Saturday, January 9, 2010

முடி வெட்டினா மூளை வளருமா ,தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .

.


நொரண்டு : தமிழ் எழுத்துச்சீர்திருத்தும் பற்றி என்ன நினைக்கற ? .

நண்டு : முடி வெட்டினா மூளை வளருமா?.

நொரண்டு : அப்ப ஏன் மொட்டை அடிக்கராங்க ?

நண்டு : மூடத்தனமுனு நீயே ஒத்துக்கர .

நொரண்டு :முட்டாள் தனமுனுஞ் சொல்லு .

நண்டு :

மொழினா என்னானு தெரிஞ்சுக்காம
தவறா புரிஞ்சுக்கிட்ட
சில முட்டாள்களின்
மூட நம்பிக்கையுனு ...

நொரண்டு :பெரியாரின் சிர்திருத்தம் ?

நண்டு :
அறிவுப்பூர்வமானது .
உன் முட்டாள்தனத்து ஏன் அய்யாவை இழுக்காத .

நொரண்டு :

இல்ல ,
இருந்தாலும்
மாற்றந்தேவை தானே,
அயல் நாடுகளில் வாழும் ...


நண்டு :

மொழிய காப்பாத்தனுமுனா
என்ன செய்யனும் தெரியுமா ?

அப்படி சொல்றவங்ககிட்ட
நான்
ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கின்றேன் .
அதுக்கு பதில் யார் சரியா செல்றாங்களே
அவங்க எழுத்துச்சீர்திருத்தம் செய்யலாமுனு சொன்னா செய்யலாம்.

நொரண்டு : கேள் .


நண்டு :

இப்பொழுது

''புதிதாக ஒரு மொழி உருவாக சாத்தியக்கூறு உண்டா ?''

நொரண்டு : ம் ...

நண்டு : பதில் சொல்லட்டும் .
அதற்கு பிறகு
நான் மொழிக்கான இலக்கணம் கூறுகின்றேன் .
அதுவரை .


நொரண்டு :அதுவரை ?.

நண்டு : இருப்பதை வளர்த்தப்பாருங்க .

நொரண்டு :இல்லைனா?

நண்டு : இல்லைனா சும்மாகிடங்க ,
ஏன்னா
நீங்க
முடிய வெட்டுனா மூளை வளரும்னு நினைக்கறீங்க .

நொரண்டு : என்ன சொல்லற

நண்டு : முடிய வெட்டுனா எங்காவது முளை வளருமா? .அப்படித்தான் இருக்கு நீங்க
சொல்லறது அதச்சொன்னேன் .

நொரண்டு : அப்ப தமிழ் ?

நண்டு :

தமிழ பாத்துக்கறதுக்கு நாங்க இருக்கோம் .

இருந்தாலும் தமிழின் மேல் கொண்டுள்ள உமது பாசத்திற்கு
உம்மை வாழ்த்துகின்றேன் .

நொரண்டு : இதுக்கும் வள்ளுவரிடம் பதில் இருக்குனு சொல்லூவியே ?

நண்டு :

சரியா சொன்ன

இருக்கு ...


.

.


.