Thursday, January 8, 2009

உலக மகா சோம்பேறிகளும் - மனிதக்கழிவுகளும் ...

.


...... கருத்துரையிடும் தோழர்களே .......
......கருத்துரையிடும் முன் தாங்கள்
" பெரியாரையும் ","மார்க்சையும்" -
"கட்டாயம் " படித்திருத்தலே நலமாக இருக்கும்
என நினைக்கின்றேன் ...
விருப்பமுள்ளவர்களுக்கு நான் உதவ தயார்...
...எனது இ.மெயில் முகவரி : NORANDU.RA.AR@GMAIL.COM ...


நண்டு : உன்னை பார்க்க நேத்து ராத்திரி 10 மணிக்கு வந்தேன் ,தூங்க
போய்ட்டேனு சொன்னாங்க , எழுப்பச்சொன்னேன், தூங்க போன பிறகு எழுப்பக்கூடாதுனு செல்லிருக்கியாம் . வந்துட்டேன் ..
ஏன் சீக்கிரமா தூங்கபோற ....


நொரண்டு : சீக்கிரமாவா ..?..என்ன பேசற ...நீ....... முதலில் இயல்பான வாழ்க்கை
வாழ்வதற்க்கு தேவையான அறிவைப்பெற பழகிக்கொள் .
தூக்கம் மிகவும் அவசியமான ஒன்று . ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூங்கவேண்டும் .
அதுவும் கும்மிருட்டில் .

நண்டு : நைட் லேம் கூட இல்லாமல ..

நொரண்டு : ஆம் ... நாம் இருண்ட இடத்தில் உறங்கும்போது நமது உடலில் சில ரசாயன மாற்றங்கள் ஏற்படுகிறது .அது உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது எப்படி காற்றிலிருந்து நாம் ஆற்றல் பெறுகின்றோமோ, அதுபோல இருட்டில் உறங்கும்போதும் ஆற்றல் பெறுகின்றேம் .அந்த ஆற்றல் நமது இயக்கத்திற்கு மிகவும் அவசியமானதாகும் .

நண்டு : அப்படி தூங்கினா சோம்பேறித்தனம் தான் வரும்

நொரண்டு :சோம்பேறித்தனமுனு சொல்லாதே ...சோம்பேறித்தனம்னா என்னான்னு உனக்கு தெரியுமா ?
....

நண்டு : நீயே சொல்லு ...

நொரண்டு : மூளையை பயன்படுத்தாதது தான் சோம்பேறித்தனம் .மூளையை பயன்படுத்தாதவர்கள் தான் சோம்பேறிகள். உலகில் சோம்பேறிகள் தான் இன்று அதிகம் .சோம்பேறிகளை அதிகம் கொண்ட நிறுவனங்கள் தான் இங்கு அதிகம் .


நண்டு : நீ ஒருவர் செய்யும் வேலையை கேலி செய்கினறாய் ....

நொரண்டு : அப்படியி்ல்லை ...நான் என்றும் உழைப்பை மதிப்பவன் . ஆனால் , சிலர் செய்யும் வேலைகளைத்தான் குறிப்பிடுகின்றேன். அவர்களுடைய வேலையை நான் உழைப்பாக நினைப்பதில்லை . உழைப்பின் வகையில் ஏற்றுக்கொள்ள மாட்டேன் .உழைப்பு என்பதுஉண்மையை நோக்கி செல்வது , உண்மையில் சேர்வது ,நன்மை பயப்பது ,நலம் தருவது.

நண்டு : கூறு .....

நொரண்டு : மதசம்பந்தமான செயல்கள் செய்பவர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் அப்படிப்பட்டது தான்.
( நேரடியாகவும் இருக்கலாம் .மறைமுகமாகவும் இருக்கலாம் ).

நண்டு : புரியவில்லை ...


நொரண்டு : எங்க பூக்கடை ஆயாவ எடுத்துக்க, கோவில் தெருவில் பூ விக்குது .60 வருசமா . ஆயாவுக்கு இதுதான் தொழில் . ஆயாவிற்கு தெரிந்ததெல்லாம் பூ வாங்கறது ,கட்டறது ,விக்கறது .
இதை மேலோட்டமாகப்பார்த்தால் இது ஆயாவின் வாழ்வு சம்மந்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் .
ஆனால் ,அவரின் வாழ்வு எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரேபோக்கில் சென்றதைக்கண்டுதான் வருந்துகிறேன் .மேலும் , அவரின் மனித வளத்தை எடுத்துக்கொள்வோம் எவ்வளவு வீணாகிவிட்டது,வீணாகிக் கொண்டிருக்கிறது .இப்படித்தான் மனித வளத்தை அனைவரும் கழிவுகளாக்குகின்றனர். யாருக்கும் பிரயோசனம் இல்லாமல்.
மதங்கள் மனித வளங்களை .... எப்படியொல்லாம் கழிவுகளாக்குகின்றது பார் எவ்வளவு மனித வளங்களை ...
ஆயாகிட்ட ,என்ன சென்னாலும்.. கேட்க மறுக்கிறது .. இதவச்சித்தான் என் மகனை ஆளாக்குனேன் ..காலம் போயிருச்சி ...கடைசி காலம் ஆண்டவனுக்குனு சொல்லி...ஒய்வெடுக்க மறுக்கிறது...
பொதுவாகவே ,ஒருவர் எத்தொழிலைச்செய்தாலும் அதில் தொடர்ந்து ஒரு முன்னேற்றமும் காட்டாமல்- காணமல்- விரும்பாமல்- குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டி- காலம் தள்ள நினைப்பவர்கள்- மூளையைப்பயன்படுத்தாமல், சிந்திக்காமல் ,ஏன், எதற்கு இதைச் செய்கிறேம் , சரிதானா என்ற உணர்வே இல்லாமல் வருமானம்வருகிறது ,பொழப்புநடக்கிறது, பிரச்சனையில்லை
,இதுவே போதும் என்ற நினைப்பில் தொழில் செய்பவர்கள் அனைவரும் உலகில் மிகச்சிறந்த சோம்பேறிகளே .அவர்கள் வேலை செய்யும் இடங்களில் கட்டாயம் சுரண்டல் இருக்கும். மேலும் ,மூடநம்பிக்கைகளும், முட்டாள்தனமும் அவர்களிடம் மண்டிக்கிடக்கும். மேலும்உலகில் மிகச்சிறந்த சோம்பேறிகள் தங்களின் வேலையால் மூடநம்பிக்கையையும்,முட்டாள்தனத்தையும் உரமிட்டு வளர்க்கின்றனர் . இப்படிப்பட்டவர்களை நீ பொதுவாக பரவலக எல்லா துறைகளிலும் காணலாம். அவர்களெல்லாம்

உலகில்மிகச்சிறந்தசோம்பேறிகள் ஆவார்கள் .

இதில் மதசம்பந்தமான வேலைகள் செய்பவர்கள்

"உலக மகா சோம்பேறிகள் ".

நண்டு : ..சரி ..தூக்கத்துக்கு வா ...

நொரண்டு : தூங்கி எழும் பொழுது ஏற்படும் அயர்ச்சியானது நமது உடலை உழைப்பிற்கு தயாராக அயத்தமாக்கும் செயல் ஆகும் .அதை அதிகப்படுத்த சிறு நடை 30 நிமிடம் போட்டுப்பார் ..
அன்று முதல் உனது கையில் நீ ....

நண்டு : ... எனது கையில் நானக...
... இன்றிரவே 8 மணிநேரம் தூங்கச்செல்கிறேன் .....
....நீங்களும் தானே ...?..
....ஆமா ..நாமே தூங்கிக்கிட்டு இருந்தா
சோம்பேறிகள் இல்லா உலகை எப்ப பார்க்கறது ...





.