Wednesday, February 17, 2010

தேவகுமாரனை நோக்கி

.


.


முன்னோர்களின்

வடு உடல்

நிறமாய்

நீங்காத பாவமாய்

கண்கள் முழுதும்

காட்சி கலக்கமாய்

பளிங்கு செவியாய்

மடையனாய்

மூடனாய்

முட்டாளாய்

சமுதாயத்தில்

சமூகத்தில்

சாதியால்

எப்பொழுதும் எப்பொழுதும்

உடல் வெம்பி

நாக்கு உள் இழுத்து

மொழிபேசா வாய்

வெளிச்சொல்லா

பயத்தில்

தடிமனாய்

அச்சத்தில்

போதை மிதந்து

பிதற்றி

ஓலை சுவற்றுக்குள்

பெண் மீதேறி

நித்தம் நித்தம்

தவம் தவம்

தேவகுமாரனை நோக்கி.

.


.


.