Monday, December 21, 2009

அரிசி தமிழனின் உணவா ?

.

நண்டு: வணக்கம் நொரண்டு


நொரண்டு :ஏன் நண்டு


நண்டு: எனக்கு ஒரு சந்தேகம் ?


நொரண்டு : என்ன ?


நண்டு: அரிசி தமிழரின் உணவா ?


நொரண்டு :புரியவில்லை


நண்டு: அட ,
நமது உணவுகள் பதார்த்தங்கள் அனைத்தும்
தற்பொழுது
அரிசியினால் செய்யப்படுபவைகளே.
அரிசியில்லாமல் நமது உணவு வகைகளே இல்லை என்று கூறலாம் .
அப்படிப்பட்ட அரிசியை நாம் ஆரம்பம் தொட்டே பயன்படுத்தி வருகின்றோமா?

நொரண்டு :RICE என்ற சொல்லே அரிசி என்ற சொல்லில் இருந்து தான் வந்தது என்பதினின்று
நாம் அதற்கு உரிமைகோரலாமே ..

நண்டு: இது தவறான பார்வை .

நொரண்டு : என்ன செல்லவர்ர

நண்டு: அட ,சங்க நுற்களில் அரிசியைப்பற்றி ஒரு குறிப்பு இல்லை .
திணை போன்றவைகள் தான் குறிப்பிடப்பட்டுள்ளது .

நொரண்டு :அப்படியயேனில்
அரிசியை என்றிலிருந்து பயன்படுத்தி வந்தான் ?.

நண்டு: அது குறித்தான ஆய்வுகள் கட்டாயம் தேவையாக உள்ளது .


நொரண்டு :சரி தான் ,உனக்கு என்ன ஆச்சு ?

நண்டு: ஒன்னுமில்லை , இப்போவேல்லாம்
கம்மஞ்சோறு ,
கேப்பக்கழி ,
ராகி கூலு
எல்லாம்
இல்லாமல் போனதோடு
மட்டுமல்லாது ,
அதப்பத்தி பேசரதோ ,
சாப்டதா சொல்ரதோ கூட
கோவலமா நினைக்கப்படுவது என்பது என்னமோ
நாம் எதையோ இழந்த விட்ட மாதிரி இருந்துச்சு அதனால் தான் .

நொரண்டு :அதனால்

நண்டு: நாம் இது போன்று எத்தனை அடையாளங்களை இழந்திருக்கின்றோம்
என நினைக்கும் பொழுது
மனது கனக்கிறது .

நொரண்டு :.....

நண்டு: .......

நொரண்டு :......

.


.


.