Saturday, February 20, 2010

தவளைகள் உறங்கா மாரிக்காலம்



.

.


.

எதையோ வெளித்தள்ள

வெளித்தள்ளி வெடிக்கும்

ஏக்கப்பெருமுச்சு

ஊர்ந்து செல்லும் தூரம் கடந்த

நீர்மப்பெருக்கம்

எழுப்பிவிடும் மரணபீதி

எல்லை நீண்டு வரம்புதெரியா

நாக்குசுருதி

எக்களிக்கும்

மாரிக்கால

வதனசுடு

பிய்த்துக்கொண்டோடும்

சொட்டுச்சொட்டாய்

சூத்திரம்

தவிர்த்த

இயக்கமாய்

நெளிநெளியாய் சுருள்சுருளாய்

நீட்டமாய்

கோணலாய்

திடீர் திடீரென மாறிச்செல்லும்

ஒளியினுடே

சுற்றித்திரியும்

தவளைகள் உறங்கா மாரிக்காலம்.

.


.


.

.