Tuesday, March 30, 2010

இது நாய்களின் நகரம் ...எச்சரிக்கை ...

.


.
''இவைகள் காகிதம் திங்குமாம் .
காகிதமா ? எப்படி தெரியும் ?
பேசிக்கொண்டன.
காகிதத்திற்கு என்ன செய்ய ? நீ வைத்துள்ளாயா ? ''

...........

.

.


புதிதாக குடியோறிய இடத்தில் புதிராய்ப்போகும் வழித்தடங்களில் புதிய இருட்டில் ஆங்காங்கே தெரியும் வெளிச்சத்தின் மத்தியில் நடக்கும் சுகத்தில் அந்த ஒத்தநாயைப்பார்க்கும் தூரம் வரை கால்கள் ஆர்வமாக ஆங்காங்கே உழன்றது. எந்தவித பிரக்ஞையும் இல்லாதது மாதிரி பார்த்தது அந்த
நாய் . நாய்கள் கடிக்கும் என்ற வரைமுறையில் சற்று ஒதுங்கி நகர்ந்தேன் .தனது தலையை பக்கத்து சந்தை நோக்கி திருப்பிக்கொண்டது .அதனை தாண்டி முன்னேறும்பொழுது உறுமியது .நகர்வை துரிதப்படுத்தினேன் ,துரத்தியது , ஓடினேன் ,ஓடினேன் தெரியாத வழித்தடங்களில் இரு நாய்கள் தென்படும் பொழுது வரை . அவ்விரு நாய்களும் துரத்திவந்த நாயைப்பார்த்து
உறுமியது .இனி நாய்களுக்கிடையே சண்டையிட்டுக்கொள்ளும் என எதிர்பார்த்து இயல்பாக நடந்தேன். ஆனால் ,மூன்றும் சூழ்ந்து என்னை தாக்கின. ஏனென்று தெரியவில்லை. பின் ஒரு சந்தைநோக்கி நடக்க சமிக்சை செய்தது. மூன்றுக்கும் நடுவில் நடந்தேன் .நீண்ட தூர நடைக்குப்பின் ,தூரத்தே மேலும் நாலு நாய்கள் ஒரு பெண்ணை மோப்பம் பிடித்துக்கொண்டுருந்தன .நாய்களின் மூச்சுக்காற்றின் வெம்மையில் தவித்துக்கொண்டிருந்தாள் .என்னைப்பார்த்ததும்
அவளிடமிருந்துவிலகி முறைத்து உற்றுப்பார்த்தன .ஒன்று தன்முன் காலால் என் தோள்பட்டையில் அடித்து பின் அவள் அருகில் சென்றது . இவானா ? என்றது .இல்லை போல் தலையை ஆட்டினாள்.அவைகள் கூடி ஏதோ சமிக்சைகள் செய்துகொண்டன .அவளைப்பார்த்தேன் .அவளை இழுத்துவந்து
என்னுடன் பிணைத்தது நாய்கள் .

உன் பெயரென்ன ?
லாவண்யா.
எந்த ஊர் ?
பதிலில்லை...
இங்கு என்ன செய்கின்றாய்?
பதிலில்லை...
எதற்காக இங்கு வந்தாய் ?
வரச்சொல்லியிருந்தான் .
எதுக்கு?
நான் இரவு ....
அவன் எங்கே?
தெரியவில்லை .
இதற்குமுன் இப்படி நடந்துள்ளதா உனக்கு?
வெளியே தனியாக வருவதில்லை .
இப்பமட்டும் ஏன் வந்த?
அவன் வீட்டிற்கு கூட்டிட்டு போறேனான் .
இவைகள் என்ன செய்யும் ?
தெரியவில்லை.
என்ன செய்ய ?
தப்பிக்கவேண்டும் .
எப்படி?
இவைகள் காகிதம் திங்குமாம் .
காகிதமா ? எப்படி தெரியும் ?
பேசிக்கொண்டன.
காகிதத்திற்கு என்ன செய்ய ? நீ வைத்துள்ளாயா ?

ஒரு அடர்ந்த இருட்டில் சுற்றித்திரியும் புகைகளின் மத்தியில் ஒளிரும் நியான்
விளக்கொளியில் இரண்டு நாய்கள் அமர்ந்திருந்தன . எங்களைப்பார்த்தும் ஓடிவந்த ஒன்று ஒரு வட்டமடித்து சென்றது . திடீரென நாய்களிடையே பரபரப்பு .
பலத்த காயத்துடன் ஒருவனை ஒரு நாய் தூக்கிவந்தது . இவன் தான் ,இவன் தான் என்றாள் .அமைதியாக இரு என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றேன்
.ஓடிவந்த ஒரு நாய் அவள் அருகில் சென்றது .இவனா ? என்றது .இல்லை போல் தலையை ஆட்டினாள் .அவைகள் கூடி ஏதோ சமிக்சைகள் செய்துகொண்டன .அவளைப்பார்த்தேன் .ஏதோ தவறு ,எங்கோ நடக்கிறது என்பது மட்டும் தோன்றியது . எங்கள் மூவரையும் பிணைத்தது நாய்கள் .நல்ல
திடகார்த்தமான அவன் அவளைப்பார்த்ததும் ஏதோ முணகி தலையை வேறு பக்கமாகத் திருப்பிக்கொண்டான் . நாய்கள் எங்கள் மூவரையும் பின் தொடர சமிக்சை செய்தது.

உனக்கு என்ன நடந்தது ?
எதற்கு ?
தப்பிக்க .
உண்மையாகவா?
ஆம் .
முடியுமா?
முடியும்
ஏதாவது ஐடியா உள்ளதா?
இவைகள் காகிதம் திங்குமாம் .
காகிதத்திற்கு?
உன்னிடம் பணம் இருக்கிறதா ?
இருக்கு .
அவைகள் காகிதம் தானே .

நீண்ட நேரத்திற்குப் பிறகு நாய்கள் நின்றன .ஒன்றை ஒன்று மாறிமாறி சமிக்சைகள் செய்தன.நாய்களுக்கு பசிக்க ஆரம்பித்துவிட்டன என்றாள் .ஒரு நாய் என்னருகில் வந்தது .தைரியத்தை வரவழைத்துக்கொண்டு என் வசமிருந்த காகிதங்கள் அனைத்தையும் அதன் முன் வைத்தேன் .ஒரு மாதிரியாகப்பார்த்தபடி வாங்கிச்சென்றது நாய்களின் கூட்டத்திற்கு மத்தியில் .பிறகு இரண்டு நாய்கள் என்னையையும் ,அவளையும் சோதனை செய்தது .எனது பாக்கெட்டிலிருந்த விசாவைஎடுத்துசிரித்துக்கொண்டன அவளிடமிருந்த காகிதங்கள்அனைத்தையும் பிடுங்கிக்கொண்டன .பின் போகலாம் என்பது போன்று சமிக்சை செய்தது .வாருங்கள் செல்லலாம் என்றேன் .அவர்கள் நாய்களை உற்றுப்பார்த்து தயங்கினர் .இருவரின் கைகளையும் பிடித்து இழுத்து நடந்தேன் .நாய்கள்
எதிர்திசையில் நகர ஆரம்பித்தன .

எங்கோ ஓர் நாய் ஊளையிடும் சப்தம் கேட்டது .சிலர் ஓடும் சத்தமும் ,சில வினோதக்குரல்களும் .நாய்களுக்கு மீண்டும் பசியெடுத்திருக்க வேண்டும் .
இங்கு யாரும் இரவில் நடமாடவேண்டாம் .
இது நாய்களின் நகரம் ...எச்சரிக்கை ... என உரக்க மனதில் கூறிக்கொண்டு ,கதவைத்தொடும் வரை கால்கள் .


.


.
.