Thursday, March 4, 2010

ஒத்துக்கொள்ளுங்கள் ...மாற்றம் வரும் ...

.

.

.

தெரிந்துகொள்ளும் ஆவலுடன் மட்டுமே இருந்துகொண்டும் மேலும் எதையும் தெரிந்துகொள்ளாமலும் , அப்படியே தெரிந்துகொண்டாலும் தெரிந்துகொண்டதிலும் தெளிவில்லாமல்தெரிந்துகொண்டதினாலும் ஏற்பட்ட மிகப்பெரிய பிழை ,தெரியாததிலும் தெரிந்ததுபோல் செயல்படவைக்கிறது.
அதனால் மிக எளிமையாக பிறரின் பேச்சு வலையிலும் ,எழுத்து வலையிலும்,பிரபலம்என்றகவர்ச்சியிலும்கபடவேசத்திலும்வீழ்ந்து
அவலப்படுகின்றோம்.இதனைப்போக்க நாம் நமக்கு இது தெரியும்,இதுதெரியாது என்பதனை முதலில்ஒத்துக்கொள்ளவேண்டும். இதற்கு நாம் நமக்கு என்ன தெரியும்,நமக்கு என்ன தெரியாது என்ற அறிவினை ளர்த்திக்கொள்ளவேண்டும்.

நோயாளிகளில் பெரும்பான்மையினர் தங்களுக்கு உள்ள நோயை உடனே ஒத்துக்கொள்ளாததால் தான் டாக்டர்களால் நோயை உடனே போக்க முடியாமல் போய்விடுகிறது என்பது பெரும்பான்மையானடாக்டர்களின் கூற்றாக உள்ளது . உதாரணமாக 10 மாத்திரைகள் எழுதிக்கொடுத்தால் 3 மாத்திரைகள் மட்டும் சாப்பிட்டு மீண்டும் அவஸ்தைப்படும் நபர்களே அதிகம் . தங்களின் உடல் நலத்திலேயே இத்தகைய போக்குடையவர்களாக இருக்கும்பொழுது எப்படி அறிவு சார்ந்த விசயத்தில் அவர்கள் முற்போக்கு தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள் ?மிகப்பெரிய சர்வே எடுத்தோமானால்100 க்கு 95சதவிதம் பேர் இப்படிப்பட்ட ஆசாமிகளாக தான் .

உடல் உபாதையை விடஅறிவு எந்த உபாதையை கொடுக்கப்போகிறது ?.
மாற்றம் வேண்டும் என்ற ஆர்வமோ,ஆசையோ அல்லது உண்மையான எண்ணமோ எதுவாக இருந்தாலும் முதலில் எதார்த்தத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் மாற்றம் முடியும் .மாற்றத்தின் முதல்படி இதுதான்.

இல்லையோல் ...இதனை முதலில் இருந்து வாசிக்கவும் .


.

.

.