Tuesday, May 4, 2010

என் மீதி மிச்சம் .

.

.


கவிதை ரசிக்கும்
உள்ளத்திற்கே
காதல் தெரியும்
என்பான் எஸ்ரா .
கவிதை வாசித்தேன்
என்னுள் குவிந்து
விரித்துவிட்டாள்
மச்சக்காரி
என் மிச்சக்காதலுடன்.
காதல் தீர்ந்து நானும்
காணாத தூரத்தில் அவளும் .
சன்னலை மூடி
கவிதை யெழுதி
கண்டுகொள்கின்றேன்
மீண்டும்
என் மீதி மிச்சத்தை .


.

.


.

.