Sunday, January 3, 2010

வள்ளுவர் சமணர் என்னும் மாபெரும் மடத்தனம் .

.

நொரண்டு : வள்ளுவர் சமணரா ?

நண்டு:
வள்ளுவர் சமணர் என்பது
மாபெரும் மடத்தனம் .
இதனை மக்களிடையே
இன்னும் மக்கள்
மடையர்களாகவே நினைத்துக்கொண்டு
வரலாற்றுபார்வை மற்றும் அறிவு சிறிதும் இல்லாமல்
எப்படித்தான் எழுதிவருகின்றனரே தெரியவில்லை .

சரி குறள்களை படிச்சியா ?

நொரண்டு : நான் தான் சொன்னேன்ல ,
நீ பாட்டுக்க குறளைப்படினு நம்பரக்கொடுத்தினா .
ஒன்னு புருஞ்சுக்க .
நாங்க எல்லாம்
பழத்தை உருச்சில்ல
ஜிரணிச்சு கொடுக்க சொல்றவுங்க .

நண்டு:
அப்புறம் எதற்கு கேள்வி கேக்கற ?

நொரண்டு :சும்மாதான் ,
திருவள்ளுவர் திருவள்ளுவர் னு பேசராங்க ,
பெரிய சிலையல்லாம் வச்சிருக்காங்க அதான் .
அத விடு
வள்ளுவர் சமணரா ?
பதில் சரியில்லையே .

நண்டு: அதுக்குத்தான் குறள்களை படினு சென்னேன் .

நொரண்டு :அந்த 3 மட்டும் போதுமா .

நண்டு: அட அறிவுஜிவி , திருக்குறளை
விமர்சிக்கவோ ,
பயன்படுத்தவோ ,
கேள்விகேட்கவோ விரும்பினால் முதலில்
நீ அதனை முழுமையாக ,
1330 குறளையும் படிக்கவேண்டும் .

நொரண்டு : அவனவனுக்கு வேளையில்லையா .
ஒரு குறளை பயன்படுத்தக்கூட எல்லாத்தையும் படிக்கச்சொல்லுவபோல .

நண்டு: ஆம் .

நொரண்டு : அதான பாத்தேன் ,
எங்கடா சொல்லலனு .

நண்டு: அது தான் உண்மை .

நொரண்டு :
அப்படி இல்லாது ,
எதையும் படிக்காம ஒரு குறளை விமரிசித்தால் ,பயன்படுத்தினால் ?


நண்டு: 4 குருடர்களும் யானையும் கதைதான் .

நொரண்டு : அப்ப ,இப்போ எல்லாம் அப்படித்தான் பயன்படுத்தராங்கனு சொல்லவர ,
அது தானே?

நண்டு: உன் கருத்திலும்
உண்மை உண்டு .

நொரண்டு : சரி ,
நீ சொல்ற மாதிரியே படிக்கலாமுனு இருக்கோன் .
அதுக்கு உரை நிறையாப்பேர் எழுதியிருக்காங்களாம் .
யாரை படிக்க .

நண்டு: யாரைவேணாலும் படி . ஆனால் குறைந்தது 3 உரைகளையாவது படித்தல் நலம் .

நொரண்டு : வா..வா..
ஒரு குறலே படிக்கமுடியல ..
3 உரையா ...
என்ன ஆராய்ச்சி பண்ணி
விருதா வாங்கப்போரேன் .
இல்ல எனக்கு வேலைவெட்டித்தான் இல்லையா ,
எங்குடும்பத்தையார் பாப்பா...
இதனால் எனக்கென்ன ஆகப்போது . இனி கேள்வியே
இவன் கேக்கக்கூடாதுனு
ப்ளான் பண்ணிட்டயா ?.
இப்படி வெளியில சொல்லாத , திருக்குறளை
எவனும் படிக்கவும் வரமாட்டான் ,
உன்னையும் ஒரு மாதிரி பாப்பாங்க .

நண்டு: அதப்பத்தி எனக்கு கவலையில்லை .
ஆனால் ,
முழுமையாக படித்தவரால் மட்டுமே திருக்குறளினையும்,
திருவள்ளுவரையும்
ஓரளவிற்காவது
தெரிந்துகொள்ள முடியும் .

நொரண்டு :அப்படினா
திருக்குறளினை
முழுமையாக படித்தவர்களெல்லாம் முழுமைவாதிகளா ?


.......

வள்ளுவர் -அறியப்படவேண்டிய உண்மைகள் -2 ...தொடரும் .


.


.


.

.

.