Tuesday, January 6, 2009

மந்நை மந்தையாய் மடையர்களும் - சொர்க்கவாசல் திறப்பும்.


.


நொரண்டு : நீ யாரையாவது கூப்பிட்டு ...அவரை டே மடையான்னு சென்னா ...அவர் என்ன
செய்வார் ?

நண்டு : பைத்தியம் ,லுசு -னு அடிச்சி துவைச்சி ... ஏன் ...என்னாச்சு ..

நொரண்டு :ஆனா ,அவர்களைஅவர்களே நாங்கள் மடையர்கள் ,முட்டாள்கள் என கூறிக்கொண்டு திரியும்
இடத்திற்கு கூட்டிச்செல்கிறேன் வா ...

நண்டு : என்ன விளையாட்டா.. ஆச்சரியமா இருக்கே ..உண்மையாலுமா..

எங்க ? !!!..எப்போ ..? !!! .. எங்கு ?...


நொரண்டு :உலகெங்கும் உள்ளனர் ..சரி , உனக்கு அதிக அலைச்சல் வேண்டாம்
...வா,.கடைவிதிக்கு ...


நண்டு : அங்கபோய் ...


நொரண்டு :நான் காட்ற இடத்தில நீ இன்னைக்கி ராத்திரி போய் நில்லு .அங்கு மந்நை மந்தையாய் மாக்கள் நின்று கொண்டும் ,கதவு திறக்கும்போது தாங்கள் மடையர்கள் மடையர்கள் என உறுதிப்படுத்திச் செல்வதையும் காணலாம் .

நண்டு :....( நொரண்டு கூட்டிச்சென்ற இடம் ..கடைவிதியில் உள்ள பெருமாள்
கோவில்..)....

( ... இன்று சொர்க்கவாசல் திறப்பாம்.... )


நொரண்டு :உண்மையில் ,யாராவது பேச்சுவாக்கில் கூட உனக்கு அறிவிருக்கா எனக்கோட்டால் கூட
எப்படி கோபம் அனைவருக்கும் வருகிறது (வர வேண்டும்).

உலகெங்கும் ,அவரவர் வழிபாட்டு தலங்களுக்கு செல்பவர்களைப் பார்க்கும் பொழுதும் ,அது சம்பந்தமான ஊர்வலங்கள் , நிகழ்ச்சிகளில் சுற்றி திரிபவர்களை பார்க்கும்பொழுதும் ,மதத்தில் ஏதொதோ செய்பவர்களை பார்க்கும் பொழுதும் அவர்களை அவர்களே" நாங்கள் மடையர்கள் ... சுத்த மடையர்கள் ,நாங்கள முட்டாள்கள் ...அடி முட்டாள்கள் " என கூறிக்கொண்டே செல்வதாகவே நான்
உணர்கின்றேன் . உண்மையும் அது தானே..

அப்படிப்பட்ட கூட்டங்களைப் பார்த்து ....சிறிதும் சுயசிந்தனையில்லாமல்
வாழப்பழக்கப்பட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துவரும் இவர்களைப்பார்த்து .....


''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."

''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."

''ஏ ..மனிதர்களே ...திருந்துங்கள் ..."


என கூப்பாடு போட தோன்றுகிறது .

நண்டு :. ...எத்தகைய மடையர்கள் கூட்டத்தில் நாம் . ..என்ற நினைப்பில்..


...சுயசிந்தனையுடைய மனிதர்கள் கூடும் கூட்டத்திற்கு என்றாவது ஒரு நாள்
நொரண்டு கூட்டிச்செல்வார் என்ற எண்ணத்தில் .....





.