன் குறலுக்கு 1000 பொற்காசுகளும்...


நண்டு: என்ன உளர


நொரண்டு :

சொல்லவர்ரத சொல்லவிடு முதல

நண்டு: சரி சொல்லு .


நொரண்டு :

அட ,
தந்தைப்பெரியார்
இப்போ இருந்தார்னா
உன் குறலுரைகள்
பகுத்தறிவை
வளமைசெய்யுதுனு ...


நண்டு: வளமைசெய்யுதுனு ...


நொரண்டு :

அதான்
சொல்லறேன்ல
சொல்லவந்ததை
சொல்லவிடு முதல


நண்டு: சரி


நொரண்டு :

உனது
ஒவ்வொரு குறலுரைக்கும
1000 பொற்காசு்கள்
அறிவித்திருப்பார் .


நண்டு:

அது என்ன
கஞ்சன் பெரியார்


நொரண்டு :

அவரை அப்படித்தான்
அவரின் சீடர்கள் சிலர்
சொல்றாங்க .


நண்டு:

அப்படிப்பட்ட கஞ்சன்
எப்படி
1000 பொற்காசு்கள்
தருவாருனு சொல்ர


நொரண்டு :

மனிதனை
மனிதனாக்கும் பகுத்தறிவை ,
பகுத்தறிவுடன்
பரப்பும்
ஒவ்வொரு முயற்சிக்கும்
பெரியார்
தனது செல்வம் அனைத்தையும்
தாராளமகக் கொடுக்கக்கூடியவர் .
அதுமட்டுமல்ல
அவர் இருந்திருந்தால்
உனது உரையை தானே
தனது செலவில் பதித்து ,
தானே ஊர் ஊராக ,
வீதி வீதியாக
எடுத்துச்சென்று
இலவசமாக தந்திருப்பார் .
அப்படி
மனிதன்
பகுத்தறிவு பெறவேண்டும்
என்பதில்
அவ்வளவு
அளவுகடந்த அவா .


நண்டு:

எனக்கு சரியா செல்லு .


நொரண்டு :

பெரியார் புரிந்து கொள்ளப்படவேண்டிய
புதிர் .

நண்டு:

திருவள்ளுவர் மாதிரினு
சொல்லவர்ர


நொரண்டு :

ஆம் .

நண்டு:

நான் ஒன்னும்
பகுத்தறிவுக்கருத்துக்களை
பரப்பவில்லையே ,
திருவள்ளுவர்
என்ன எழுதினாரோ
அதத்தானே சொல்லரேன்

நொரண்டு :

அட ,நண்டு
திருக்குறளுக்கு
மாநாடு
நடத்தியவர் பெரியார் .
உன்னைப்பார்த்தா
என்ன சொல்லுவார்
தெரியுமா ?


நண்டு: என்ன சொல்லுவார் ?


நொரண்டு :

வாங்க நண்டு ,வாங்க ,
ரொம்ப நல்லது செஞ்ச ,
இத்தனை நாளா
இருந்த வெங்காயங்க
திருவள்ளுவரை
தப்பாவே சொல்லிப்புட்டானுங்க ,
திருவள்ளுவர் என்ன செய்வார் ,
நீ எழுது ,
நான் உன்
ஒவ்வொரு குறளுரைக்கும்
1000 பொற்காசு்க தரேன் .
தமிழனின் அடையாளத்தை
மறைக்கறதே
அவனுகளுக்கு வேலையாபோச்சு .
என்ன அநியாயம் ,
என்னாமா போட்டு
மறச்சுட்டானுக ....
இத நானே வெளியிட்டு
இலவசமா கொடுக்கலாமுனு
இருக்கேன் ...

அப்படினி சொல்லுவார்

நண்டு:

ஓ ,
மலர்மிசை ஏகினான் போல்

நொரண்டு :

அது என்ன
மலர்மிசை ஏகினான்

நண்டு:

''மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.''


நொரண்டு : கருத்து


நண்டு:

நல்ல ஆசிரியரை பொற்றவர்கள்
உலகம் போற்ற
நீடுவாழ்வர் .

நொரண்டு : புரியல

நண்டு:

உனக்கு எப்பத்தான் ,
எதுதான்
புரிஞ்சிருக்கு .


நொரண்டு :

சரி ,
புரியும் படி சொல்லு.


நண்டு:

மலர்கள் தங்களின் மணத்தினை
எவ்வாறு மிச்சம் மீதி வைக்காமல்,
அதில் ஒளிவு எதுவும் இல்லாமல் ,
அப்படியே பரப்புகின்றதே
அதைப்போல
தான் கற்றது அனைத்தையும்
கற்றுத்தருபவனை .
அந்த நல்ல ஆசிரியனை
''மலர்மிசை ஏகினான் ''என்றார் .
ன்- குணத்தினால் வந்தது.
.

''மாணடி சேர்ந்தார்''
அப்படிப்பட்ட
மாண்புமிகு நல்ல ஆசிரியரிடம்
மாணவராக சேர்ந்தவர் எனக்கொள்க .
ர்- கற்பதனால் வந்தது.

அடி-ஆசிரியர் .

''நிலமிசை ''
உலகம் முழுதும் புகழ் பரவி .

இப்ப புரிந்ததா ..


நொரண்டு :ஓ

நண்டு:

பெரியார்
ஒழிவு மறைவு அற்றவர் ''மலர்மிசை ஏகினான் ''

நொரண்டு :

சரிதான் ,
உண்மையில்
அவரிருந்தால்
1000 என்ன ...


நண்டு:

இதா
இந்த பில்டப்பு எதுக்கு .


நொரண்டு :

நான் எதுக்கு பில்டப்பு கொடுக்கனும் .

நண்டு:

பெரியாரை விட்டா
ஆளே யில்லையா?

நொரண்டு :

ஏன் ஆள் சேத்தர ,
நீ என்ன போருக்கா போர ...


.....

வள்ளுவர்
அறியப்படவேண்டியஉண்மைகள் -5.

தொடரும் ...


.


.

.

Wednesday, January 6, 2010

யார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா ? திருவள்ளுவரா ?

.

நொரண்டு :

யார்
சிறந்த சிந்தனையாளர் -
பெரியாரா ?
திருவள்ளுவரா ?

நண்டு: ஏன் கேட்கின்றாய் ?

நொரண்டு :
என் பிரண்டு கேக்கச்சென்னான் .

நண்டு:
அப்போ
உனக்குத் தேவையில்லாத பதிலுக்கான கேள்வியை கேட்கிற .

நொரண்டு : ம் ....

நண்டு:
இப்படி
தேவையில்லாதகேள்விகள்,
அதற்கு தேவையில்லாத பதில்கள் .
இதைவைத்தே ஓட்டும் கூட்டத்தில் இருப்பதில் உனக்கு மகிழ்ச்சி .
இப்படிப்பட்ட நிலைகளை
இன்று எங்கும் காண முடிகிறது. இது ஒரு வகையான மூடப்பழக்கமே .

நொரண்டு :
பதிலச்செல்லத்தெரியாதவனின் மேடை கோணலாக எடுத்துக்களாமா .

நண்டு:
அதப்பத்தி எனக்கு கவலையில்லை .

நொரண்டு :
சரி ,
நான் கேக்கரேன் , சிந்தனையாளர்னா
வரைமுறை எது ,என்ன ?

நண்டு:
அப்படி வரைமுறைப்படுத்த முடியாது .
இருந்தாலும் தோராயமாகச்சொல்ல்லாம் , ஒருவருடைய கருத்து
மக்களை நல்லவழியில்
கொண்டு சென்றதானால்
அவர் சிந்தனையாளர் .

நொரண்டு :
சரி ,
நான் கேக்கரேன் ,
உன் கருத்துப்படியே இப்ப சொல் யார்
சிறந்த சிந்தனையாளர்-
பெரியாரா ? திருவள்ளுவரா ?

நண்டு:
திருவள்ளுவர் எழுதிய குறள் ஒன்றை சொல்ரேன் கேள் .

நொரண்டு :ம் ...

நண்டு:
''கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். ''

நொரண்டு : சரி ,கருத்துரை

நண்டு:
கல்வி கற்றதனால் ஆகக்கூடிய பயன் எதுவாக இருக்குமெனில் .
அரசன் ,
ஆண்டவன் என தொழாமல் இருப்பதுவே .

நொரண்டு :
இன்னும் சரியாக சொல் .

நண்டு:
கல்வி சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும் படியாக இருக்கவேண்டும். இல்லையெனில்
கற்றதனால் பயன் எதுவும் இல்லை என்பது .

நொரண்டு :
இத திருவள்ளுவர் கி.பி.2500க்கு முன்னே செல்லிச்சென்றுள்ளார் .

நண்டு:
ஆம் ,
அதுவும்
இது 2வதா தொகுத்துள்ளனர் .

முதல் குறள்
எழுத்தையும் ,
இரண்டாவது குறள்
எழுத்தினால் வளரும் கல்வியையும் பற்றி கூறியதிலிருந்து
என்ன ஒரு அழகான திட்டமி்டல். என்னோ திருவள்ளுவரின் சமூக அக்கரை .

நொரண்டு :மதிக்கக்கூடியதே .

நண்டு:
இப்படிப்பட்ட குறளை
எனக்கு கொடுத்தவர்
தந்தை பெரியார் .


நொரண்டு :ஓ...

நண்டு:
இப்பொழுது
நீ சொல்
யார் சிறந்த சிந்தனையாளர்- பெரியாரா? திருவள்ளுவரா? .

நொரண்டு :ம் ....

நண்டு:
ஆனால் ஒன்று .
நான் இதனை
பயின்ற இடம் வேறு .

நொரண்டு :
குழப்பாத
பெரியார் பாசறையில் இல்லையா.
அங்க
இத சொல்லித்தரதில்லையா,
அப்புரம் எங்க கத்துக்கிட்ட .


.......

வள்ளுவர் -
அறியப்படவேண்டிய உண்மைகள்-4

...தொடரும் .


.

.


.


.


.

.

Tuesday, January 5, 2010

திருவள்ளுவர் சிந்தனையாளரெனில் ...

.


நோரண்டு :

திருவள்ளுவர் சிந்தனையாளரெனில்...

நண்டு :

என்ன எனில்
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளர்னு சொல் .

நோரண்டு :

சரி ,
உலகில் தோன்றிய
முதல் சிந்தனையாளரெனில் ...
திருக்குறளில் எனக்குள்ள சந்தேகம் என்னானா ?

நண்டு : என்ன ?

நோரண்டு : என்னானா ?

நண்டு : என்ன ?


நோரண்டு :

சரி ,

''அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. ''

கருத்தென்ன சொல் பாப்போம் ?


நண்டு :

ஆதி பகவனுக்கு
முன் தோன்றியது
அகரத்தை முதலாகக்கொண்ட
தமிழ் எழுத்துக்கள்.


நோரண்டு : புரியல ...

நண்டு :

இதிலிருந்து கடவுளுக்கு முன் எழுத்துக்கள் தோன்றியது என்கின்றார் .

நோரண்டு : புரியல ...


நண்டு :

மனிதன் தோன்றும் பொழுது கடவுள் தோன்றவில்லை . எழுத்துக்கள் தோன்றியபொழுதும் கடவுள்
தோன்றவில்லையடா மனிதா என்கின்றார் .


நோரண்டு :

இது யாருடைய உரை?.
உன் உரையா ?
நீ சொன்னப்புறம்
நான் படித்த
உரைகளில்
எதிலும் இப்படியில்லையோ .


நண்டு :

ஆம் ,எனது உரை தான் .

நீ என்னடானா ,
யாரோ எழுதிய உரையை வைத்து
ஒரு சிந்தனையாளனை ,
கவிஞனை
புரிந்துகொண்டேன் ,
எனக்கூறுவது
உனக்கே முட்டாதனமாக
தெரியவில்லையா.
உனக்குனு அறிவில்லையா ?.
நீ சிந்திக்கவே மாட்டாயா ?.
.

நோரண்டு:

அப்படியாக்கிவிட்டார்கள் எங்களை.

நண்டு :

யாரைக்குறை செல்கின்றாய் .
இப்பொழுது
உன்னால்
சிந்திக்க முடிகின்றது தானே .
ஏன் சிந்திக்க மாட்டேங்கர .

நோரண்டு :

நீ மட்டும் சொன்ன ..


நண்டு :

நான் என்ன சொன்னேன்...

நோரண்டு :

அதுக்கொல்லாம் காரணம் சிலருனூ ...

.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -3 ...தொடரும் .


.


.


.

.

.

Sunday, January 3, 2010

வள்ளுவர் சமணர் என்னும் மாபெரும் மடத்தனம் .

.

நொரண்டு : வள்ளுவர் சமணரா ?

நண்டு:
வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் .
இதனை மக்களிடையே
இன்னும் மக்கள்
மடையர்களாகவே நினைத்துக்கொண்டு
வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல்
எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .

சரி குறள்களை படிச்சியா ?

நொரண்டு : நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .
ஒன்னு புருஞ்சுக்க .
நாங்க எல்லாம்
பழத்தை உருச்சில்ல
ஜிரணிச்சு கொடுக்க சொல்றவுங்க .

நண்டு:
அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?

நொரண்டு :சும்மாதான் ,
திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க ,
பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு
வள்ளுவர் சமணரா ?
பதில் சரியில்லையே .

நண்டு: அதுக்குத்தான் குறள்களை படினு சென்னேன் .

நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .

நண்டு: அட அறிவுஜிவி , திருக்குறளை
விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ ,
கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக ,
1330 குறளையும் படிக்கவேண்டும் .

நொரண்டு : அவனவனுக்கு வேளையில்லையா .
ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .

நண்டு: ஆம் .

நொரண்டு : அதான பாத்தேன் ,
எங்கடா சொல்லலனு .

நண்டு: அது தான் உண்மை .

நொரண்டு :
அப்படி இல்லாது ,
எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?


நண்டு: 4 குருடர்களும் யானையும் கதைதான் .

நொரண்டு : அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான் பயன்படுத்தராங்கனு சொல்லவர ,
அது தானே?

நண்டு: உன் கருத்திலும்
உண்மை உண்டு .

நொரண்டு : சரி ,
நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் .
அதுக்கு உரை நிறையாப்பேர் எழுதியிருக்காங்களாம் .
யாரை படிக்க .

நண்டு: யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 3 உரைகளையாவது படித்தல் நலம் .

நொரண்டு : வா..வா..
ஒரு குறலே படிக்கமுடியல ..
3 உரையா ...
என்ன ஆராய்ச்சி பண்ணி
விருதா வாங்கப்போரேன் .
இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா ,
எங்குடும்பத்தையார் பாப்பா...
இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே
இவன் கேக்கக்கூடாதுனு
ப்ளான் பண்ணிட்டயா ?.
இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை
எவனும் படிக்கவும் வரமாட்டான் ,
உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .

நண்டு: அதப்பத்தி எனக்கு கவலையில்லை .
ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும்
ஓரளவிற்காவது
தெரிந்துகொள்ள முடியும் .

நொரண்டு :அப்படினா
திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?


.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -2 ...தொடரும் .


.


.


.

.

.

Friday, January 1, 2010

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் .

.

நொரண்டு :வள்ளுவர் என ஒருத்தர் இருந்தாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :திருக்குறள் என்ற பெயரில் தான் எழுதினாரா ?

நண்டு: பெயரில் என்ன இருக்கின்றது .

நொரண்டு :1330 குறள் தான் எழுதினாரா ?

நண்டு:கூடவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம் .

நொரண்டு :அப்படினா ...

நண்டு:இடைச்செருகல்கள் பல ...

நொரண்டு :புரியவில்லை .

நண்டு:பாரதியில் கூட இருப்பதாக குற்றச்சாட்டு இருக்கு தெரியுமா ?

நொரண்டு :பாரதியவிடு ...வள்ளுவருக்கு வா .

நண்டு:நிறைய இடைச்செருகல்கள் ..

நொரண்டு :எதனால் ?

நண்டு: வள்ளுவர் தனது அருமையான கருத்துக்களை எளிமையாக கூறிய மிகச்சிறந்த ஒரு
சிந்தனையாளர் .

மேலும்

'உலகின் முதல் சிந்தனையாளரும் '

இவரே.


நொரண்டு :ஓ.!!!!

நண்டு: அவரின் கருத்துக்கள்
அவரின் காலத்திலும் ,
பின்னிட்டும்
சமுதாய ஏற்றத்திற்கு
ஆதாரமாக இருப்பதாலும் , எக்காலத்திலும் எவருக்கும் ஏற்புடையதாக இருப்பதாலும் ,
குறைவில்லாத
தெளிந்த சிந்தனையுடன்
காலத்தால்
அனைத்தையும் விஞ்சி இருப்பதாலும். மூத்த குடியின்
தரமான
தரணிபோற்றும்
கருத்தாக இருந்ததாலும் .
தமிழில் இருந்ததாலும் .

நொரண்டு :இடைச்செருகல் செய்தது யார் ?

நண்டு: முதலாம் வேற்றரசுக்காலத்தினரும் ,தமிழரசு எழுச்சிககாலத்தினரும் மற்றும் அதற்குப்
பிந்தையோரும் .

நொரண்டு :சரியாகச்சொல்லவும்.

நண்டு:கி.பி.250 லிருந்து .

நொரண்டு :அப்படியெனில் வள்ளுவர் காலம் .

நண்டு:தொல்காப்பியத்திற்கும்
முந்தியது .

நொரண்டு : ஓ...ஓ.....

நண்டு:திருக்குறளை அதன் மூலத்தினின்று ஆய்ந்தால் .
சிந்துவை காணலாம் .

நொரண்டு :எப்படி ?

நண்டு:அதிகாரம் 75 ஐ படிக்க

நொரண்டு :
கல்தோன்றா மண் தோன்றா முத்த குடி யாருக்கு தேவையோ அவர்கள் பாத்துக்கட்டும்.
நீ இடைச்செருகல் செய்தது யார் ? என கூறு .

நண்டு: சரி ,
வள்ளுவரை மதவாதியாக ஆக்க மதவாதிகள் .

நொரண்டு : ஏன்
இவரே எதாவது ஒரு மத அடிப்படைவாதியாக இருந்திருக்கலாம் இல்லையா .

நண்டு:சரியான பார்வைதான் ,
ஆனால்
எந்த மதத்தை அவர் பின்பற்றியிருப்பார் என்பதற்காகத்தான்
இடைச்செருகல் செய்தது .

நொரண்டு :அவர்
எதை பின்பற்றியிருப்பார் என
நீ நினைக்கின்றாய் ?.

நண்டு:சிந்துவிற்கு முந்தைய
தமிழன் பின்பற்றிய வாழ்க்கைமுறையை .

நொரண்டு :நீ சிந்துவிற்கு போகாதே . இடைச்செருகல் செய்தது யார் ? .

நண்டு: தொகுத்தவர்கள் ...

நொரண்டு :தொகுத்தவர்களா , மதவாதியாக ஆக்க மதவாதிகளா ? குழப்பாதே .

நண்டு: தொகுத்த மதவாதிகள் .

நொரண்டு : யார் ?

நண்டு: யார் ?

நொரண்டு : அது தான் யார் ?

நண்டு: பல மதத்தவரின் இடைச்செருகல்கள்
இருந்தாலும் .
கடைசியாக
நம் கையில் கிடைத்திருப்பது
இந்து மதத்தினரின்
இடைச்செருகல்கள்
அதிகம் கொண்ட
திருக்குறள் .

நொரண்டு :எப்படி சொல்கின்றாய் ?

நண்டு:தமிழ் இலக்கிய வர்ரலாற்றை படி

நொரண்டு :சுருக்கமா சொல்லுப்பா . எங்களுக்கு அதப்பத்தியெல்லாம் தெரியவேண்டியது
அவசியமில்லை

நண்டு: அப்படினா இது புரியாது .

நொரண்டு : அதெல்லாம் முடியாது .
நீ சொல் .

நண்டு: சரி .
சமய வெறியாட்டங்கள நேரங்கிடச்சா தெரிஞ்சுக்க .
இப்ப
குறள் 543 ,
குறள் 556 மற்றும் குறள் 560
ஆகிய 3 மட்டும் படி .
அவைகள் இடைச்செருகல்கள் .

.... மேலும் இடைச்செருகல்கள் தொடரும் ...


.


.

.