Saturday, March 13, 2010

தனது தாயக பூமியை .......

.


.

நாங்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை

எங்களுக்கு பூமியே தாய் .
நாங்கள் பூமியின் ஒரு பகுதி .
பூமி எங்களின் ஒரு பகுதி .
வாசனைப்பூக்கள் எங்களின் சகோதரிகள் .
மானும்,குதிரையும் ,பருந்தும் எங்களின் சகோதரர்கள்

பாறைச்சிகரங்களும் ,புல்வெளிகளில்
ஊற்றெடுக்கும் சுனைகளும்,குதிரையின்உடல்வெப்பமும்,மனிதனும் -எல்லாம் ஒரே குடும்பம் .
நதிகள் எங்களின் சகோதரர்கள் .
எங்களுக்கு காற்று விலைமதிப்பில்லாதது .
விலங்குகள் இல்லாமல் என்ன மனிதன் ?
விலங்குகளுக்கு நேர்வது யாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும் .
பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும் .
நிலத்தின் மீது துப்பும் போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக்கொள்கிறான் .....


-1854 ல் தனது தாயகபூமியை விற்க மறுத்த செவ்விந்தியத்தலைவர் சியாட்டில் அமெரிக்க
குடியரசுத்தலைவருக்கு எழுதிய கடிதத்தி்லிருந்து .......

.

.

.


.