Friday, February 19, 2010

தண்டவாளம் கடக்கும் கண்கள்



.

தினம் தினம்
வருகி்றது
தினம் தினம்
செல்கி்றது
யாரும் யாரையும்
தவறுவதில்லை
ஒருவரை ஒருவர்
கடக்க .
தெரிந்தோ
தெரியாமலோ
கையில் ஃப்ரஷுடன்
படியில் அமர்ந்து
பேப்பர் படித்து
எதையோ தேடி
சன்னல் பார்த்து
கையத்து
சிரித்து
கைகளை நீட்டிய
முகங்கள்
முகங்களாக
அப்பிக்கொள்கிறது
மனக்குகையில்
கடந்து போகையில்.
ஏனே
இரயிலில் போக
முடியவில்லை
இன்றுவரை
என்றாவது ஒருநாள்
என்ற நினைவுடன்
அனுதினம்
தண்டவாளம்
கடக்கும் கண்கள் .

.

(இரயில், தண்டவாளம் -ஒரு குறியிடு மட்டுமே)

.

..


.