Sunday, January 10, 2010

பொய் கூறாதீர்கள் மதவாதி்களே ...

.


நொரண்டு : மதவாதி்களின் சேட்டைகள் தாங்க முடியல வரவர .

நண்டு : ம்இம் ...

நொரண்டு : .இறைவனை நினைத்தலும், வாழ்த்துதலும் ,அவன் நெறி நின்றலும் செய்தார் வீடு
பெறுவர் எனகூறி
இன்று இளைய சமுதாயத்தை ஏமாற்றி அவர்களை மடையர்களாக்கி, மதவாதிகளாக்கி
கடைசியில் தீவிரவாதிகளாக்கி சமுதாயத்தை சீரழிக்கின்றனர் ....

நண்டு : இப்பொழுது மட்டுமல்ல எக்காலத்திலும் அவர்கள் அப்படித்தான் .

நொரண்டு :ஓ ..

நண்டு : அதற்குத்தான் வள்ளுவர்

'' பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். ''

என்ற குறளில் சூடு போடுகின்றார்

நொரண்டு :அப்படியா .

நண்டு : ஆம்


நொரண்டு : உன் கருத்துரை

நண்டு :


'' பொறிவாயில் ஐந்தவித்தான்
தான்
நீடுவாழ்வார்
என பொய் கூறாதீர்

ஒழுக்க நெறி நின்பவர்கள் தான் நீடுவாழ்வர் ''


நொரண்டு : பொருள் ..

நண்டு : நீ ஏற்கனவே மதவாதி்கள் கூற்றாக சொன்னதுதான் 'பொறிவாயில் ஐந்தவித்தான் '
என்பதற்கு விளக்கம்.

நொரண்டு :சுருக்க கூறு ..

நண்டு : ''கடவுள் வழியிலே நின்றவர்கள் நீடுவாழ்வார் என பொய் கூறாதீர் .''

நொரண்டு : அப்ப வள்ளுவர் ''பொய் கூறாதீர்கள் மதவாதி்களே '' என்கின்றார்

நண்டு : ஆம் . அதுமட்டுமல்லாமல் சமுதாயத்தை சீரழிக்காதீர்கள் என்றும் கூறுகின்றார் .


.

.

.