Friday, January 29, 2010

மரம் நட்டால் மழை வருமா ?

-மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .-


நொரண்டு : மரங்கள் நட்டால் மழை வருமா?

நண்டு :முதலில் நடப்படும் மரக்கன்றுகளில் எத்தனை மரங்களாகின்றன ? ஆயிரத்தில் ,லட்சத்தில்
...ஒன்று ....

நொரண்டு :இது வரை மரக்கன்றுகள் நடப்படுவது மட்டும் விளம்பரமாக இருப்பதால் அதைப்பற்றிய
யாருக்கும் கவலை இல்லை ....

நண்டு :அப்படியே அவைகள் வளர்ந்தாலும் உண்மையில் பயன் தராது .

நொரண்டு : எப்படி ?

நண்டு : அவைகளால் மழைச்சூழலை ஏற்படுத்த முடியாது .

நொரண்டு :ஓ....அப்படியா !!!

அப்போ... மழைநீர் சேகரிப்பு ....

நண்டு : மனிதனுக்கு நல்ல பயன்தரும் ,அவைகள் மழைக்கு உதவாது .


நொரண்டு : ஓ...!!!

நண்டு : வள்ளுவர்

''விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி. ''

என்ற குறளில் கூறுகின்றார் .

நொரண்டு : விளக்கம்

நண்டு :

மழைநீரை நிலம் சேமி்க்க
மனிதனுக்கு பயன்படும் .


நொரண்டு :சற்று விளக்கமாக

நண்டு :

மழை பொய்த்தாலும் ,
பெய்த மழை
கடலினால்
மழையினால்
நிலத்தின் கண் வீழ்ந்த வடிந்த நீரானாது
நிலத்தினுள் சென்று
நிலத்தின் கண் நின்று
நிலத்தடி நீராகி
உணவுக்கு நீராகி
பசியை ஆற்றும் .

நொரண்டு :ம்...மழை நீர் நிலத்தடி நீராகி மனிதனுக்கு பயன்படும் அப்படித்தானே .

நண்டு : அப்படியும் தான் ...மழையில்லா காலங்களில் ...

நொரண்டு :நிலத்தடி நீர் பற்றி வள்ளுவர்.

நண்டு : ஆம் ,வள்ளுவரே தான் ...


..


வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -தொடரும் ....

..


.

.